நாமக்கல்: இந்த கோவிலில் சன்னதிகளே இல்லை - ஒரே இடத்தில் இருக்கும் 14 தெய்வங்களின் சிலை!

காலபைரவர், அர்த்தநாரீஸ்வரர் சிவலிங்கம், ஆண் சிவலிங்கம், பெண் சிவலிங்கம், பழனி மலை முருகன் உள்ளிட்ட தெய்வங்கள் இங்கு வீற்றிருக்கின்றன. முருகனின் சிலையானது, குன்றின் மேல் வைக்கப்பட்டுள்ளது, பழனி மலையில் வீற்றிருப்பது போல காட்சியளிக்கிறது
நாமக்கல்: இந்த கோவிலில் சன்னதிகளே இல்லை - ஒரே இடத்தில் இருக்கும் 14 தெய்வங்களின் சிலை!
நாமக்கல்: இந்த கோவிலில் சன்னதிகளே இல்லை - ஒரே இடத்தில் இருக்கும் 14 தெய்வங்களின் சிலை!ட்விட்டர்

இந்தியாவில் கோவில்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. அதில் பல கோவில்களை பற்றி, நாம் கேள்விப்படாமல் இருக்கிறோம்.

அப்படி நம் கவனத்தில் இருந்து தப்பிய கோவில்களில் ஒன்று இந்த சித்தர் கோவில். தமிழ்நாட்டின், நாமக்கல் மாவட்டம் கூனவேலம்பட்டி புதூர், ராசிபுரத்தில் அமைந்திருக்கிறது இந்த பதிணென் சித்தர் மடம்.

இந்த கோவிலில் மொத்தம் 14 கடவுள்களை நாம் வழிபடலாம். இதன் சிறப்பே இந்த 14 தெய்வங்களும் ஒரே இடத்தில் வீற்றிருப்பது தான்.

பொதுவாக ஒன்றுக்கும் மேற்பட்ட தெய்வங்கள் உள்ள கோவில்களில் சன்னதிகள் தனித்தனியாக இருக்கும். அவற்றில் ஒன்று முக்கிய தெய்வமாக பூஜிக்கப்படும். ஆனால் இந்த கோவிலில் 14 தெய்வங்களும் ஒரே இடத்தில் இருக்கின்றன.

காலபைரவர், அர்த்தநாரீஸ்வரர் சிவலிங்கம், ஆண் சிவலிங்கம், பெண் சிவலிங்கம், பழனி மலை முருகன் உள்ளிட்ட தெய்வங்கள் இங்கு வீற்றிருக்கின்றன.

முருகனின் சிலையானது, குன்றின் மேல் வைக்கப்பட்டுள்ளது, பழனி மலையில் வீற்றிருப்பது போல காட்சியளிக்கிறது

சிவன் மற்றும் பார்வதியின் சிலைகள் கோவிலின் குளத்தில் இருக்கின்றன. இது பார்வையாளர்களை அதிகமாக ஈர்க்கிறது.

இந்த 14 தெய்வங்களை வணங்கிவிட்டு, வெளியில் வரும்போது, கோவிலின் மத்தியில் காளியின் சிலை அமைந்திருப்பதை பார்க்கலாம். மற்ற தெய்வங்களுக்கான வழிபாடுகள் முடிந்த பின்னர், காளிக்கு தனியாக வழிபாடு நடக்கிறது. காளியை வணங்கினால் வேண்டியது நடக்கும் என்கிறார் இந்த கோவிலின் பூசாரி.

விண்மீன்கள், கோள் தோஷங்கள், முன்னோரின் சாபங்கள் போன்றவை நீக்கப்படுகின்றன. இங்குள்ள 27 விண்மீன் பீடங்கள் மற்றும், ஒன்பது கோள்களுக்கான பீடங்களில் சித்தர் நெறிமுறைப்படி பூஜைகள் செய்தால் நாம் வேண்டியது நிச்சயமாக நடக்கும் என்பது இங்குள்ளவர்களின் ஐதீகம்.

மேலும் இந்த கோவிலின் வனப்பகுதியில் 27 விண்மீன்களுக்குரிய மரக்கன்றுகளை நட்டு வைத்து வழிபட்டு வருகின்றனர்

நாமக்கல்: இந்த கோவிலில் சன்னதிகளே இல்லை - ஒரே இடத்தில் இருக்கும் 14 தெய்வங்களின் சிலை!
கர்நாடகா : இங்கு ஆண்களுக்கு மட்டுமே அனுமதி - இந்த இந்திய கோவில் குறித்து தெரியுமா?

இந்த கோவிலை தவிர, நாமக்கலில் எந்த எந்த இடங்களை பார்க்கலாம்?

  • ஆஞ்சநேயர் கோவில்

  • நரசிம்மர் கோவில்

  • எட்டுக்கை அம்மன் கோவில்

  • கொல்லி மலை போட் ஹவுஸ்

  • சீக்கு பாறை வியூ பாயிண்ட்

  • சித்தர் குகைகள்

நாமக்கல்: இந்த கோவிலில் சன்னதிகளே இல்லை - ஒரே இடத்தில் இருக்கும் 14 தெய்வங்களின் சிலை!
இந்தியாவில் நூற்றாண்டுகளாக ராவணனை வழிபடும் மக்கள் - எங்கெல்லாம் இருக்கிறது ராவணக் கோவில்?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com