கே.எல்.ராகுல் : "தண்ணீர் கொடுக்கத்தான் தயாராக இருந்தேன்" சதம் அடித்த பிறகு பேசியது என்ன?

"5 மாதங்கள் வெளியில் இருந்து தொலைக்காட்சியில் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தால் திரும்பும் போது எதையும் செய்ய நாம் தயாராக இருப்போம். என்னால் நம் அணிக்காக இதை செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி"
கே.எல்.ராகுல் : "தண்ணீர் கொடுக்கத்தான் தயாராக இருந்தேன்" சதம் அடித்த பிறகு பேசியது என்ன?
கே.எல்.ராகுல் : "தண்ணீர் கொடுக்கத்தான் தயாராக இருந்தேன்" சதம் அடித்த பிறகு பேசியது என்ன?Twitter

இந்தியா, பாகிஸ்தான் இடையிலான நேற்றையப் போட்டி இந்திய ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. ஓபனிங் ஆடிய இரண்டு பேட் மேன்களும் தலா 50, அடுத்ததாக இறங்கிய மிடில் ஆர்டர் பேட்டர்கள் தலா 100 எனத் தெறிக்கவிட்டனர்.

காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த கே.எல்.ராகுல், "எப்படி போனானோ கபாலி அப்படியே திரும்பி வந்திருக்கேன் பார்" என எல்லாரையும் திரும்பிப்பார்க்க வைக்கும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

குறிப்பாக மழைக்காரணமான இடைவெளிக்குப் பிறகு ரிசர்வ் டேவில் காற்று இந்தியா பக்கம் அடித்தது. பந்து சிக்ஸருக்கும் ஃபோருக்கும் பறந்தது.

நேற்று 111 ரன்கள் அடித்த ராகுல், போட்டிக்கு 5 நிமிடத்துக்கு முன்னர் தான் பிளேயிங் 11ல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதை அறிந்தாராம்.

ஸ்ரேயஸ் ஐயருக்கு மாற்றாக கே.எல்.ராகுலை களமிறக்கியது இந்திய அணி.

தனது அட்டகாசமான ஆட்டத்துக்கு பிறகு பேசிய கே.எல்.ராகுல், "தொடர்ந்து காயங்கள் ஏற்பட்டு போட்டிக்குத் திரும்புவது எவ்வளவு கடினமானது என்பதை நான் அறிந்திருக்கிறேன். கடந்த சில ஆண்டுகளாக பல காயங்கள் ஏற்பட்டன. ஆனால், 5 மாதங்கள் வெளியில் இருந்து தொலைக்காட்சியில் மேட்ச் பார்த்துக்கொண்டிருந்தால் திரும்பும் போது எதையும் செய்ய நாம் தயாராக இருப்போம். என்னால் நம் அணிக்காக இதை செய்ய முடிந்ததில் மகிழ்ச்சி" எனக் கூறினார்.

கே.எல்.ராகுல் : "தண்ணீர் கொடுக்கத்தான் தயாராக இருந்தேன்" சதம் அடித்த பிறகு பேசியது என்ன?
Virat Kohli: 1000 கோடி சொத்து; ஒரு இன்ஸ்டா போஸ்டுக்கு 8.9 கோடி - பணம் கொட்டியது எப்படி?

மேலும், "ஸ்ரேயஸ் ஐயர் முதுகில் பிடிப்பு ஏற்பட்டுள்ளதால் நான் விளையாட வேண்டும் என்பதை ட்ராவிட் என்னிடம் டாஸ் போடுவதற்கு 5 நிமிடம் முன்புதான் கூறினார்.

நான் என்னுடைய பேட்டிங் கியர் எதையும் எடுத்துவரவில்லை. இன்று தண்ணீர்தான் கொடுக்கப்போகிறோம் என ஒரு முழுநீள டி-சர்ட் மட்டுமே வைத்திருந்தேன். கடைசி நேரத்தில் மேனேஜர் ஹோட்டலுக்கு சென்று, என் பேட்டிங் ஸ்கின், டீ-சர்ட் உட்பட எல்லாவற்றையும் எடுத்துவர நேர்ந்தது.

ஆனால் இது ஒன்றும் முதல்முறை அல்ல, நாம் ரிங்குக்குள் செல்லும்போது என்ன செய்யவேண்டும் என எனக்குத் தெரியும்." எனவும் கூறினார்.

கே.எல்.ராகுல் : "தண்ணீர் கொடுக்கத்தான் தயாராக இருந்தேன்" சதம் அடித்த பிறகு பேசியது என்ன?
Asia Cup 2023: கோலி, ராகுல் அதிரடி சதம் - இமாலய வெற்றி கண்ட இந்திய அணி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com