ஒரு ஊர் முழுக்க ஆண் சமையல்காரர்கள்- ராமநாதபுரத்தில் இருக்கும் இந்த கிராமம் பற்றி தெரியுமா?

காளையூரில் உள்ள ஆண் சமையல்காரர்கள் தென்னிந்தியா முழுவதும் ஆறு மாதங்கள் பயணம் செய்து, சமைத்து வருகிறார்கள். இந்த சமையல்காரர்களைப் பற்றி கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், அவர்கள் தங்கள் சொந்த குடும்பத்திற்காக சமைக்க மாட்டார்களாம்.
ஒரு ஊர் முழுக்க ஆண் சமைக்காரர்கள் - ராமநாதபுரத்தில் இருக்கும் இந்த கிராமம் பற்றி தெரியுமா?
ஒரு ஊர் முழுக்க ஆண் சமைக்காரர்கள் - ராமநாதபுரத்தில் இருக்கும் இந்த கிராமம் பற்றி தெரியுமா?Twitter

இந்திய நாடு, வரலாற்று இடங்கள், கோவில்களுக்கு மட்டுமல்லாமல் உணவுகளுக்கும் பெயர் பெற்றது.தென்னிந்திய உணவுகளுக்கு வெளிநாட்டில் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றாலும் மிகையாகது.

பெண்கள், ஆண்கள் இருவருமே சமையல் கலைகளில் தேறியவர்களாக இருப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் ஆண்கள் பெண்கள் என அனைவரும் சமையலில் வல்லுநர்களாகவே இருக்கிறார்.

இந்த கிராமத்தின் சிறப்பு குறித்து இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள காளையூர் கிராமத்தில் தான் அனைவரும் சமையல் கலைகளில் இருக்கின்றனர்.

ஆண் சமையல்காரர்களின் கிராமம்

இந்த தனித்துவமான கிராமத்திற்குள் நீங்கள் நுழையும்போது, அவர்கள் உணரும் நறுமணம் அவர்களை விருந்தாக அழைக்கும்.

காளையூர் உணவுப் பிரியர்களின் சொர்க்கம் என்றே சொல்லலாம். காளையூர் கிராமத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த கிராமத்தின் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சிறந்த சமையல்காரர் வசித்து வருகிறார். காளையூரில் இந்தியாவின் சிறந்த ஆண் சமையல்காரர்கள் சுமார் 200 பேர் உள்ளனர்.

சுமார் 500 நூற்றாண்டுகளுக்கு முன்பு, இப்பகுதியில் வாழ்ந்த பணக்கார ரெட்டியார் சமையல் கலையில் சிறந்தவர்களுக்கு வேலை வழங்கினார்.

அக்காலத்தில் விவசாயம் லாபகரமான வேலையாக இல்லாததால், ஆண்கள் வேறு எந்த தொழிலிலும் திறமையற்றவர்களாக இருந்தனர். அதனால் அவர்கள் சமையலில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டனர்.

அப்படித்தான் இந்த உணவு பாரம்பரியம் தொடங்கியது.

காளையூரில் உள்ள ஆண் சமையல்காரர்கள் தென்னிந்தியா முழுவதும் ஆறு மாதங்கள் பயணம் செய்து, சமைத்து வருகிறார்கள். மற்ற நாட்களில், அவர்கள் திருமணம் அல்லது பிறந்தநாள் விருந்துகளை தயார் செய்கின்றனர்.

தேவையான அனைத்து பொருட்களும் வழங்கப்பட்டால், சமையல்காரர்களால் வெறும் 3 மணி நேரத்தில் ஆயிரம் பேருக்கு விருந்து தயார் செய்ய முடியுமாம்.

ஒரு ஊர் முழுக்க ஆண் சமைக்காரர்கள் - ராமநாதபுரத்தில் இருக்கும் இந்த கிராமம் பற்றி தெரியுமா?
இந்தியாவில் இருக்கும் சூனியக்கார கிராமம் பற்றி தெரியுமா?

சமையற்காரர்கள் எப்படி உருவாகிறார்கள்?

அங்கு யாரும் உடனே சமையல் கலையில் வல்லுநர்களாகவில்லை மாறாக பயிற்சி மேற்கொள்கின்றனர்.

காய்கறிகளை வெட்டுவது, வயல்களில் இருந்து புதிய பொருட்களை சேகரிப்பது என பல விஷயங்களை கற்றுக்கொள்கின்றன்ர். குறைந்தது 10 ஆண்டுகள் பயிற்சி எடுத்துகொள்கின்றனர்.

இந்த சமையல்காரர்களைப் பற்றி கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், அவர்கள் தங்கள் சொந்த குடும்பத்திற்காக சமைக்க மாட்டார்களாம்.

ஒரு ஊர் முழுக்க ஆண் சமைக்காரர்கள் - ராமநாதபுரத்தில் இருக்கும் இந்த கிராமம் பற்றி தெரியுமா?
அசாம் : ஒரே ஒரு குடும்பம் மட்டும் வசிக்கும் இந்திய கிராமம் - பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com