நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி - பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன?

பார்ப்பதற்கு அழகாக இருப்பதாலும் அதனை பராமரிப்பது குறைந்த செலவு என்பதாலும் இதனை நெடுஞ்சாலைகளில் வைப்பதாக பல நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் இதற்குப் பின் பல அறிவியல் காரணங்கள் இருக்கின்றன.
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி - பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன?
நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி - பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன?Twitter

பொதுவாக நெடுஞ்சாலைகளில் செவ்வரளிச் செடி அதிகம் இருப்பதை பார்த்திருப்போம்.

வீடுகளில் பெரும்பாலும் அரளிச் செடியை அதன் விஷத்தன்மை காரணமாக வைப்பதில்லை, பார்ப்பதற்கு அழகாக இருப்பதாலும் அதனை பராமரிப்பது குறைந்த செலவு என்பதாலும் இதனை நெடுஞ்சாலைகளில் வைப்பதாக பல நினைத்துக் கொண்டிருக்கிறோம் ஆனால் இதற்குப் பின் பல அறிவியல் காரணங்கள் இருக்கின்றன.

அப்படி நெடுஞ்சாலைகளில் எதற்காக செவ்வரளிச் செடி வைக்கப்படுகிறது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

அரளி தாவரத்தில் செவ்வரளி, வெள்ளை அரளி என இரு வகைகள் இருக்கின்றன. கோவில்களில் இந்த செவ்வரளியை பார்த்திருப்போம். இந்த செவ்வரளியை கொண்டு மாலை செய்து தெய்வங்களுக்கு படைப்பர்.

என்னதான் கோவில்களில் செவ்வரளி பயன்படுத்தப்பட்டாலும் வீடுகளில் இதனை வளர்க்க மாட்டார்கள், இந்தச் செடியின் இலை, தண்டு என பல பாகங்கள் விஷத்தன்மை கொண்டதாக இருக்கும். இதனாலே இதனை வளர்க்க விரும்பமாட்டார்கள்

ஆனால் நெடுஞ்சாலைகளில் எதற்காக இந்த அரளிச்செடி அதிகமாக வளர்க்கப்படுகிறது. அங்கு செல்லும் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகைகளில் கார்பன் நச்சுக்கள் அதிகமாக இருக்கும். இந்த நச்சுக்கள் காற்றில் கலந்து சாலையில் பயணிப்பதற்கு சுவாசக் கோளாறு ஏற்படுத்தக் கூடும்.

ஆனால் செவ்வரளி செடியில் உள்ள இலைகள் மற்றும் பூக்கள், கார்பன் துகள்களை காற்றில் இருந்து நீக்கி காற்றில் உள்ள மாசுகளை அகற்றி தூய்மையான காற்றாக மாற்றும் தன்மை கொண்டவை.

நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி - பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன?
வைன் பருகினால் தலைவலி ஏற்படுவது ஏன்? அறிவியல் சொல்வதென்ன?

அதுமட்டுமில்லாமல் இவை வறட்சியை தாங்கும் தன்மை கொண்டவை. சத்தத்தை குறைக்கும் ஆற்றல் படைத்தவை. செவ்வரளி செடியின் இலைகள் அவ்வளவு அடர்த்தி மிக்கவை.

சாலைகளில் செடிகள் இருந்தால் அதனை விலங்குகள் தீண்டும். ஆனால் விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் இலைகளை சாப்பிடாது என்பதும் மற்றொரு காரணம்.

நெடுஞ்சாலைகளில் வைக்கப்படும் அரளிச் செடிகள் மழை அதிகமான காலங்களில் அதிகமாக வளரும். அப்படி வளரும் பட்சத்தில் விபத்துகள் நேரலாம். அதனால்தான் சாலையின் நடுவில் செடிகள் குறைந்த அளவு உயரமாக வளர்க்கப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகின்றன. பராமரிப்பது குறைந்த செலவு தான் என்றாலும் சரியாக அதனை செய்ய வேண்டும்.

எல்லா பருவநிலையிலும், எல்லா காலங்களிலும் வளரக்கூடிய இந்த செவ்வரளியை விவசாயிகள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் செவ்வரளி பூக்கள் மலர் சந்தைகளில் அதிகம் விற்பனையாகிறது.

அழகோடு சேர்த்து இத்தனை அதிசயங்கள் நிறைந்த செவ்வரளியை நெடுஞ்சாலையில் அதிகம் காண முடிகிறது.

நெடுஞ்சாலைகளில் அதிகம் வளர்க்கப்படும் செவ்வரளி - பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் என்ன?
குளிர் காலத்தில் மூடுபனி வருவது ஏன்? அறிவியல் காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com