ராகுல் காந்தி : ”நீங்கள் அது குறித்து கேட்கமாட்டீர்கள் என தெரியும்” - ஊடகர்களிடம் ராகுல்

பத்திரிகையாளர்கள் சீனா குறித்து கேள்வி எழுப்புவது இல்லை எனக் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.
"சீனா ஆக்கிரமிப்பு குறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
"சீனா ஆக்கிரமிப்பு குறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை" - ராகுல் காந்தி குற்றச்சாட்டுRahul Gandhi
Published on

கடந்த 100 நாட்களாக இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. இதில் ஏராளமான செயற்பாட்டாளர்களும் கலந்து கொண்டுள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனும் கலந்து கொண்டார்.

இந்த பயணம் வரும் டிசம்பர் 24ம் தேதி டெல்லியை சென்றடைகிறது. பயணத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்.

அத்துடன் அவ்வப்போது செய்தியாளர்களையும் சந்தித்து வருகிறார் ராகுல் காந்தி.

அப்படி செய்தியாளர்களை சந்தித்த போது செய்தியாளர்கள் சீனா இந்திய எல்லையில் ஊடுருவுவது குறித்து எந்த கேள்வியும் எழுப்புவதில்லை என வருத்தம் தெரிவித்தார்.

ராகுல் காந்தி, ரகுராம் ராஜன்
ராகுல் காந்தி, ரகுராம் ராஜன்Newssensetn

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், பத்திரிகையாளர்கள் இன்று அனைத்தையும் குறித்து கேள்வி கேட்பர்; யாத்ரா, சச்சின் பைலட், அசோக் கெளாட் என அனைத்தையும் குறித்து கேள்வி கேட்பர், ஆனால் சீனா குறித்து ஒரு கேள்வியும் கேட்கமாட்டார்கள் என என் நண்பர்களிடம் கூறினேன். அது போலவே நடந்துவிட்டது.

20 இந்தியா சிப்பாய்களைக் கொன்ற சீனா, இந்தியாவின் 2000 கிலோ மீட்டர் நிலத்தை அபகரித்துவிட்டது. அவர்கள் அருணாச்சல பிரதேசத்தில் நமது வீரர்களை அடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் ஹிந்துஸ்தானின் பத்திரிகையாளர்கள் இது குறித்து என்னிடம் ஒரு கேள்வியும் கேட்க மாட்டார்கள். உண்மை அது.

"சீனா ஆக்கிரமிப்பு குறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
ராகுல் காந்தியின் 41 ஆயிரம் ரூபாய் டி-சர்ட் : பாஜக விமர்சனம் - பதிலளித்த காங்கிரஸ்!

ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்த மத்திய சட்ட அமைச்சர் கிரன் ரிஜிஜு, "காந்தி இந்திய இராணுவத்தை அவமதிப்பதுடன் நாட்டின் இமேஜையும் குலைக்கிறார். அவர் காங்கிரஸுக்கு பெரும் பிரச்னையாக இருப்பதுடன் நாட்டும் சங்கடத்தை விளைவிக்கிறார்." என ட்விட்டரில் சாடியிருந்தார்.

"சீனா ஆக்கிரமிப்பு குறித்து யாரும் கேள்வி எழுப்புவதில்லை" - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
KGF 2 பிஜிஎம்மை பயன்படுத்திய காங்கிரஸ் - டுவிட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com