இந்தியாவின் முதல் ’அமைதியான’ ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல் - காரணம் என்ன?

ரயில் நிலையத்தில் இருந்து வண்டி புறப்படும் நேரம், வந்தடையும் நேரம், ரயில் எண், நடைமேடை எண் உள்ளிட்ட தகவல்கள் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்பட்டன. இதை தவிர மக்களுக்கு உதவ, உதவி மையங்களில் ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.
Chennai: இந்தியாவின் முதல் ’அமைதியான’ ரயில் நிலையம்- இனி டிஜிட்டல் திரையில் அறிவிப்புகள்?
Chennai: இந்தியாவின் முதல் ’அமைதியான’ ரயில் நிலையம்- இனி டிஜிட்டல் திரையில் அறிவிப்புகள்? ட்விட்டர்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் இந்தியாவின் முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறியுள்ளது.

எப்போதும் மனித இரைச்சலோடு காணப்படும் 150 வருட பழமையான டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் ரயில் நிலையம், கடந்த ஞாயிறு அன்று அமைதி காத்தது.

இதற்கு காரணம் ஒலிபெருக்கிகளில் அறிவிப்புகளை கொடுத்து வந்த முறை மாற்றப்பட்டு, டிஜிட்டல் திரையில் ரயில்கள் குறித்த தகவல்கள், அறிவிப்புகளை விடுத்ததே.

ரயில் நிலையத்தில் இருந்து வண்டி புறப்படும் நேரம், வந்தடையும் நேரம், ரயில் எண், நடைமேடை எண் உள்ளிட்ட தகவல்கள் டிஜிட்டல் திரையில் ஒளிபரப்பப்பட்டன. இதை தவிர மக்களுக்கு உதவ, உதவி மையங்களில் ஊழியர்கள் அமர்த்தப்பட்டுள்ளனர்.

விமான நிலையங்களில் பின்பற்றப்படுவது போல, ரயிலின் தகவல்களை நிமிடத்திற்கு நிமிடம் இத்திரை காட்சிப்படுத்தும். பல தரப்பட்ட மக்கள் சென்னையில் வசித்து வருவதனால், தமிழ், ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் ரயிலின் வருகை மற்றும் புறப்படும் தகவல்கள் திரையில் தோன்றும்.

சென்ட்ரலின் மூன்று நுழைவாயில்களிலும் (எம்டிசி பஸ் நிறுத்தம், வால் டாக்ஸ் சாலை மற்றும் புறநகர் முனையம்) இந்த திரை வைக்கப்பட்டிருக்கிறது.

Chennai: இந்தியாவின் முதல் ’அமைதியான’ ரயில் நிலையம்- இனி டிஜிட்டல் திரையில் அறிவிப்புகள்?
Indian Railways : 90 கன்டெய்னர்களுடன் புறப்பட்ட சரக்கு ரயில் காணாமல் போனதா? - Fact Check

புறநகர் ரயில்களுக்கு வழக்கம்போல ஒலிபெருக்கி அறிவிப்புகள் தொடர்ந்து அளிக்கப்படும். வெளியூர் செல்லும் ரயில்களுக்கு மட்டுமே இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என சென்னை ரயில்வே வட்டாரம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரங்களும் இனிமேல் ஒலிபெருக்கியில் இடம்பெறாது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தவிர, கண்பார்வையற்றோருக்கு ப்ரெயிலி மேப்கள் , மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் க்யூ ஆர் கோட்கள் ஒட்டப்பட்டுள்ளன. இவற்றை ஸ்கேன் செய்தால் தோன்றும் வீடியோவில் ரயில் குறித்த தகவல்கள் சைகை மொழியில் அவர்களுக்கு விளக்கப்படும்.

இது செயல்முறை திட்டம் மட்டுமே, மக்களின் வரவேற்பை பொறுத்து நிரந்தர மாற்றத்தை கொண்டுவருவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Chennai: இந்தியாவின் முதல் ’அமைதியான’ ரயில் நிலையம்- இனி டிஜிட்டல் திரையில் அறிவிப்புகள்?
டிஜிட்டல் மீடியா : மக்களிடையே பிளவை ஏற்படுத்துகிறதா? - உண்மை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com