ஆந்திரா : திருமணம் செய்ய மறுத்த காதலியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த நபர் - நடந்தது என்ன?

காவ்யாவின் பெற்றோர் திருமணத்தை மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் ஒரு நாட்டுத்துப்பாக்கியை வாங்கி காவ்யாவைச் சுட்டதுடன் அங்கிருந்து சில தூரம் ஓடிச் சென்று தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கொலை
கொலைTwitter
Published on

ஆந்திரா மாநிலம் நெல்லூரில் உள்ள தடிபர்தி கிராமத்தில் திருமணம் செய்து கொள்ள மறுத்த பெண்ணை தொழில் நுட்ப வல்லுநர் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணை சுட்ட அவர் சில தூரம் ஓடிச் சென்று தன்னையும் சுட்டுக் கொண்டு மரணமடைந்துள்ளார்.

காவ்யா ரெட்டி மற்றும் சுரேஷ் ரெட்டி ஆகிய இருவரும் ஒரே கிராமத்தைச் சேர்ந்தவர்கள். மென்பொருள் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணிபுரிந்து வந்திருக்கின்றனர். சுரேஷ் பெங்களூரிலும் காவ்யா புனேவிலும் உள்ள நிறுவனங்களில் பணியாற்றும் சூழலில் கோவிட் காரணமாகக் கடந்த ஒரு வருட காலமாக இருவரும் இருவரும் வீட்டிலிருந்து வேலை செய்துள்ளனர்.

கொலை
Travel : ஆல் இந்தியா Road Trip செல்லும் ஜெர்மன் ஷெப்பர்ட்


நெல்லூர் எஸ்.பி விஜய் ராவோ கூறியதன் படி, சுரேஷ் காவ்யாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதனை அவரிடம் தெரிவித்து அடிக்கடி கால் செய்வது, மெஸ்ஸேஜ் செய்வது எனத் தொந்தரவு செய்து வந்துள்ளார். கடந்த மாதத்தில் ஒரு நாள் சுரேஷ் தனது பெற்றோர்களுடன் சென்று காவ்யாவை திருமணம் செய்து கொள்ளக் கேட்டிருக்கிறார். ஆனால் பல காரணங்களுக்காக காவ்யாவின் குடும்பத்தினர் திருமணத்துக்கு மறுத்துள்ளனர்.

கடந்த திங்கள் கிழமை (09.05.2022) அன்று மாலை 3 மணி அளவில் துப்பாக்கி ஒன்றுடன் காவ்யாவின் வீட்டிற்குள் நுழைந்திருக்கிறார். அங்கு காவ்யாவுடன் அவரது சகோதரியும் இருந்துள்ளார். அப்போது காவ்யாவைச் சுட்டுக் கொன்றிருக்கிறார். அவருக்கு துப்பாக்கி எப்படிக் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேதப் பரிசோதனை முடிவுகள் வந்த பின்னர் இதுகுறித்து கூடுதல் தகவல் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார் விஜய் ராவோ.

கொலை
Google Play store : மே 11 முதல் கால் ரெக்கார்டிங் செயலிகளுக்கு தடை - காரணம் என்ன?

அட்மகுரு டி.எஸ்.பி கே.வெங்கடேஷ்வர ராவோ இது குறித்துக் கூறும் போது, சுரேஷ் பயன்படுத்திய ஆயுதம் ஒரு நாட்டுத்துப்பாக்கி. சுரேஷ் மற்றும் காவ்யா இருவரும் உறவிலிருந்துள்ளனர். ஆனால் கடன் பிரச்னை காரணமாக காவ்யாவின் பெற்றோர் திருமணத்தை மறுத்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் ஒரு நாட்டுத்துப்பாக்கியை வாங்கி காவ்யாவைச் சுட்டதுடன் அங்கிருந்து சில தூரம் ஓடிச் சென்று தானும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஆனால் எஸ்.பி விஜய் ராவோ சுரேஷ் ஒருதலையாகக் காதலித்ததாகக் கூறியது குறிப்பிடத்தக்கது.

கொலை
தகிக்கும் இலங்கை : அடித்து நொறுக்கி, தீக்கிரையாக்கப்படும் ராஜபக்சே வீடுகள் - விரிவான தகவல்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com