பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 11ஆம் வகுப்பு மாணவி - என்ன நடந்தது?

11ஆம் வகுப்பு மாணவி ஒருவர், குழந்தையைப் பெற்றெடுத்ததை ஒப்புக்கொண்டார். வகுப்பில் இருக்கும்போது தனக்கு வலி ஏற்பட்டதாகவும், அதனால் கழிவறைக்கு சென்று தானே குழந்தையை ஈன்றதாகவும் மாணவி தெரிவித்தார்.
பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 11ஆம் வகுப்பு மாணவி
பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 11ஆம் வகுப்பு மாணவிcanva

11ஆம் வகுப்பு மாணவி பள்ளியின் கழிவறையில் குழந்தையை பெற்றெடுத்து, தொப்புள் கொடியை பேனாவை வைத்து துண்டித்துள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

சிதம்பரம், கடலூர் பகுதியில் அரசு பள்ளி கழிவறை அருகே உள்ள புதரில் பச்சிளம் குழந்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து பள்ளி நிர்வாகம் புவனகிரி காவல் துறைக்கு தகவல் அளித்தது. தகவலின் பேரில் பள்ளிக்கு விரைந்த போலீசார், குழந்தையின் உடலை கைப்பற்றி, விசாரணைகள் மேற்கொண்டனர். 

பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 11ஆம் வகுப்பு மாணவி
சோமேட்டோ ஊழியராக பள்ளி சிறுவன்: இணையத்தில் சர்ச்சை - நிறுவனத்தின் விளக்கம் என்ன?

விசாரணையில், அதே பள்ளியில் படிக்கும் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர், அந்த குழந்தையைப் பெற்றெடுத்ததை ஒப்புக்கொண்டார். வகுப்பில் இருக்கும்போது தனக்கு பிரசவ வலி ஏற்பட்டதாகவும், அதனால் கழிவறைக்கு சென்று தானே  குழந்தையை ஈன்றதாகவும் மாணவி தெரிவித்தார்.

குழந்தை பிறந்த பிறகு, தொப்புள் கொடியை பேனாவை வைத்து துண்டித்துள்ளார் மாணவி. குழந்தையை அருகே இருந்த புதரில் வீசி விட்டு, எதுவும் நடக்காதது போல வகுப்பறைக்கு திரும்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. 

மேலும் தான் கர்ப்பமாக இருந்த விஷயம் தன் பெற்றொருக்கு தெரியாது என்றும் மாணவி கூறியுள்ளார். முறையான மருத்துவ உதவி இல்லாமல் மாணவி தானே பிரசவம் பார்த்துக்கொண்டதால் குழந்தை இறந்திருக்கலாம் என காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது. 

இந்நிலையில், மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது யார் என்ற விசாரணை தீவிரப் படுத்தப்பட்டது. மாணவியின் கிராமத்தை சேர்ந்தவர்கள் , குடும்பத்தார் சிலரையும் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்ததாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையிடம் காவல் துறையினர் தெரிவித்தனர்.

மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், அதே கிராமத்தை சேர்ந்த சிறுவனை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து சிறுவர் கூர்நோக்கு இல்லத்திற்கு அனுப்பிவைத்தனர்.

தனியார் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வரும் அந்த மாணவனும், பாதிக்கப்பட்ட மாணவியும் காதலித்து வந்ததும் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் சுற்றுவட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பள்ளி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த 11ஆம் வகுப்பு மாணவி
இறுதி சடங்கில் கண் விழித்த குழந்தை, மீண்டும் இறந்த சோகம் - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com