கடந்த 17ம் தேதி நமீபியா நாட்டிலிருந்து 8 சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டுவரப்பட்டன. இதில் 5 பெண் மற்றும் 3 ஆண் விலங்குகள் அடங்கும்.
இவற்றை தனது பிறந்தநாளில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவுக்குள் விடுவித்தார் பிரதமர் நரேந்திர மோடி.
தனி விமானத்தில் வந்த சிவிங்கிப் புலிகள் புதிய இடத்தினால் மிரட்சியுற்றிருந்தன. எனினும் அவை நலமாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அவற்றின் உடல் நலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் சிறுத்தைகளை அறிமுகப்படுத்தியது குறித்த விவாதங்கள் நடைபெற்று வருகிறது. இந்த 8 புலிகளும் தனித்தனியாக அடைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவற்றுக்கு எறுமை இறைச்சி உணவாக வழங்கப்படுகிறது. இந்த சிவிங்கிப் புலிகளை அச்சப்படுத்தும் மற்ற விலங்குகள் இங்கு வந்துவிடாமல் இருக்க இரண்டு யானைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
லெட்சுமி மற்றும் சித்நாத் என்ற இரு யானைகள் சத்ரா காப்பகத்தில் இருந்து குனோ சரணாலயத்துக்கு கொண்டுவரப்பட்டன.
இதில் சித்நாத் என்ற யானை மிகவும் கோபமான சுபாவம் கொண்டது. ஏற்கெனவே ஒரு புலியை மீட்கும் ஆப்பரேஷனில் பங்கு பெற்றதுடன், இதுவரை இரண்டு பாகன்களையும் கொன்றிருக்கிறது எனக் கூறியுள்ளார் குனோ தேசியப் பூங்கா அதிகாரி பிரகாஷ் குமார் வர்மா.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust