Chennai Flood: "மின் ஊழியர்கள் பலி" என பொய் செய்தி பரப்பும் திமுக ஆதரவாளர்கள் - Fact Check

"மின்சாரம் வழங்க அரசை அவசரப்படுத்தியதன் விளைவாக 5 மின் ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்" என மின்சார வசதிகளை சீர் செய்யக்கோரும் மக்களை குற்றவாளிகளாக்கும் பொருட்டு வதந்திகளை பரப்பி வருகின்றனர்.
Chennai Flood: "மின் ஊழியர்கள் பலி" என பொய் செய்தி பரப்பும் திமுக ஆதரவாளர்கள் - Fact Check
Chennai Flood: "மின் ஊழியர்கள் பலி" என பொய் செய்தி பரப்பும் திமுக ஆதரவாளர்கள் - Fact CheckTwitter

சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் ஐந்து நாட்களாகியும் பழையநிலைக்கு திரும்பமுடியாமல் தத்தளித்துவரும் சூழல் நிலவுகிறது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை தன்னார்வலர்கள் வழங்க இணையம் உதவியாக இருந்துவருகிறது. ஆனால் அதே இணையத்தை போலி செய்திகளை பரப்பவும் பயன்படுத்தி வருகின்றனர்.

வெள்ள பாதிப்புகளை முழுவதும் அறியாமலே "மீண்டது சென்னை" என்றும் அரசு ஊழியர்களோ, அதிகாரிகளோ, அமைச்சர்களோ எட்டிக்கூட பார்க்காத பகுதிகளில் எல்லா உதவியும் கிடைத்துவிட்டது போலவும் பொய் செய்திகளை பரப்பி வருகின்றனர் ஆளுங்கட்சியினர்.

5 நாட்களாக மின்சாரம் இல்லாமல் தகவல்தொடர்பு துண்டிக்கப்பட்டு தனித்தீவில் வாழ்பதுபோல கையறு நிலையில் மக்கள் இருக்கின்றனர்.

தண்ணீரை விரைவாக வடியச் செய்துவிட்டு மின்சாரத்தை வழங்கவேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. இந்த நிலையில், "மின்சாரம் வழங்க அரசை அவசரப்படுத்தியதன் விளைவாக 5 மின் ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்" என மின்சார வசதிகளை சீர் செய்யக்கோரும் மக்களை குற்றவாளிகளாக்கும் பொருட்டு வதந்திகளை பரப்பி வருகின்றனர்.

Chennai Flood: "மின் ஊழியர்கள் பலி" என பொய் செய்தி பரப்பும் திமுக ஆதரவாளர்கள் - Fact Check
Chennai Floods: 'புயலுக்கு பின் அவலம்' - தலைநகரின் நிலை என்ன?

இந்த புகைப்படத்தை பயன்படுத்தி இம்மாதிரியான செய்திகளை ட்விட்டரில் பலர் பதிவு செய்தும் பின்னர் நீக்கியும் இருக்கின்றனர்.

இந்த புகைப்படம் கடந்த 2020ம் ஆண்டு கனமழையில் உயிரிழந்த மின் ஊழியர் மற்றும் உதவியாளருடையது. காஞ்சிபுரம் மாவட்டம் ஈஞ்சம்பாக்கம் பகுதியில் இவர்களுக்கு மின்விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

அப்போதே செய்திகளிலும் இந்த புகைப்படங்கள் வந்திருக்கின்றன.

சென்னை வெள்ளத்தில் உயிரைப்பணயம் வைத்து மின் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆனால் போலி செய்திகளை பரப்பி விமர்சனங்களில் இருந்து அரசைக் காக்க எண்ணுவதை ஏற்க முடியாது.

Chennai Flood: "மின் ஊழியர்கள் பலி" என பொய் செய்தி பரப்பும் திமுக ஆதரவாளர்கள் - Fact Check
Chennai: 10ம் தேதி வருகிறதா அடுத்த புயல்? Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com