”மீனை சைவ உணவில் சேர்க்கவேண்டும்” ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை வைக்க காரணம் என்ன?

"தற்போது முட்டை சைவமா அசைவமா என்ற விவாதம் இருப்பது போல, பலர் இன்று சைவம் என்று சொல்லிக்கொண்டு அசைவம் சாப்பிட ஆரம்பித்துவிட்டது போல, மீனையும் சைவ உணவு பட்டியலில் சேர்த்துவிட்டால் நன்றாக இருக்கும்"
”மீனை சைவ உணவில் சேர்க்கவேண்டும்” ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை வைக்க காரணம் என்ன?
”மீனை சைவ உணவில் சேர்க்கவேண்டும்” ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை வைக்க காரணம் என்ன?Twitter

சமீபத்தில் நடைப்பெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் ’மீனை சைவ உணவில் சேர்க்கவேண்டும்’ என கோரிக்கை வைத்திருக்கிறார் தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன்.

பாண்டிச்சேரியில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் மத்திய மாநில அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் கிசான் கடன் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர் ரங்கசாமி, துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய மீன்வளத்துறை இணை அமைச்சர் எல் முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பயனாளிகளுக்கு தமிழிசை அட்டைகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், புதுச்சேரியில் தற்போது மீனாட்சி நடைபெற்று வருகிறது என்று கூறினார். மீனாட்சி எப்படி இருக்கும் என்றால், முட்டையிட்டு கண்களில் வைத்து குஞ்சு பொறித்து வளர்ப்பது போல இருக்கும்.

அதுபோல தான் மத்திய அரசு தொலைவில் இருந்தாலும் நாட்டினை தன் கண்களில் வைத்து காத்து வருகிறது என்று கூறினார்

தொடர்ந்து பேசியவர், “எனக்கு மீன் வகை உணவுகள் என்றால் மிகவும் பிடிக்கும். மீன் குழம்பு என்றால் நன்றாக சாப்பிடுவேன். அதனால் நான் ஒரு யோசனை செய்தேன்.”

”மீனை சைவ உணவில் சேர்க்கவேண்டும்” ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை வைக்க காரணம் என்ன?
‘மீன் பிரசாதம்’ மூலம் ஆஸ்துமாவை குணப்படுத்த முடியுமா? இந்த விநோத நிகழ்வின் பின்னணி என்ன?

”தற்போது முட்டை சைவமா அசைவமா என்ற விவாதம் இருப்பது போல, பலர் இன்று சைவம் என்று சொல்லிக்கொண்டு அசைவம் சாப்பிட ஆரம்பித்துவிட்டது போல, மீனையும் சைவ உணவு பட்டியலில் சேர்த்துவிட்டால் நன்றாக இருக்கும். இது மீனவ சகோதரர்களுக்கு இன்னும் பலனாக இருக்குமே என்று எனக்கு தோன்றியது” என்றார் தமிழிசை.

மீன் சாப்பிடுவதால் உடல் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் எனவும் நோய்நொடி இல்லாமலும் இருக்கலாம் என்றும் தமிழிசை கூறியுள்ளார்.

துணை நிலை ஆளுநர் தமிழிசையின் இந்த கோரிக்கை பேசு பொருளாகியுள்ளது

”மீனை சைவ உணவில் சேர்க்கவேண்டும்” ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கோரிக்கை வைக்க காரணம் என்ன?
தமிழ்நாடு : ஆளுநருக்கு தமிழிசை சப்போர்ட்; காண்டான கமல் - முழுமையான பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com