ராஜஸ்தான்: வெண்மை வழியும் நிலவு நிலம் - எப்படி உருவானது?

இந்த ஊரின் குப்பை கொட்டும் இடம் தான் இந்த பெயருக்கு காராணம். அந்த குப்பைக் கொட்டும் இடத்தை அடைந்தால் ஏதோ காஷ்மிரில் பனிமலைகளுக்கு நடுவில் இருப்பதுத் தோன்றும்.
ராஜஸ்தான்: வெண்மை வழியும் நிலவு நிலம் - எப்படி உருவானது?
ராஜஸ்தான்: வெண்மை வழியும் நிலவு நிலம் - எப்படி உருவானது?Twitter

ராஜஸ்தானின் தலைநகரான ஜெய்பூர் பின்க் நகரம் என அழைக்கப்படுவதை அறிவோம். அங்கிருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் கிஷான்கர் என்ற சிறிய தொழில்நகரம் அமைந்துள்ளது.

இந்த நகரம் மார்பில் தயாரிப்பு தொழிலுக்காக பெயர்பெற்றது. இந்த நகருக்குள் நுழையும் போது பொலிவான மார்பில்களைக் அடுக்கி வைத்து விற்பனை செய்யும் கடைகளைப் பார்க்க முடியும்.

மார்பிலால் அலங்கரிக்கப்பட்ட இந்த நகரம் தான் ராஜஸ்தானின் நிலவு நிலம் என அழைக்கப்படுகிறது. ஏன்? எப்படி இந்த பெயர் வந்தது என்பதைப்பார்க்கலாம்.

நிலவு நிலம் என அழைக்கப்பட இந்த நகரின் தரை மாயாஜாலமாக ஒளிரும் என நினைக்க வேண்டாம். இங்குள்ள குப்பை கொட்டும் இடத்தை முன்னிட்டே இந்த நகருக்கு இந்தப் பெயர் கிடைத்துள்ளது.

அந்த குப்பைக் கொட்டும் இடத்தை அடைந்தால் ஏதோ காஷ்மிரில் பனிமலைகளுக்கு நடுவில் இருப்பதுத் தோன்றும். அப்படி வெண்மை நிறைந்த வெளி. அத்தனையும் மார்பில் தயாரிக்கும் போது உருவாகும் கழிவுகள்.

இந்த நகரத்தில் அதிக அளவில் மார்பில் கழிவுகள் சேர்ந்ததால் RICCO மற்றும் கிஷன்கர் மார்பிள் அசோசியேஷன் இந்த குப்பைகளுக்கு ஒருவழிசெய்ய நினைத்தனர்.

ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்படுவது நகரையே மாசாக்கியது. தூய்மையற்ற இடமாக கிஷான்கர் மாறுவதைத்தடுக்க எல்லா குப்பையையும் ஒரே இடத்தில் கொட்ட முடிவு செய்தனர்.

ராஜஸ்தான்: வெண்மை வழியும் நிலவு நிலம் - எப்படி உருவானது?
ஏமன் : வேற்றுகிரகம் போல தோற்றமளிக்கும் அதிசய தீவு பற்றி தெரியுமா?

அப்படி கொட்டப்பட்ட குப்பைகள் இப்போது வெள்ளை மணலால் ஆன நிலத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த பகுதிக்கு நாம் செல்லும்போது ஏதோ வேற்றுகிரகத்தில் இருப்பது போல உணருவோம். அதனால் இது நிலவு நிலம்.

இத்தனை அழகான காட்சிகளை வழங்கக்கூடிய இடமாக இது மாறும் என நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்! ஆங்காங்கே ஏரிகளாக தண்ணீர் தேங்கியிருப்பது கூடுதல் சிறப்பு

ராஜஸ்தான்: வெண்மை வழியும் நிலவு நிலம் - எப்படி உருவானது?
காஷ்மீர் : 5.9 மில்லியன் டன் லித்தியம் - இந்தியாவின் பொருளாதாரமே வேற லெவலுக்கு மாறுமா?

இப்போது இன்ஸ்டாகிராமில் ட்ராவல் இன்ஃப்ளூயன்சர்கள் வளர்சிக்கு பிறகு இந்த இடம் சுற்றுலாத்தலமாக பார்க்கப்படுகிறது. புகைப்படம் எடுக்கவும், ரீல்ஸ் செய்யவும் இங்கு இளைஞர்கள் குவிகின்றனர்.

காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சுற்றுலா பயணிகளுக்காக இந்த இடம் திறக்கப்படுகிறது. உங்கள் ராஜஸ்தான் ட்ரிப்பில் இந்த பகுதியையும் சேர்த்துக்கொள்ளுங்கள்!

ராஜஸ்தான்: வெண்மை வழியும் நிலவு நிலம் - எப்படி உருவானது?
நிலவு சுற்றுலா முதல் காண்டாமிருக வேட்டை வரை : பணக்காரர்களுக்கு மட்டுமான 5 சாகசங்கள் எவை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com