குருபெயர்ச்சி பலன்கள் 2022 - 2023 : துலாம் முதல் தனுசு வரை

அவரவர் ஜாதக கர்மாவை பொருத்து சின்ன சின்ன சஞ்சலங்கள் ஏமாற்றங்கள் வழக்குகளில் தொய்வு தோல்வி போன்றவையும் ஏற்படலாம். கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது அதே நேரத்தில் எதிரிகளின் தொல்லை குறையும்.
குரு பெயர்ச்சி
குரு பெயர்ச்சிTwitter
Published on

துலாம் சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3

குரு ஆறில் நின்றவர்கள் கோடீஸ்வரன் என்றும் சொல்வதுண்டு. அதே நேரத்தில் ஆறாமிடத்து குரு ஊர்ப்பகை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். 6-ம் இடத்தில் வருவதால் பிரச்சனையில்லாத வாழ்வு மலரும். அவரவர் ஜாதக கர்மாவை பொருத்து சின்ன சின்ன சஞ்சலங்கள் ஏமாற்றங்கள் வழக்குகளில் தொய்வு தோல்வி போன்றவையும் ஏற்படலாம். கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது அதே நேரத்தில் எதிரிகளின் தொல்லை குறையும். குடும்பத்தார் இடையே இருந்த வாக்குவாதங்களை மறைந்து, சொந்தங்கள் நட்புகள் ஆகியவர்கள் இடையே மனச் சஞ்சலங்கள் தீரும். உடல் பருமன், உடல் சோர்வு, பற்களில் சிதைவு, கணையம், மண்ணீரல், போன்றவற்றில் பிரச்சினைகள் வரலாம்.

உதிரி வருமானங்கள் கிடைக்கும் கொடிய காலகட்டம் இது அதனால் சேமிப்புகளைச் சிறப்பாக ஆக்கிக்கொள்ள இப்போதிலிருந்தே திட்டமிடத் தொடங்குங்கள். சிலருக்கு இரண்டு மூன்று வேலைகளைப் பார்ப்பதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சிறப்பாக அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் மனச் சஞ்சலங்களும் குழப்பங்களும் டென்ஷன் பதட்டம் போன்றவையும் ஏற்படும் என்பதால், அதற்குத் தயாராகிக் கொண்டு அதை எதிர்கொள்ளும் ஆற்றலை வளர்த்துக் கொள்வதன் மூலம், மிகச் சிறப்பான பலன்களைக் காணலாம்.

துலாம்
துலாம்Twitter

யாருக்கும் இந்த காலகட்டத்தில் ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டாம். பெரிய தொகைகளை முதலீடு செய்வதோ நம்பி பணம் கொடுப்பதோ செய்ய வேண்டாம். இது வரை திருமணம் நடைபெறவில்லை என்று ஏங்கிக் கொண்டிருந்தவர்கள் கவலைப்படவேண்டாம். மனதிற்குப் பிடித்த மணவாழ்க்கை அமையும். இதற்காகத்தான் இவ்வளவு நாள் காத்திருந்தோம் என்று ஆச்சரியப்படத்தக்க வகையில் மணவாழ்க்கை அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு சிலருக்குக் கிடைக்கும். நெடுநாட்களாகத் தள்ளிப் போயிருந்த பெரிய வாய்ப்புகள், வேலைகளில் வருமானங்கள், போன்றவை கிடைக்க ஆரம்பிக்கும். அடுத்தவர் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவுகள் நன்மை கொடுக்கக் கூடியதாக அமையும். அதனால் உங்களுக்குப் பாராட்டுகளும் நல்ல மரியாதையும் கிடைக்கப்பெறும். உங்கள் பிள்ளைகளால் நீங்கள் பெருமைப்படப் போகின்ற நேரம் இது. அதனால் அவர்களை எந்த அளவிற்கு ஊக்குவிக்க முடியுமோ அந்த அளவுக்கு உற்சாகப்படுத்த, அவர்களும் மகிழ்வார் மகிழ்ச்சி அடைந்து உங்களையும் மகிழ்விப்பார்கள். அதுமட்டுமல்லாமல் செய்யும் தொழிலில் திருப்தி ஏற்படும் உடல் உபாதைகள் ஏற்படாதவாறு சிறப்பான உணவுகளை மேற்கொள்வது அவசியம். சிறுதானியம்,கீரை போன்றவற்றை இப்போதிலிருந்தே பழக்கப்படுத்திக் கொள்ள ஆரோக்கியமான வாழ்வு உங்களுக்குக் கிடைக்கும். உடல் பலமாக இருந்தால் எதையும் எதிர்கொண்டு சமாளித்து விடலாம். அந்த பலத்தைத் தரும் முக்கிய காலகட்டம் இது. அதனால் ஆரோக்கியமான உணவில் கவனம் செலுத்த வேண்டும்.

அதே நேரத்தில் வாக்குவாதங்களில் சிக்காமலிருக்க, பிடிவாதமாக ஒரே விஷயத்தில் விட்டுக் கொடுக்காமல் இருப்பதைக் கொஞ்சம் தளர்த்தி விட்டு.. கொஞ்சம் விட்டுக் கொடுத்துப் போவதும், அமைதியாக சில விஷயங்களைக் கையாள்வதும் மிக முக்கியமான விஷயம் ஆகும். நீங்கள் பெரிய ஆள்தான் அதை வார்த்தைகளில் காட்டாமல் செயல்களில் காட்டக்கூடிய காலகட்டம். ஏனென்றால் நீங்கள் சவால்விட்டுச் செய்ய முயற்சிக்கும் நேரத்தில், உங்கள் செயல்களை தடைப்படுவதற்கு மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். அதனால் உங்களால் முடிந்தவரை அமைதியுடனும்,ம் செயலில் மட்டுமே கவனம் செலுத்துவது அவசியம் பிறருக்கு நன்மை செய்யவேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்திருப்பீர்கள். ஆலயங்களுக்கு உதவ வேண்டும் ,இயலாதவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பல காலமாக நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தது இப்பொழுது நிறைவேறும். அவற்றைச் செய்வதன் மூலம் நல்ல கர்ம வினைகள் உங்களுக்குச் சேர்ந்து அதே பக்கபலமாக இருக்கும். மரியாதையும் மதிப்பும் கிடைக்கும். கொரோனா சமயத்தில் நீங்கள் படாத கஷ்டம் இல்லை. வருமானத்திற்கு வழி இல்லாமலும் வரவேண்டிய பணம் வராமல் இருந்திருக்கலாம். ஆனால் இனி அந்த நிலைமை முற்றிலுமாக மாறி, பல வழிகளில் உங்களுக்கு வருமானம் வந்துகொண்டே இருக்கும்.

குரு பகவான்
குரு பகவான்Twitter

அலர்ட் டைம்= குரு வக்கிர காலம்

வக்கிர குரு காலமான மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை உடல்நலக் கோளாறுகளுக்காகச் செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. வீட்டில் உள்ளவர்களுக்கு அல்லது வேறு யாருக்கோ நீங்கள் மருத்துவச் செலவு செய்வது போன்ற சூழ்நிலை ஏற்படலாம். அதே நேரத்தில் பல நன்மைகளும் கிடைக்கக்கூடிய காலகட்டமாக உங்களுக்கு இருக்கிறது. நன்மை தீமை இரண்டும் கலந்தே நடக்கும். இரண்டையும் கண்டு துவண்டுவிடாமல் தலைக்கனம் ஆகாமல் மகிழ்ச்சியுடன் வாழ்க. நிச்சயமாகப் பொன் பொருள் சேர்க்கை ஆடை ஆபரண சேர்க்கை நகை சேர்க்கை போன்றவை ஏற்படும். பெரியவர்களின் ஆசீர்வாதமும் முன்னோர்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு நற்பலன்களையும் பக்க பலன்களையும் கொடுக்கக் கூடும். அதனால் முன்னோர் வழிபாடு மிகவும் அவசியம். தாய் தந்தையரை வணங்குதலும் உதவி செய்தலும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதும், அவர்களுடைய ஆசீர்வாதங்களைப் பெறுவதும் முன்னேற்றம் தரும். ஆஞ்சநேயர் வழிபாடு மிக நன்மை தரும்.

விருச்சிகம்
விருச்சிகம்Twitter

விருச்சிகம் = விசாகம் 4-ஆம் பாதம் முதல், அனுஷம், கேட்டை

ஐந்தாம் வீட்டில் குரு இருந்தால் அறிவாற்றல் பெருகும். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். பொதுக்காரிய ஈடுபாடு ஏற்படும். சிறந்த குடும்ப வாழ்க்கை அமையும், பரந்த மனப்பான்மை மேலோங்கும் என்பது பலரும் அறிந்ததே. அவற்றையெல்லாம் பெறப்போகும் விருச்சிக ராசிக்காரர்கள், அள்ளித்தரும் முன்னேற்றங்களைப் பெறப்போகிறார்கள். கர்ப்பிணிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம் இது. 9வது இடத்தை பார்ப்பதால் நல்ல பலன்களே ஏற்படும். ரத்த பந்த உறவுகளால் அனுகூலமாகப் பலன்கள் வந்து சேரும். கூரை விட்டிலிருந்தவர்கள், ஓட்டுவீடு மாடிவீடு என முன்னேற்றங்கள் கிடைக்கும். நகை சேர்க்கை, வீடு நிலம் என வாங்கும் ஏகமான வாழ்க்கை அமையும். வயிற்று உபாதைகள் ஏற்பட ஆரம்பிக்கும். எண்ணை, கொழுப்பு உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. தடைப்பட்ட திருமணம் நடைபெறும் காலம் இது. தலைமை பொறுப்புகள் வந்தடையும் நேரம். அதைச் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

குரு பெயர்ச்சி
ஒரே வீட்டில் 9 மனைவியுடன் வாழ்ந்து வந்த நபருக்கு ஏற்பட்ட சோகம்!

உண்மையான நண்பர்களை உணரும் நேரம் இது. மிகச்சிறப்பான எதிர்காலம் அமையமாவதற்கான வாய்ப்புகள் உங்களைத்தேடி வரும். தலைமை பதவிப் பொறுப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த ஷேர் பங்குகளால் இப்போது பல மடங்கு லாபத்தைப் பெறலாம். அதேபோன்று இதுவரையில் விற்காமல் இருந்த நிலத்தை விற்க நல்ல விலைக்குப் போகும். புதிய தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. பெண்களுக்கும் வீட்டிலிருந்தே சொந்த தொழில் சிறு தொழில் ஆரம்பிக்க வாய்ப்புகளும் சூழல்களும் அமையும். அது மட்டுமல்லாமல் பகுதி நேர வேலைகள் பகுதி நேர உதிரி வருமானங்களும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கான சலுகைகளும் கிடைக்கும். அதிகாரப் பதவி உங்களைத் தேடி வரும். சொத்துக்களில் நல்ல லாபம் கிடைக்கும். வெளிநாடுகளிலிருந்து வாய்ப்பு கிடைத்தால் தவற விட வேண்டாம் உங்கள் சூழ்நிலை பொறுத்து உடனடியாக சென்று சிலகாலம் இருந்து வேலை பார்த்து சம்பாதித்துவிட்டுத் திரும்புவது புத்திசாலித்தனமாகும் கூடுதல் பொறுப்புகளும் கூடுதல் சம்பளமும் கிடைக்கக்கூடிய நேரம். அதனால் முன்கூட்டியே வந்த தலைமைப் பண்புக்கு நீங்கள் தயாராக இருப்பது நல்லது.

தனுசு, குரு பகவான்
தனுசு, குரு பகவான்Twitter


அலர்ட் டைம் = வக்கிர காலம்

ஜூலை மாதம் முதல் நவம்பர் வரை இந்த வருடம் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனம் அவசியம். வார்த்தைகளில் கவனமும் கோபப்படாமல் உணர்ச்சி வசப்பட்டு பெசிவிடாமல் இருந்தாலே போதும். முருக வழிபாடு நலம் தரும். உடல் நலத்தில் சிறிது பாதிப்பு ஏற்படத்துவங்கினாலும் கவனமாக இருப்பதும், முன் எச்சரிக்கையாக இருப்பதும், பெரிய இடர்களைத் தவிர்க்கும்.

தனுசு ராசி - மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் வரை

நான்காம் வீட்டில் குரு இருந்தால் வசதி வாய்ப்பு கிடைக்கும்.பெரிய பாதிப்புகள் இல்லை என்றாலும் சின்னஞ்சிறிய பாதிப்புகள் வந்தால் துவண்டு போகாமல், இதோடு முடிந்ததே என்று மகிழ வேண்டும்.

செல்வம், செல்வாக்கு அசையா சொத்து யோகம் கிடைக்கும். நான்காம் வீட்டில் குரு தனித்து பலம் இழந்து இருந்தால் அசையாத சொத்து அமையத் தடைகள் ஏற்படும்

பெருமாள் வழிபாடு சிறப்பான பலன்களைக் கொடுக்கும். உடன் பிறந்தவர்களோடு வாக்குவாதம் வேண்டாம். உடற்பயிற்சி செய்தால் பெரும் துன்பம் வருவதைத் தவிர்க்கலாம். சுப விரயங்கள் நடந்தே தீரும். அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்ளுங்கள். தொழில் மாற்றம் இடமாற்றம் போன்ற மாற்றங்கள் ஏற்றங்களைத் தரும். நல்ல வழிகாட்டி கிடைப்பார்கள். மாணவர்கள் சிறப்பாகப் படிப்பார்கள். நீங்களே நம்ப முடியாத அளவிற்கு மிகப்பெரிய பணவரவு கிடைக்கப் போகின்ற காலகட்டமும் இது. நல்ல தொழில் வளர்ச்சி முன்னேற்றம் போன்றவையும் மிகச்சரியான சிறப்பான வாய்ப்புகளும் சிறப்பான அங்கீகாரமும் கிடைக்கக் கூடிய நேரம் இது.

குரு பெயர்ச்சி
மயூரசேவை – பகை அகற்றும் பாம்பன் சுவாமிகள்!

எனக்கு ஒரு விடிவுகாலம் வந்துவிடாதா என்று ஏக்கத்தோடு இருந்த அனைவருக்கும் இந்த ஒரு வருட காலம் மிகப்பெரிய பொற்காலமாக அமைய இருக்கிறது. இதுநாள் வரை உங்களுடைய தொழிலில் அல்லது வேலையில் யாராவது தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கலாம். அவர்கள் தானாக உங்களை விட்டு விலகி விடுவார்கள். அப்பாடா என்று நிம்மதியாக இருக்கக் கூடிய நேரமிது. மிகவும் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் அவரவர் வேலையை முயற்சிகளைச் சிறப்பாகச் செய்வீர்கள்.

சின்ன நோய்களிலிருந்து பெரிய நோய்கள் வரைக்கும் தீராத வியாதிகள் இருந்ததெல்லாம் குணமாகும். பூமருந்து மருந்து முறைகளை மாற்றிச் சாப்பிடுவதாலும் மருத்துவரை வேறு அணுகி முயல்வதாலும், இயற்கை மருத்துவங்களைப் பின்பற்றுவதாலும் இது ஏற்படலாம்.

அலர்ட் டைம் = வக்கிரகாலம்

ஜூலை முதல் நவம்பர் வரை, திடீர் திடீரென்று ஆரோக்கிய குறைபாடுகள் வந்துபோகும் அது முற்றிலும் நீங்குவதற்கான நேரம் என்பதால் அதனால் அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். அலட்சியமாகவும் இருந்துவிட வேண்டாம்.

குரு பெயர்ச்சி
விவேகானந்தர் பிறந்தநாள் ; உங்கள் வாழ்க்கைக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய 25 பொன்மொழிகள்

குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது மாமியார் மாமனார் இவர்கள் இடையே வாக்குவாதம் அல்லது சொல்லிக் காட்டுவது போன்றவை வேண்டாம். நீங்கள் அமைதியாக இருந்தாலும் உங்களைத் தேடி வந்த சிலர் குறை சொல்லிக் கொண்டோ அல்லது மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் உங்கள் காதில் போட்டு வைத்துச் செல்வார்கள் ஆத்திரப்பட்டு ஆமாம் என்று நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு அவர்களைப் பற்றியோ பேசிவிட வேண்டாம் பிற்காலத்தில் அது பெரிய பிரச்சினைகள் கொண்டு போய்விடும். அதனால் இரத்த பந்தத்தில் குடும்ப சூழ்நிலையில் நண்பர்கள் நண்பர்கள் உறவினர்கள் அலுவலகத்தில் வேலை பார்க்கும் சக ஊழியர்களிடம் தேவையற்ற பேச்சு வார்த்தைகளைத் தவிர்ப்பது மிக நல்லது.

எந்த முடிவு எடுத்தாலும் உங்களுடைய குரு அல்லது சிறப்பான வழிகாட்டி இவர்களைக் கலந்து ஆலோசித்துக் கொண்டு செய்வது நல்லது அல்லது குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களை ஒரு வார்த்தை கேட்டுவிட்டுச் செய்வது பெரிய இடர்பாடுகளிலிருந்து தப்பிக்கலாம். மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடிய காலகட்டம் என்று தேவையில்லாமல் உங்கள் மீது யாராவது பழி சுமத்த நேரிடும் அதற்கெல்லாம் பதில் சொல்லிக்கொண்டும் முடங்கிவிடத் தேவையில்லை. பிறகு ஒரு நாளில் தானாக விலகிவிடும். பெருமாள் வழிபாடு கூடுதல் நற்பலன்களைத் தரும்.

குரு பெயர்ச்சி
சேலம் : உலகிலேயே மிக உயரமான முத்துமலை முருகன் சிலைக்கு குடமுழுக்கு!

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com