கத்தார் : முதல் ஆளாக வெளியேறியது போட்டியை நடத்தும் நாடு - கால்பந்து ரசிகர்கள் கேலி!

கால்பந்து வரலாற்றில் போட்டியை நடத்தும் நாடான கத்தார் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவி மோசமான சாதனையைப் படைத்தது. இப்போது முதல் சுற்றிலிலேயே வெளியேறும் இரண்டாவது நாடு என்ற சாதனையையும் படைத்திருக்கிறது.
கத்தார் : முதல் ஆளாக வெளியேறியது போட்டியை நடத்தும் நாடு - கால்பந்து ரசிகர்கள் கேலி!
கத்தார் : முதல் ஆளாக வெளியேறியது போட்டியை நடத்தும் நாடு - கால்பந்து ரசிகர்கள் கேலி!Twitter
Published on

கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளை நடத்தி வருகிறது கத்தார் நாடு. இதற்காக கத்தார் பெருமளவு செலவு செய்ததுடன் பல சிக்கல்களையும் விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. மைதானத்துக்கு வெளியில் மட்டுமல்லாமல் உள்ளும் கத்தாரின் நிலை மிக மோசமான ஒன்றாகத்தான் இருக்கிறது.

சில நாட்காளுக்கு முன்னர் கத்தார் அணி மோசமான சாதனையப் படைத்தது, அது என்னவென்றால் போட்டியை நடத்தும் நாட்டின் அணி முதல் போட்டியில் தோல்வியைத் தழுவுவது இதுவே முதன்முறை. இப்போது கால்பந்து வரலாற்றில் முதல் சுற்றிலிலேயே வெளியேறும் இரண்டாவது நாடு என்ற சாதனையையும் படைத்திருக்கிறது கத்தார்.

நேற்றையப் போட்டியில் செனகல் அணிக்கு எதிராக 1 - 3 என்ற புள்ளி விகிதத்தில் தோல்வியடைந்தது கத்தார். முதல் போட்டியில் எக்வடோர் அணியில் தோல்வியடைந்த விரக்தியில் இருந்தே ரசிகர்கள் எழாத நிலையில் மற்றொரு அடியாக இந்த தோல்வி இருக்கிறது.

கத்தார் : முதல் ஆளாக வெளியேறியது போட்டியை நடத்தும் நாடு - கால்பந்து ரசிகர்கள் கேலி!
உலகக் கோப்பை 2022: பாலைவனத்தை குளிர்ச்சியான மைதானமாக மாற்றும் கத்தார் - எப்படி சாத்தியம்?

உலகக் கோப்பைத் தொடரின் ஏ பிரிவில் அனைத்து அணிகளும் 2 போட்டிகளில் விளையாடிவிட்டன. இதில் கத்தார் அணி மட்டுமே ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. மேலும் இனி வரும் அனைத்துப் போட்டிகளிலும் வென்றால் கூட முதல் இரண்டு இடங்களைப் பெற முடியாது என்பதனால் அதிகாரப்பூர்வமாக உலகக் கோப்பை 2022 தொடரில் இருந்து வெளியேறும் முதல் அணியாக இருக்கிறது கத்தார். இதற்கு முன்பு 2010ம் ஆண்டு தென்னாப்ரிக்கா இதேபோல முதல் சுற்றிலேயே வெளியேறியது.

கத்தார் : முதல் ஆளாக வெளியேறியது போட்டியை நடத்தும் நாடு - கால்பந்து ரசிகர்கள் கேலி!
FIFA உலக கோப்பை 2022 : பெருமைக்கு எருமை மேய்ப்பதா? கத்தார் சந்திக்கும் சர்ச்சைகள் என்ன?

கத்தார் அணி ரசிகர்கள் நேற்று போட்டி முடிவதற்கு முன்னரே கடுப்படைந்து மைதானத்தை விட்டு வெளியே சென்று விட்டனர்.

12 ஆண்டுகளுக்கு முன்னர் கத்தார் உலகக் கோப்பை நடத்தும் வாய்ப்பை பெற்றது. இத்தனை ஆண்டுகளாக இந்த தொடருக்காக காத்திருந்த ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். சுமார் 20 லட்சம் கோடி ரூபாயில் நவீன மைதானங்கள், விமான நிலையங்கள், ஹோட்டல்கள், சாலைகள், பொழுதுபோக்கு பூங்காங்கள் என கத்தார் செய்த செலவுகள் ரசிகர்கள் கண்களில் செல்லாக்காசாகின.

இப்போது கத்தார் சமூக வலைத்தளங்களில் ட்ரால் செய்யப்பட்டு வருகிறது.

கத்தார் : முதல் ஆளாக வெளியேறியது போட்டியை நடத்தும் நாடு - கால்பந்து ரசிகர்கள் கேலி!
FIFA WC 2022: விடுமுறை அறிவித்த சவுதி அரசர்; அர்ஜென்டினாவை வீழ்த்தி சவுதி வரலாற்று சாதனை!
கத்தார் : முதல் ஆளாக வெளியேறியது போட்டியை நடத்தும் நாடு - கால்பந்து ரசிகர்கள் கேலி!
"FIFA உலகெங்கிலும்..." 50 GB டேட்டா இலவசமாக கிடைக்கிறதா? - உண்மை என்ன?

ஃபிஃபாவின் உலகக் கோப்பை தரவரிசைப்பட்டியலில் 50வது இடத்தில் இருக்கும் கத்தார் அணி கோப்பையை வெல்லும் என்றோ சாதனைகள் படைக்கும் என்றோ யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால் ஆசியக் கோப்பையை வென்றிருக்கும் அணியிடம் இத்தனை மோசமான தோல்வி எதிர்பார்க்காத ஒன்று!

கத்தார் : முதல் ஆளாக வெளியேறியது போட்டியை நடத்தும் நாடு - கால்பந்து ரசிகர்கள் கேலி!
FIFA : இந்திய கால்பந்து கூட்டமைப்புக்கு தடை விதித்த ஃபிஃபா - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com