நள்ளிரவில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் காவலர் - ஓர் நெகிழ்ச்சி சம்பவம்

அந்த பெண்ணிற்கு வலி அதிகமாகவே, துரிதமாக செயல்பட்டு அவரே அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் ஆம்புலன்ஸ் வந்ததும் தாயும் சேயும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
நள்ளிரவில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் காவலர்
நள்ளிரவில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் காவலர்twitter

நள்ளிரவில் பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்துள்ளார் வேலூரை சேர்ந்த பெண் காவலர் ஒருவர். 

வேலூரில், கடந்த ஞாயிற்றுக் கிழமை நள்ளிரவு சுமார் 2.30 மணிக்கு, நைட் டியூட்டி பார்ப்பதற்காக புறப்பட்டார் பெண் தலைமைக் காவலர் இளவரசி. அவர் பணிக்கு சென்றுகொண்டிருக்கும் வழியில், பெண் ஒருவரின் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

சத்தம் வந்த இடத்தை நோக்கிச் சென்றபோது அங்கு ஒரு நிறைமாத கர்ப்பிணி பிரசவ வலியால் துடிதுடித்துக் கொண்டிருப்பதை இளவரசி பார்த்துள்ளார்.

நள்ளிரவில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் காவலர்
குழந்தை பிறந்ததை பார்ட்டி வைத்து கொண்டாடிய சிறைவாசிகள் - ஒரு நெகிழ்ச்சி சம்பவம்

உடனடியாக அவர் பணிபுரியும் காவல் நிலையத்திற்கும், ஆம்புலன்ஸுக்கும் தகவல் அளித்து உதவி நாடினார். ஆனால், அந்த பெண்ணிற்கு வலி அதிகமாகவே, துரிதமாக செயல்பட்டு அவரே அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் ஆம்புலன்ஸ் வந்ததும் தாயும் சேயும் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 

விசாரித்ததில், அந்த கர்ப்பிணி பெண்ணின் பெயர் ஷபானா. சித்தூர் பகுதியை சேர்ந்த அவருக்கு சானு என்பவருடன் திருமணமாகி 10 வயதில் ஒரு மகன் இருக்கிறான். சமீபத்தில் அவரது கணவர் அவரை விட்டுச் சென்றதாக ஷபானா தெரிவித்தார். பெற்றோர் இருவரும் உயிருடன் இல்லாத நிலையில், அந்த பெண்ணின் அண்ணனும் அவர் கைவிட்டுவிட்டதாக அவர் தெரிவித்தார். 

தன் பத்து வயது மகனுடன் அந்த கர்ப்பிணி பெண், சாலையில் படுத்து உறங்கி வருவதாகவும், அக்கம் பக்கம் உள்ளவர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு வாழ்ந்து வருவதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். 

"நான் மருத்துவமனைக்குச் சென்று அவளைச் சந்தித்தேன். தாயும் சேயும் நலமுடன் உள்ளனர். அவர் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு என்னை சந்திக்குமாறு நான் அவரிடம் கூறியுள்ளேன். அந்த பெண்ணுக்கும் அவரது குழந்தைகளுக்கும் தக்க உதவி செய்து தருவதாக கூறியுள்ளேன் "என்று இளவரசி கூறினார். 

பிறந்த குழந்தையுடன் பெண் காவலர் இளவரசி எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. தக்க நேரத்தில் கர்ப்பிணி பெண்ணுக்கு உதவிய பெண் போலீஸுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன

நள்ளிரவில் கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பெண் காவலர்
"அம்மா எனும் மந்திரமே": 25 வருடம் கழித்து இணைந்த தாய்-மகன்; ஓர் நெகிழ்ச்சி சம்பவம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com