திருட்டுத்தனமாக மனைவி பெயரை சேர்த்து 10 ஆண்டுகளாக இரட்டை சம்பளம் வாங்கிய ஊழியர் - எங்கே?

ராதாபல்லவ் தன் மனைவியின் பெயரையும் நிறுவனத்தின் சம்பளப்பட்டியலில் சேர்த்துள்ளார். ஆனால் அவரது மனைவி அந்த நிறுவனத்தில் பணியாற்றவில்லை.
திருட்டுத்தனமாக மனைவி பெயரை சேர்த்து 10 ஆண்டுகளாக இரட்டை சம்பளம் வாங்கிய ஊழியர் - எங்கே?
திருட்டுத்தனமாக மனைவி பெயரை சேர்த்து 10 ஆண்டுகளாக இரட்டை சம்பளம் வாங்கிய ஊழியர் - எங்கே?canva (rep)

பத்து ஆண்டுகளாக தான் பணிபுரியும் நிறுவனத்தின் சம்பளப் பட்டியலில் தன் மனைவியின் பெயரையும் சேர்த்து அவருடைய ஊதியத்தையும் பெற்று வந்துள்ளார் டெல்லியை சேர்ந்த நபர் ஒருவர்.

நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் பலவிதமாக பணம் கையாடல்களில் ஈடுபடுவதை கேள்விப்பட்டிருப்போம். இங்கும் ஒருவர் நூதமான முறையில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

டெல்லியை சேர்ந்த மேன்பவர் க்ரூப் சர்விசஸ் பிரைவேட் லிமிட்டட் என்ற தனியார் நிறுவனத்தில் தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது

இந்த நிறுவனம் மற்ற நிறுவனங்களுக்கு ஊழியர்களை பெற்று தரும் நிறுவனமாகும். இங்கு ராதாபல்லவ் நாத் என்பவர் கடந்த 2008 முதல் பணியாற்றி வருகிறார்.

பணியில் சேர்ந்த போது, பொருளாதார துறையில் துணை மேலாளராக இருந்தவர், காலப்போக்கில் பதவி உயர்வு பெற்று மேலாளரானார்.

நிறுவனம், முக்கியமான மூன்று பேரிடம் மட்டுமே மாதச் சம்பளம் மற்றும் reimbursement விவரங்கள் அடங்கிய டேட்டாக்களை அணுகும் அனுமதியை வழங்கியுள்ளது. எச் ஆர், எச் ஆர் தலைமை அதிகாரி மற்றும் ராதாபல்லவ் நாத்

இதனை பயன்படுத்தி ராதாபல்லவ் தன் மனைவியின் பெயரையும் நிறுவனத்தின் சம்பளப்பட்டியலில் சேர்த்துள்ளார். ஆனால் அவரது மனைவி அந்த நிறுவனத்தில் பணியாற்றவில்லை.

திருட்டுத்தனமாக மனைவி பெயரை சேர்த்து 10 ஆண்டுகளாக இரட்டை சம்பளம் வாங்கிய ஊழியர் - எங்கே?
Paytm ஸ்கேனரை வைத்து வழக்கறிஞர்களிடம் லஞ்சம் வாங்கிய டவாலி - எங்கே?

புதிதாக இணைந்தவர்கள், நிறுவனத்தை விட்டு வெளியேறியவர்கள், பணிபுரியும் ஊழியர்களின் வருகை போன்றவற்றை ஊதிய விற்பனையாளரிடம் மாதாந்திர ஊதியப் பதிவேடு தயாரிக்க ராதாபல்லவ் நாத் தான் விவரங்களை வழங்குவார்.

இவர்களுக்கான சம்பள விவரம் தயாரான பிறகு எச் ஆர், எச் ஆர் தலைமை அதிகாரி ஆகியோருக்கு இறுதிப்பட்டியல் அனுப்பப்படும். இவர்கள் சரி பார்த்த பிறகு, ஊதியத்தை பட்டுவாடா செய்யும் பொறுப்பு மீண்டும் ராதாபல்லவ் நாத்திடமே வரும்.

இந்த தருணத்தில் தான் ராதாபல்லவ் நாத் தன் மனைவியின் பெயரையும் இணைத்து விவரங்களை வங்கிக்கு அனுப்பியுள்ளார்.

கிட்ட தட்ட பத்து ஆண்டுகளாக இதனை செய்து வந்துள்ளார் ராதாபல்லவ் நாத். கோடிக்கணக்கில் பணம் திருடப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் தான் இவரது பணம் கையாடல் விஷயத்தை நிறுவனம் கண்டறிந்துள்ளது. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

இதனையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

திருட்டுத்தனமாக மனைவி பெயரை சேர்த்து 10 ஆண்டுகளாக இரட்டை சம்பளம் வாங்கிய ஊழியர் - எங்கே?
மத்திய பிரதேசம்: லஞ்சமாக வாங்கிய பணத்தை வாயில் போட்டு விழுங்கிய அரசு அதிகாரி | Viral Video

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com