ஆந்திரா : மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து ஒருவர் பலி - 3 பேர் பலத்த காயம்

மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து சிதறி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பலத்த காயம் அடைந்துள்ள சம்பவம் விஜயவாடாவில் அரங்கேறியுள்ளது.
e-scooter battery explodes
e-scooter battery explodesTwitter
Published on

எரிபொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் எலெக்ட்ரிக் வாகனங்களை மாற்று வழிகளாக எண்ணி, மக்கள் அதனை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.

ஆனால் சமீபகாலமாக மின்சார ஸ்கூட்டரில் பேட்டரி வெடிக்கும் பல சம்பவங்கள் நடந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் அதனைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தி அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

e-scooter battery explodes
சத்குருவைச் சந்திக்க மும்பை வந்த ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் - காரணம் என்ன?
e-scooter
e-scooter

கடந்த சில நாட்களுக்கு முன்பு மின்சார ஸ்கூட்டரில் தீப்பிடித்து 80 வயது முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.

தற்போது ஆந்திராவின் விஜயவாடாவில் மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி வெடித்து சிதறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், அவரது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் பலத்த காயம் அடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பேட்டரி படுக்கையறையில் பேட்டரி சார்ஜ் செய்யப்பட்டு இருந்த போது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தற்போது வாடிக்கையாளர்கள் மின்சார வாகனங்கள் வாங்கவே அச்சப்படுகின்றனர்.

e-scooter battery explodes
IPL 2022 : RCB-க்கு ஏப்ரல் 23-ல கண்டம்? முரட்டு ஃபார்மில் திமிறும் காவ்யா மாறன் அணி

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com