IPL 2023 : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஓபனிங் செய்த அஷ்வின்; ஏன்? - கேப்டன் சஞ்சு சொன்னது என்ன?

"நாங்கள் நன்றாகவே தொடங்கினோம். நடுவில் அங்கும் இங்குமாக பவுண்டரிகள் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை. இருப்பினும் நாங்கள் முடிவில் சிறப்பாகவே விளையாடினோம். இரண்டு பவுண்டரிகள் கிடைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்."
IPL 2023 : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஓபனிங் செய்த அஷ்வின்; ஏன்? - கேப்டன் சஞ்சு சொன்னது என்ன?
IPL 2023 : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஓபனிங் செய்த அஷ்வின்; ஏன்? - கேப்டன் சஞ்சு சொன்னது என்ன?Twitter
Published on

நேற்றைய ஐபிஎல் போட்டியில் 10 ஆண்டுகள் கழித்து ஓபனிங் இறங்கியிருக்கிறார் ரவிசந்திரன் அஷ்வின். ஆனால் ஒரு ரன் கூட எடுக்காமல் பெவிலியன் திரும்பினார்.

ஏன் அஷ்வின் ஓபனிங் இறக்கிவிடப்பட்டார், இதன் பின்னிருக்கும் தந்திரம் என்ன என்பதை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.

சிறிய காயம் ஏற்பட்டிருந்ததால் ஜோஸ் பட்லர் களமிறங்க முடியாத சூழல் இருந்ததாகவும், அவருக்கு பிசியோ சிகிச்சை அளிக்கும் வரை களத்தில் இருக்க அஷ்வின் இறக்கிவிடப்பட்டதாகவும் கூறியிருக்கிறார்.

"பட்லர் ஃபீல்டிங் செய்யும் போது அவருக்கு சிறிய காயம் ஏற்பட்டது. அவருக்கு தையல் போட நேரமில்லை. மற்ற பேட்ஸ்மேன்கள் பின்னால் இருக்க வேண்டும் என்பதனால் அஷ்வின் அண்ணாவை களமிறக்கினோம். பட்லர் ரெடியானதும் அவர் இறங்கினார், நன்றாக விளையாடினார்" என சஞ்சு குறியிருக்கிறார்.

நேற்றைய போட்டியில் பஞ்சாபின் 197 ரன்களை சேஸ் செய்த ராஜஸ்தான் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் போராடித் தோற்றது.

"இந்த மாதிரியான போட்டிகாளில் நிலையான உத்வேகம் கிடைப்பதில்லை. நாங்கள் நன்றாகவே தொடங்கினோம். நடுவில் அங்கும் இங்குமாக பவுண்டரிகள் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அப்படி நடக்கவில்லை. இருப்பினும் நாங்கள் முடிவில் சிறப்பாகவே விளையாடினோம். அங்கும் இங்குமாக இரண்டு பவுண்டரிகள் கிடைத்திருந்தால் வெற்றி பெற்றிருப்போம்." என தோல்வி குறித்துப் பேசினார் சஞ்சு சாம்சன்.

IPL 2023 : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஓபனிங் செய்த அஷ்வின்; ஏன்? - கேப்டன் சஞ்சு சொன்னது என்ன?
RR vs PBKS : தவானை குறும்பாக எச்சரித்த அஷ்வின் - ஐபிஎலில் நடந்த கலாட்டா! | வீடியோ

16வது ஓவர் வரை ராஜஸ்தான் அணி 124 ரன்களே எடுத்திருந்தனர். ஆனால் அதன் பின் இறங்கிய இளம் வீரர் துருவ் ஜூரே அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

"சர்வதேச பந்துவீச்சாளர்களுக்கு எதிரான அவரது முதல் போட்டியில் மிகவும் அழுத்தமான சூழ்நிலையில் அவர் வெளிப்படுத்திய திறன் அவரைப்பற்றி அதிகமாக தெரிவிக்கிறது. அவர் எங்களுக்கு சில போட்டிகளை வென்றுகொடுப்பார் என நம்புகிறோம்." எனப் பேசினார் சஞ்சு.

உள்ளூர் போட்டிகளில் விளையாடிவரும் இளம் வீரரான ஜூரே 15 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆகாமல் இருந்தார். இந்த போட்டியில் இருந்து அதிகமாக கற்றுக்கொண்டதாக சஞ்சு சாம்சன் கூறியிருக்கிறார்.

IPL 2023 : 10 ஆண்டுகளுக்கு பிறகு ஓபனிங் செய்த அஷ்வின்; ஏன்? - கேப்டன் சஞ்சு சொன்னது என்ன?
GT vs DC : "முதல் அடி என்னோடதா இருக்கும்" - வெற்றிக்கு பிறகு ஹர்திக் பேசியது என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com