கர்நாடகா: ஒவ்வொரு மாதமும் ராசியின் சின்னம் நிழலாக விழும் கோவில் தூண் - மர்ம பின்னணி என்ன?

சூரிய ஒளி ஒவ்வொரு மாதமும், அந்த ராசிக்குரிய தூணில் விழும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த ராசியின் சின்னம் நிழலாக விழுகிறது. கோவில் பூசாரிகள் முக்கியமான தேதிகள், நிகழ்வுகள், பண்டிகைகளை குறித்து எளிதாக அறிய, கணக்கிட இந்த மாதிரியாக தூண்கள் அமைத்தாக நம்பப்படுகிறது.
கர்நாடகா: சிருங்கேரி வித்யாசங்கரா கோவில் - இதன் தூண்களின் மர்ம பின்னணி என்ன?
கர்நாடகா: சிருங்கேரி வித்யாசங்கரா கோவில் - இதன் தூண்களின் மர்ம பின்னணி என்ன?twitter

பல்வேறு கலாச்சாரங்களை உள்ளடக்கிய இந்திய நாட்டில் கோவில்களுக்கு பஞ்சமில்லை. மன்னர்கள் நம்மை ஆட்சி புரிந்த காலம் தொட்டு இந்த மண்ணில் எழுப்பப்பட்டு வந்த கோவில்கள், பாரம்பரியத்தை எடுத்துரைப்பது மட்டுமின்றி, விஞ்ஞானத்தையும் கருத்தில் கொண்டிருந்தது.

அதன் ஒரு சான்றாகவே இருக்கிறது சிருங்கேரியில் இருக்கும் இந்த கோவில்.

கர்நாடகா மாநிலம், சிக்மங்களூரில் உள்ள ஒரு சிறை மலை நகரம் தான் இந்த சிருங்கேரி. தென்னிந்தியாவின் பிரபலமான புனித தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது இவ்விடம். துங்கபத்ரா நதியின் கரைகளில் அமையப்பெற்றுள்ள இந்த இடத்தில் இயற்கை எழில்கொஞ்சும் கண்கவர் காட்சிகளை நாம் காணலாம்.

இந்த ஊரில் இருக்கும் முக்கியமான கோவில்களில் ஒன்று வித்யாசங்கரா கோவில். நூற்றாண்டுகள் பழமையான இக்கோவில் அதன் கட்டிடக்கலையில் பிரமிக்கவைக்கும் அற்புதம் ஒன்றை கொண்டுள்ளது.

இங்கு 12 ராசிகளுக்கு உகந்த ராசி தூண்கள் உள்ளன.

இதனாலேயே திராவிட கட்டிடக்கலை பாணியில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த கோவில் வானியல் மற்றும் ஜோதிட முக்கியத்துவம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

கோவிலின் மையப்பகுதியில் உள்ள இந்த ராசி தூண்கள் அந்த காலத்தில் இருந்த கலைஞர்களின் ஜோதிட ஞானத்தின் புரிதலை போற்றும்படியாக உள்ளது. ராசி ஸ்தம்பங்கள் தனித்துவமான ஒரு வானியல் காட்சியை (celestial specatacle) உருவாக்குகின்றன.

கர்நாடகா: சிருங்கேரி வித்யாசங்கரா கோவில் - இதன் தூண்களின் மர்ம பின்னணி என்ன?
இந்தியாவில் நூற்றாண்டுகளாக ராவணனை வழிபடும் மக்கள் - எங்கெல்லாம் இருக்கிறது ராவணக் கோவில்?

இந்த கோவிலில் மொத்தம் 12 தூண்கள் உள்ளன. மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரசியை குறிக்கிறது.

சூரிய ஒளி ஒவ்வொரு மாதமும், அந்த ராசிக்குரிய தூணில் விழும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அந்த ராசியின் சின்னம் நிழலாக விழுகிறது. கோவில் பூசாரிகள் முக்கியமான தேதிகள், நிகழ்வுகள், பண்டிகைகளை குறித்து எளிதாக அறிய, கணக்கிட இந்த மாதிரியாக தூண்கள் அமைத்தாக நம்பப்படுகிறது.

ஒவ்வொரு ராசி தூணிலும், அதற்குரிய குணாதிசயங்களை எடுத்துரைக்கும் விதத்தில் நுணுக்கமான வேலைபாடுகள் செதுக்கப்பட்டுள்ளது.

இந்த கோவில் 14ஆம் நூற்றாண்டில் வித்யாரன்யா என்ற முனிவரால் கட்டப்பட்டது. இந்த கோவிலின் ராசி தூண்களின் பின்னால் இருக்கும் விஞ்ஞானம் இன்றும் பலருக்கு புரியாத மர்மமாகவே உள்ளது.

கர்நாடகா: சிருங்கேரி வித்யாசங்கரா கோவில் - இதன் தூண்களின் மர்ம பின்னணி என்ன?
ஒடிசா: பெண் அர்ச்சகர்கள் பூஜை செய்யும் அம்மன் கோவில் - இங்கு ஆண்களுக்கு ஏன் அனுமதி இல்லை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com