கன்னித்தன்மை சோதனையில் தோற்றதால் மணப்பெண்ணுக்கு ரூ.10 லட்சம் அபராதம் : என்ன நடந்தது?

அந்தப் பெண் திருமணத்திற்கு முன்பு தனது பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதும், இது குறித்துக் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் தற்போது விசாரணையில் உள்ளதும் தெரியவந்துள்ளது.
Bride
BrideTwitter
Published on

கன்னித்தன்மை சோதனையில் தோல்வியுற்றதால் கணவர் குடும்பத்தினரால் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதுடன் பெண் வீட்டாருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறி உள்ளது.

நாட்டின் பல்வேறு இடங்களில் இன்றும் பெண்களின் கன்னித்தன்மையை சோதிக்கும் முறை நடைபெற்று வருகிறது. ஒரு பெண் கன்னித்தன்மையுடன் உள்ளாரா என்பதை அறிந்து கொள்ள virginity test செய்யப்படுகிறது

ராஜஸ்தானில் உள்ள பில்வாரா மாவட்டத்தில் ஒரு பெண்ணிற்குத் திருமணத்திற்கு பிந்தைய சடங்கில் இவ்வாறு கன்னித்தன்மையை சோதித்துப் பார்த்துள்ளனர்.

Marriage
Marriage NewsSense

கன்னித்தன்மை சோதனை கட்டாயம்

பகூர் பகுதியில் வசிக்கும் பழங்குடியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு கடந்த மே மாதம் 11-ம் தேதி திருமணம் நடைபெற்றுள்ளது. அந்த சமூக வழக்கப்படி திருமணம் ஆன முதல் நாளில் பெண்கள் கட்டாயம் இந்த கன்னித்தன்மை சோதனையை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்படுகிறது.

அப்படி நடத்தப்பட்ட சடங்கில் மணப்பெண் கன்னித்தன்மையுடன் உள்ளாரா என்று சோதனை செய்கையில் பெண் கன்னித்தன்மையற்றவர் என்று உறுதியாகியுள்ளது. இதனால் பெண்ணின் குடும்பத்தாரிடம் மாப்பிள்ளை வீட்டார், பத்து லட்சம் இழப்பீடு தொகையாகக் கேட்டுள்ளனர்.

Bride
சாதி மறுப்பு திருமணம் : சட்டரீதியாக பாதுகாத்துக் கொள்வது எப்படி?
Marriage (Rep)
Marriage (Rep)Pexels

பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மணப்பெண்

இதனையடுத்து அந்த பெண்ணை கணவர் குடும்பத்தார் அடித்துத் துன்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. பஞ்சாயத்தில் முன் நிறுத்தி அவருடைய குடும்பத்தாருக்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

அப்போது அந்தப் பெண் திருமணத்திற்கு முன்பு தனது பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்பதும், இது குறித்துக் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் தற்போது விசாரணையில் உள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

IPC பிரிவு 498A (சட்டவிரோதமான கோரிக்கையை நிறைவேற்ற ஒரு பெண்ணை வற்புறுத்துதல்), 384 (பணம் பறித்தல்), 509 (ஒரு பெண்ணின் நாகரீகத்தை அவமதித்தல்), மற்றும் 120B (குற்றச் சதி) ஆகியவற்றின் கீழ் மாமியார் மீது பகூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Bride
ஐந்தாவது திருமணம் செய்ய முயன்ற அப்பா; மணப்பெண்ணை காப்பாற்றிய குழந்தைகள்- அதிர்ச்சி சம்பவம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com