இந்திய உணவான பக்கோடாவுக்கும் முகலாயர்களும் என்ன தொடர்பு? ஒரு வரலாற்று பார்வை

முகலாய உணவுகளில் தொடங்கி தற்போது இந்திய உணவு கலாச்சாரம், திருவிழாக்கள் மற்றும் மழைக்கால சுவையான உணவுகளில் ஒரு பகுதியாக பக்கோடா மாறிவிட்டது.
இந்திய உணவான பக்கோடாவுக்கும் முகலாயர்களும் என்ன தொடர்பு? ஒரு வரலாற்று பார்வை
இந்திய உணவான பக்கோடாவுக்கும் முகலாயர்களும் என்ன தொடர்பு? ஒரு வரலாற்று பார்வைTwitter
Published on

மழைக்காலங்களில் நம்மை கொஞ்சம் சந்தோஷப்படுத்த டீ, காபி போன்ற பானங்களுடன் பக்கோடாவும் இணைந்து விட்டால் அந்த தருணம் மிக அழகாக செல்லும். சூடானா டீ மற்றும் பக்கோடாவுக்கு ஈடு இணை எதுவும் இல்லை என அடித்து கூறுபவர்களும் உண்டு .

இவ்வாறு பலரது உணவு பட்டியலில் முக்கிய பங்கு வகிக்கும் பக்கோடா பற்றிய அறிய தகவல்கள் உங்களுக்காக.

பக்கோடாக்களின் வரலாறு

பக்கோடாக்களின் வரலாற்றை நாம் கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால் தமிழ் சங்க இலக்கியங்களில் வறுத்த உருண்டைகள் பற்றிய குறிப்புகள் உள்ளது.

வினீத்பாட்டியா எழுதிய ரசோய் என்ற புத்தகத்தில் பக்கோடா முதலில் பரிகா என்ற பெயரில் அழைக்கப்பட்டன.

அதே போல் அவற்றின் செய்முறையும் வித்யாசமாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது.அதாவது பக்கோடா செய்ய வறுத்த காய்கறிகள் மற்றும் உளுந்து மாவு பயன்படுத்தப்பட்டதாக அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

முகலாயர்கள் காலத்தில் மேம்பட்ட பக்கோடா

முகலாயர்கள் இந்தியாவை ஆளும் போது சில புதுமையான உணவு பழக்க வழக்கங்களை உள்ளே கொண்டு வந்தனர். அது வரை வெறும் சைவ உணவு போல் இருந்த பக்கோடா அதன் பின்னர் முட்டை பக்கோடா, மட்டன் பக்கோடா, சிக்கன் பக்கோடா போன்ற பல்வேறு வகையான பக்கோடாக்களை உருவாக்கினர். முன்பு அவை 'பக்காவட்' என்று அழைக்கப்பட்ட நிலையில், பின்னர் இந்த வறுத்த பஜ்ஜிகள் ' பகோரா' என்று அழைக்கப்பட்டன.

பக்காவட் என்பது சமைத்தவை என்று பொருள்படும். 16 ஆம் நூற்றாண்டில் இந்தியாவில் உருளைக்கிழங்கு புழக்கத்திற்கு வருகிறது. ஆகவே அப்போது இந்தியாவை ஆட்சி புரிந்த போர்த்துகீசியர்களால் உருளைக்கிழங்கு-வெங்காய பொரியல்களை தற்போது நாம் சாப்பிடும் பக்கோடாவை அறிமுகப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்திய உணவான பக்கோடாவுக்கும் முகலாயர்களும் என்ன தொடர்பு? ஒரு வரலாற்று பார்வை
Taj Mahal : கருப்பு தாஜ்மஹால் கட்ட விரும்பினாரா ஷாஜகான்? - ஓர் இருண்ட வரலாறு

பகோடாக்கள் இந்திய சமையல் மரபுகளில் ஆழமாக வேரூன்றிய வளமான வரலாற்றைக் கொண்டுள்ளது.

முகலாய உணவுகளில் தொடங்கி தற்போது இந்திய உணவு கலாச்சாரம், திருவிழாக்கள் மற்றும் மழைக்கால சுவையான உணவுகளில் ஒரு பகுதியாக பக்கோடா மாறிவிட்டது.

நம்தமிழகத்தை பொறுத்தவரை மழைக்காலங்களில் இளையராஜா பாட்டு... சூடான டீ ஒரு பொட்டலாம் பக்கோடா அப்போது அந்த மழைக்காலம் வசந்த காலமாகும். அப்புறம் உங்களுக்கு பிடித்த பக்கோடா என்ன ?

இந்திய உணவான பக்கோடாவுக்கும் முகலாயர்களும் என்ன தொடர்பு? ஒரு வரலாற்று பார்வை
வியட்நாமில் மாரியம்மன் கோவில் இருக்கா? வியக்க வைக்கும் வரலாறு!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com