உலகிலேயே உயரமான ரயில்வே பாலம் இந்தியாவில் திறப்பு - சுவாரஸ்ய தகவல்கள்

இதன் உயரம் 359 மீட்டர், நீளம் 467 மீட்டர். இதன் கட்டுமானப் பணிகள் கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது தான் வியக்க வைக்கும் உண்மை.
Chenab Railway Bridge
Chenab Railway BridgeTwitter
Published on

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பங்கால் மற்றும் கவுரி என்ற பகுதிகளை இணைக்கும் விதமாக பாலம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. செனாப் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இந்த பாலம் தான் உலகிலேயே உயரமான ரயில்வே பாலம் என்று கருதப்படுகிறது.

இதன் உயரம் 359 மீட்டர், நீளம் 467 மீட்டர். இதன் கட்டுமானப் பணிகள் கடந்த 2004ம் ஆண்டு தொடங்கப்பட்டது என்பது தான் வியக்க வைக்கும் உண்மை.

இரும்பு மற்றும் காங்க்ரீட் பாலமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது. 2017ம் ஆண்டுவரை பாலத்தின் அடிப்பகுதி கட்டுமானமும் கடந்த ஏப்ரல் மாதம் வரை வளைவுப்பகுதி கட்டுமானமும் நடைபெற்றுள்ளது.

இந்த பாலம் காஷ்மீரின் ஸ்ரீநகரை நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கிறது.

இந்த சிறப்பு வாய்ந்த பாலத்தின் கட்டுமானப்பணி குறித்து கொங்கன் ரயில்வே தலைவர் சஞ்சய் குப்தா, "கடினமான மலைப்பகுதியில் மோசமான வானிலை போன்ற பல சவால்களைக் கடந்து இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது." எனக் கூறினார்.

Chenab Railway Bridge
காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவம் நடத்தும் கஃபே - குவியும் சுற்றுலா பயணிகள்

இதுதான் உலகிலேயே உயரமான பாலம் என்றும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த பாலத்தின் 98% பணிகள் நிறைவடைந்துவிட்டதனால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. அனைத்துப் பணிகளும் நிறைவடைந்த பின்னர் வரும் டிசம்பர் முதல் இந்த பாலத்தில் ரயில் போக்குவரத்து நடைபெறவுள்ளது.

இந்த பாலம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸில் உள்ள ஈபிள் டவரை விட 35 மீட்டர் உயரமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Chenab Railway Bridge
விவேக் எக்ஸ்பிரஸ் : 4273 கி.மீ, 55 நகரங்கள், 3 நாள் - இந்தியாவின் நீண்ட ரயில் வழித்தடம்

இது நில அதிர்வுகளில் ரிக்டர் அளவுகோலில் 8 வரை தாங்க வல்லது. வடக்கு ரயில்வே துறையின் மிகப் பெரும் சாதனையாக கருதப்படுவதாக தலைவர்கள் பலரும் ட்வீட் செய்து வருகின்றனர். உத்தம்பூர் , ஶ்ரீ நகர் , பரமுல்லா ரயில் இணைப்பு திட்டத்தின் கீழ் 1486 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. செனாப் ரயில் பாலம் மணிக்கு 266 கிமீ வேகத்தை தாங்க வல்லதாகவும் உள்ளது.

Chenab Railway Bridge
உலக அதிசயமான ஈபிள் டவர் கட்டப்பட்டது எதற்காக? ஆரம்பத்தில் பாரிஸ் மக்கள் அதை வெறுத்தது ஏன்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com