திருநங்கைகள் கோவிலில் திருமணம் செய்ய அனுமதி மறுப்பு - உரிமைகளுக்காகப் போராடும் ஜோடி!

இதுபோன்ற வழக்கில் சுதந்திரமாக முடிவெடுக்க எங்களுக்கு உரிமை இல்லை என்பதால், உயர் அதிகாரிகளிடம் பேசச் சொன்னோம். ஆனால் அவர்கள் திரும்ப வரவில்லை என அவர் கூறியிருந்தார்.
திருநங்கைகளின் திருமணத்திற்கு கோவில் நிர்வாகம் அனுமதி மறுப்பு
திருநங்கைகளின் திருமணத்திற்கு கோவில் நிர்வாகம் அனுமதி மறுப்புTwitter
Published on

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் திருநங்கைகளின் திருமணத்திற்கு கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்ததாகக் புகார் அளித்ததை அடுத்து அங்கு தகராறு ஏற்பட்டது.

நிலன் கிருஷ்ணாவும் அத்விகாவும் சில மாதங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.

அவர்கள் திரு-கச்சம் குறிச்சி கோவிலில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். இருவரும் திருநங்கைகள் என்பதால், திருமணத்திற்கு அனுமதி இல்லை என்று கோவில் அதிகாரிகள் தெரிவித்ததாக அவர்கள் கூறினர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தம்பதியினர் திருமணத்தை கோவிலில் இருந்து அருகிலுள்ள மண்டபத்திற்கு மாற்ற வேண்டியிருந்தது.

இந்த சம்பவம் குறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

இவர்களின் திருமணம் குறித்து அந்த ஜோடி அல்லாமால் அவர்களுக்கு தொடர்புடைய வேறு யாரோ வந்து, கோவிலில் திருமணம் செய்து கொள்ளும் திட்டத்தை எங்களுக்குத் தெரிவித்தனர்.

தம்பதியினர் திருநங்கைகளை சேர்ந்தவர்கள் என்பது எங்களுக்கு அப்போது புரியவில்லை என்று கோவில் அதிகாரி ஒருவர் பிடிஐயிடம் தெரிவித்திருந்தார்.

திருநங்கைகளின் திருமணத்திற்கு கோவில் நிர்வாகம் அனுமதி மறுப்பு
பாலினத்தை கடந்து சாதித்த திருநங்கை : அழகி போட்டி நிறுவனத்தை வாங்கியது ஏன்?

தம்பதியினரின் பாலினம் குறித்து அறிந்ததும், உயர் அதிகாரிகளிடம் பேசுமாறு கேட்டுக் கொண்டோம்.

இதுபோன்ற வழக்கில் சுதந்திரமாக முடிவெடுக்க எங்களுக்கு உரிமை இல்லை என்பதால், அவ்வாறு கூறினோம். ஆனால் அவர்கள் திரும்ப வரவில்லை என அவர் கூறியிருந்தார்.

பெற்றோர் மற்றும் பிற உறவினர்களின் அனுமதியின்றி நடைபெறும் காதல் திருமணங்களை கோவிலில் ஒப்புக் கொள்ள மாட்டார்கள் என்று அதிகாரி கூறினார்.

Marriage (Rep)
Marriage (Rep)Twitter

இதுபோன்ற திருமணங்கள் நடப்பதால், சட்டச் சிக்கல்களும், காவல்துறையில் சிக்கல்களும் ஏற்படும் என்பதால் மறுப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

திருநங்கைகளின் உரிமைகளுக்காகப் போராடும் இஷா கிஷோரின் திருமணம் கோவில் வளாகத்தில் அனுமதிக்கப்படாததற்கு பாலினம் காரணமில்லை என்றும் கூறினார்.

திருநங்கைகளின் திருமணத்திற்கு கோவில் நிர்வாகம் அனுமதி மறுப்பு
பாலின பாகுபாடு : மடியில் அமர்ந்து புகைப்படம் எடுத்த மாணவர்கள் - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com