ஒடிசா ரயில் விபத்து : தமிழ்நாட்டு பயணிகளின் நிலை என்ன?

ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில், கொல்கத்தாவில் இருந்து தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 101 பேர் முன்பதிவு செய்துள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பது குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
ஒடிசா ரயில் விபத்து : தமிழ்நாட்டு பயணிகளின் நிலை என்ன?
ஒடிசா ரயில் விபத்து : தமிழ்நாட்டு பயணிகளின் நிலை என்ன?Twitter
Published on

ஒடிசா மாநிலத்தில் இரண்டு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது.

பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே நேற்று இரவு 7.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது. தகவல்களின்படி, கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் என இரண்டு ரயில்களும் ஒரே பாதையில் வந்ததால், நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ரயில்வே தரப்பில் கூறப்படுகிறது.

விபத்தில் 280 பேர் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ஒடிசா ரயில் விபத்து மீட்புப் பணிகள் மற்றும் கள நிலவரம் குறித்து அம்மாநில தலைமை செயலாளர் பிரதீப் ஜெனாவிடம் காணொலி காட்சி மூலம் கேட்டறிந்தார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் இழப்பீடும், படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இது தவிர அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ், சிவசங்கர் உள்ளிட்டோர் ஒடிசா நோக்கி விரைந்துள்ளனர்.

ஒடிசா ரயில் விபத்து : தமிழ்நாட்டு பயணிகளின் நிலை என்ன?
ஒடிசா: பொதுவெளியில் கொல்லப்பட்ட அமைச்சர் நபா தாஸ் - சட்டமன்றத்திலேயே பணக்காரரான இவர் யார்?

தற்போது அதில் பயணித்த தமிழ்நாட்டு பயணிகளின் நிலை குறித்து பலரும் விசாரித்து வருகின்றனர்.

ஒடிசாவில் விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில், கொல்கத்தாவில் இருந்து தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் 101 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

அதில் 17 - பேர் பயணம் மேற்கொள்ளவில்லை, 53 பேர் பாதுகாப்பாக உள்ளனர், 14 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அதில் 9 பேரை மட்டும் தொடர்புகொள்ள முடியவில்லை என சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் தகவல் தெரிவித்துள்ளார்.

ஒடிசா ரயில் விபத்து : தமிழ்நாட்டு பயணிகளின் நிலை என்ன?
குஜராத் மோர்பி பாலம் இடிந்து விபத்து: இந்தியாவில் நடந்த 6 பயங்கர பால விபத்துகள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com