
பூமியைப் போன்ற ஒரு கிரகத்திற்கான தேடலின் நீட்சியானது, நமது விஞ்ஞானிகளை சூரியக் குடும்பத்திற்குப் பின்னால் மட்டுமல்ல, பால்வீதியைத் தாண்டியும் அழைத்துச் சென்றுள்ளது. அப்படியான தொடர் தேடலின் விளைவாக, ஒரு புதிய கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்திருப்பது அனைவரின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. பால்வீதியில், சிவப்பு நட்சத்திரங்கள் வாழக்கூடிய மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு சூப்பர்-பூமியை வானவியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த கிரகமானது, அது வாழக்கூடிய மண்டலத்திற்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ச்சியாக நகரும் தன்மை கொண்டதாக இருக்கிறது. இதனால், இது மீதான ஆராய்ச்சிகளை நடத்துவது சவாலானதாக இருக்குமென்று வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் அதன் செயல்பாடுகளைத் தொடங்கியிருப்பதால், இந்த சூப்பர்-பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் இருக்கிறதா? என்பதைக் கண்டறிந்துவிட முடியும் என்கிற நம்பிக்கையுடன் வானியலாளர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். எதிர்காலத்தில் இந்த கிரகம் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு முக்கிய இலக்காக இருக்கலாம்.
சுபாரு தொலைநோக்கியில் (IRD-SSP) உள்ள அகச்சிவப்பு நிறமாலையை (IRD) பயன்படுத்தி சுபாரு மூலோபாய திட்டத்தால் கண்டறியப்பட்ட இந்த கிரகத்திற்கு, Ross 508 b என்று பெயரிடப்பட்டுள்ளது. நமது விண்மீன் மண்டலத்தில் முக்கால்வாசி நட்சத்திரங்களை உள்ளடக்கிய ,சிவப்பு குள்ள நட்சத்திரங்கள் குறித்த ஆராய்ச்சியின் விளைவாக இந்த கண்டுபிடிப்பு நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரகங்களின் மேற்பரப்பில் திரவ நீர் இருக்கக்கூடிய நட்சத்திரத்திலிருந்து தூரம் வாழக்கூடிய மண்டலத்திற்கு, கோல்டிலாக்ஸ் மண்டலங்கள் என்று அழைக்கப்படுகிறது. அங்கு, கிரகங்களின் மேற்பரப்பானது மிகவும் சூடாகவோ அல்லது மிகவும் குளிராகவோ இருக்காது என்று கூறப்படுகிறது. புதிய கிரகமான ராஸ் 508 பி, இந்த கோல்டிலாக்ஸ் மண்டலத்தின் வழியாகத்தான் சுற்றுப்பாதையில் நகர்கிறது. எனவே தான் இதனை சூப்பர் பூமி என்றும் அழைக்கிறார்கள்.
இந்த கிரகம் பூமியில் இருந்து சுமார் 37 ஒளி ஆண்டுகள் தொலைவில், சூரியனின் ஐந்தில் ஒரு பங்கு கொண்ட நட்சத்திரத்தைச் சுற்றி அமைந்துள்ளது. இந்த கிரகம் பூமியின் அளவைப்போன்று நான்கு மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த சூப்பர் பூமி, நீள்வட்ட சுற்றுப்பாதையில் இருக்க வாய்ப்புள்ளதாகவும், சுமார் 11 நாட்கள் சுற்றுப்பாதையில் அது வாழக்கூடிய மண்டலத்தைக் கடக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். "தற்போதைய தொலைநோக்கிகள் மைய நட்சத்திரத்துடன் நெருக்கமாக இருப்பதால் கிரகத்தை நேரடியாகப் படம்பிடிக்க இயலாது. ஆனால் எதிர்காலத்தில், 30 மீட்டர் தொலைநோக்கிகள் மூலம் செய்யப்படும் ஆராய்ச்சிகளின் முக்கிய இலக்காக இது இருக்கும்" என்று ஆராய்ச்சியாளர்கள் குழு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust