ஜம்மு காஷ்மீர்: கோடையில் சுற்றுலா பயணிகளை அவதிப்படுத்தும் பனி - என்ன நடக்கிறது அங்கே?

பனிப்பொழிவும் மழையும் இப்போது ஜம்மு காஷ்மீரை ஆட்டிப்படைக்கும் காரணிகளாக இருக்கிறது. சில இடங்களில் பனிச் சரிவு ஏற்படலாம் என பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர்: சுற்றுலா பயணிகளை அவதிப்படுத்தும் பனி - என்ன நடக்கிறது அங்கே?
ஜம்மு காஷ்மீர்: சுற்றுலா பயணிகளை அவதிப்படுத்தும் பனி - என்ன நடக்கிறது அங்கே?Twitter
Published on

கோடைக்காலத்திலும் இந்தியாவின் பல இடங்களில் குறிப்பாக வட மாநிலங்களில் பனிப்பொழிவு காணப்படுகிறது.

இமயமலை அடிவாரப்பகுதிகளில் பொதுவாகவே குளிர் அதிகமாக இருக்கும். ஆனால் கோடைக்காலத்தில் பனிப்பொழிவு குறைந்து ஓரளவு சாதாரணமான நிலை நிலவும்.

இந்த ஆண்டு நிலவும் திடீர் பனிப்பொழிவில் காஷ்மீர் பாதிக்கப்பட்டுள்ளது. மே மாதம் வந்தும் மக்கள் டிசம்பர் மாதத்தில் இருப்பது போலவே உணர்வதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

பஹல்காம், குல்மார்க் மற்றும் சோனாமார்க் ஆகிய இடங்களில் வழக்கத்துக்கு மாறாக பனிப்பொழிவு ஏற்பட்டிருக்கிறது.

காஷ்மீர் பள்ளத்தாக்கில் மட்டுமல்லாமல் உயரமான பகுதிகளான கிஷ்த்வார், தோடா மற்றும் ரம்பனிலும் புதிதாக பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் ரம்பனில் அனைத்து பள்ளிகளும் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளனர்.

அந்த மாநிலத்தில் வசிக்கும் நாடோடி மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியிருக்கிறது.

சுற்றுலாப்பயணிகளும் சரியான போக்குவரத்து வசதிகள் இல்லாமல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கக்கூடிய மணாலியிலும் பனிப்பொழிவு அதிகரித்திருக்கிறது.

பல வாகனங்கள் பனியால் சேதமடைந்திருக்கின்றன. ஜம்மு காஷ்மீர் மக்கள் குளிருக்கும் பழக்கப்பட்டவர்கள் என்றாலும் கோடைக்காலத்துக்கான இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர்: சுற்றுலா பயணிகளை அவதிப்படுத்தும் பனி - என்ன நடக்கிறது அங்கே?
தாஜ்மஹால் : உலக அதிசயத்தில் ஒரு இரவைக் கழிக்கலாம் - என்ன செய்யவேண்டும்?

பனிப்பொழிவும் மழையும் இப்போது ஜம்மு காஷ்மீரை ஆட்டிப்படைக்கும் காரணிகளாக இருக்கிறது. சில இடங்களில் பனிச் சரிவு ஏற்படலாம் என பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

கிஷ்த்வார், தோடா மற்றும் ரம்பன் ஆகிய மேல்பகுதியில் உள்ள ஊர்களில் ஒரே நாளில் ஏற்பட்ட பனிப்பொழிவின் விளைவாக குளிர் அதிகரித்துவிட்டது. கீழ்மட்ட நகரங்களில் இடி மின்னலுடன் மழைப்பொழிவும் அதிகரித்துள்ளது.

குங்குமப்பூ முதல் ஆப்பிள் வரை பலவிதமான பழங்களும் பயிர்களும் சேதமடைந்திருப்பதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளது.

ஜம்மு காஷ்மீர்: சுற்றுலா பயணிகளை அவதிப்படுத்தும் பனி - என்ன நடக்கிறது அங்கே?
ரிஷப் பண்ட் முதல் ஷ்ரேயஸ் ஐயர் வரை - ஐபிஎல் 2023ஐ மிஸ் செய்யும் வீரர்கள் யார் யார்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com