Virat Kohli: புதிய டாட்டூவின் புகைப்படத்தை பகிர்ந்த இந்திய வீரர் - ஓ இது தான் அர்த்தமா?

கோலிக்கு டாட்டூ வரையும் நாள் அன்று, மற்ற வாடிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. காவலுக்கு ஆயுதமேந்திய பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.
Virat Kohli
Virat Kohliட்விட்டர்
Published on

விராட் கோலியின் புதிய டாட்டூவின் புகைப்படம் இணையவாசிகளை கவர்ந்துள்ளது. அந்த டாட்டூவின் அர்த்தம் என்ன என்பதை டாட்டூ வரைந்த கலைஞர் தற்போது பகிர்ந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ஒரு டாட்டூ பிரியர். அவரது கைகளில் பல விதமான டாட்டூக்களை நாம் கவனித்திருப்போம். தற்போது புதியதொரு டாட்டூவை அவர் தன் கையில் போட்டுக்கொண்டுள்ளார்.

இந்த டாட்டூவை ஏலியன்ஸ் என்கிற டாட்டூ நிறுவனத்திடம் போட்டுக்கொண்டுள்ளார். இதன் உரிமையாளாரான சன்னி பானுஷாலி தான் இந்த டாட்டூவின் பின்னணி என்ன என்பதை பகிர்ந்துள்ளார்

"தன் பழைய டாட்டூவை மறைத்து, புதிய டாட்டூ வரைய முடிவெடுத்த கோலி, தன் ஸ்பிரிச்சுவாலிட்டி, வாழ்க்கையின் ஆதாரம், ஒற்றுமை போன்றவற்றின் பிரதிபலிப்பாக இருக்கவேண்டும் என நினைத்தார்" என்கிறார் பானுஷாலி.

கோலியின் இந்த டாட்டூ சரியான வடிவமைப்பை பெற அதிக உழைப்பை அதில் செலுத்தியுள்ளார் டாட்டூ கலைஞர். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஏலியன்ஸ் டாட்டூவின் பணிகளை கவனித்து வந்த கோலி, தங்கள் ஸ்டூடியோவுக்கு வந்ததை இன்னும் தன்னால் நம்ப முடியவில்லை என்கிறார் சன்னி.

Virat Kohli
Virat Kohli: கணிதத்தில் 51, அறிவியலில் 55 - வைரலாகும் 10th மார்க்‌ஷீட் | Motivational Post

"அவருக்கு இருக்கும் பேருக்கும் புகழுக்கும், எங்களிடம் மிகப் பணிவாக அன்பாக நடந்துகொண்டார். தன் அடுத்த டாட்டூவையும் எங்களிடமே பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்" என்று நெகிழ்கிறார் சன்னி

கோலிக்கு டாட்டூ வரையும் நாள் அன்று, மற்ற வாடிக்கையாளர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. காவலுக்கு ஆயுதமேந்திய பாதுகாவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

"டாட்டூவை துல்லியமாக வரைய பல மணி நேரம் எடுத்தப்போதும், கோலி சலித்துக்கொள்ளவில்லை, மாறாக அதில் இன்னும் அதிக ஈடுபாடுடன் இருந்தார். தேர்ந்தெடுக்கப்பட்ட டிசைனின் நுட்பங்கள் அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது"

டெஸ்ட், ஒரு நாள் போட்டிகள், ஐபிஎல் என படு பிசியாக இருக்கும் கோலி, இரண்டு தவணையாக சென்று இந்த டாட்டூவை கையில் போட்டுக்கொண்டுள்ளார். முதல் செஷன் மும்பையில் நடந்தது. கிட்ட தட்ட 6 மணி நேரமாகியுள்ளது டாட்டூவை வரைய. அதன் பின்னர் இரண்டாவது செஷன் பெங்களூருவில் நடந்தது. மீதமிருந்த டிசைனை முடிக்க 8 மணி நேரம் ஆனது.

Virat Kohli
விராட் கோலி : 28வது சதத்தை நிறைவு செய்த வீரர் - 3 ஆண்டுகள் காத்திருப்பு நிறைவு

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com