பஞ்சாப்: ஒரே காவல்துறை பதவியில் இருக்கும் தந்தை - மகள்! ஒரு நெகிழ்ச்சி கதை

சம்கவுர் சிங் பஞ்சாப் காவல்துறையில் கான்ஸ்டபிளாக இணைந்து 27 ஆண்டுகளாக பணியாற்றி இருக்கிறார். படிப்படியாக உயர்ந்து இன்று சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார். அவரது மகள் லவ்லீன் கவுர் நேரடியாக தேர்வெழுதி சப்-இன்ஸ்பெக்டராக காவல்துறையில் இணைகிறார்.
பஞ்சாப்: ஒரே காவல்துறை பதவியில் இருக்கும் தந்தை - மகள்! ஒரு நெகிழ்சிகதை
பஞ்சாப்: ஒரே காவல்துறை பதவியில் இருக்கும் தந்தை - மகள்! ஒரு நெகிழ்சிகதைTwitter
Published on

பஞ்சாப் காலவல்துறையில் தந்தையும் மகளும் ஒரே பதவியில் பணியாற்றிவது நாட்டின் கவனத்தை ஈர்த்துள்ளது.

பொதுவாக காவலர், வக்கீல், ஆசிரியர் போன்ற தொழில்களை குடும்பமாக செய்பவர்களைப் பார்த்திருப்போம். அப்படிதான் தனது மகளும் காவல்துறையில் இணைந்தது குறித்து பெருமைகொள்கிறார் சம்கவுர் சிங் என்ற பஞ்சாப் காவல்துறை சப் - இன்ஸ்பெக்டர்.

சம்கவுர் சிங் பஞ்சாப் காவல்துறையில் கான்ஸ்டபிளாக இணைந்து 27 ஆண்டுகளாக பணியாற்றி இருக்கிறார். படிப்படியாக உயர்ந்து இன்று சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுகிறார்.

அவரது மகள் லவ்லீன் கவுர் நேரடியாக தேர்வெழுதி சப்-இன்ஸ்பெக்டராக காவல்துறையில் இணைகிறார்.

என்னதான் தான் அப்பாவுக்கு இணையான பதவியில் வேலையில் சேர்ந்தாலும் என்றும் அப்பா தான் சீனியர் எனக் கூறுகிறார் லவ்லீன்.

பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள ரெசல் கிராமத்தைச் சேர்ந்த லவ்லீனுக்கு காவல்துறையில் பணியாற்றுவதுதான் கனவாக இருந்திருக்கிறது. ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற கனவுடன் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருகிறார்.

பஞ்சாப்: ஒரே காவல்துறை பதவியில் இருக்கும் தந்தை - மகள்! ஒரு நெகிழ்சிகதை
காவல்துறை : உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற ஒரு இந்திய மாநிலம் - என்ன சாதித்து?

சப்-இன்ஸ்பெக்டர் வேலையில் சேர்ந்தாலும் IPS ஆகும் முயற்சியை கைவிடப்போவதில்லை என உறுதியாகக் கூறுகிறார்.

"என் குழந்தைகள் பஞ்சாப் காவல்துறையில் பணியாற்ற வேண்டும் என நான் விரும்பினேன். காவல்துறை பணி என்பது 24 மணிநேர வேலை. பெண்கள் சமூகத்துக்கு பணியாற்ற இது சிறந்த வாய்ப்பு" என்கிறார் சம்கவுர் சிங்.

பஞ்சாப்: ஒரே காவல்துறை பதவியில் இருக்கும் தந்தை - மகள்! ஒரு நெகிழ்சிகதை
பல கோடி சொத்து வைத்துள்ள வைர வியாபாரியின் 8 வயது மகள் துறவறம் - தீட்சை பெற என்ன காரணம்?

தன்னைப் போல அதிக பெண்கள் காவல் துறையில் பணியாற்ற முன் வரவேண்டும் எனக் கூறியிருக்கிறார் லவ்லீன் கவுர்.

காவல்துறை பணி கடினமான பணி என்றாலும் பெண்கள் பங்கேற்க அதிகமாக முன்வரவேண்டும். அதிக அளவில் ஐபிஎஸ் அதிகாரிகளாகவேண்டும் என்கிறார் லவ்லீன்.

இப்போது தந்தையும் மகளும் காலையில் ஒன்றாக வேலைக்கு சென்று திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

பஞ்சாப்: ஒரே காவல்துறை பதவியில் இருக்கும் தந்தை - மகள்! ஒரு நெகிழ்சிகதை
சொந்த பெற்றொரிடம் ”மகள் வேலை” : மாதம் 47,000 ரூபாய் சம்பாதிக்கும் இளம்பெண் - என்ன காரணம்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com