அமைச்சர் பொன்முடி வீட்டில்  திடீர் ரெய்டு - அடுத்த டார்கெட் இவரா? பின்னணி என்ன?
அமைச்சர் பொன்முடி வீட்டில் திடீர் ரெய்டு - அடுத்த டார்கெட் இவரா? பின்னணி என்ன?Twitter

அமைச்சர் பொன்முடி வீட்டில் திடீர் ரெய்டு - அடுத்த டார்கெட் இவரா? பின்னணி என்ன?

தற்போது திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று பொன்முடி வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனி மற்றும் விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
Published on

சென்னை மற்றும் விழுப்புரத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் வீடுகள் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி வருகிறது. இன்று காலை முதல் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கெனவே, திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் கடந்த ஜூன் மாதம் 13-ம் தேதி திடீர் சோதனையை மேற்கொண்டது அமலாக்கத்துறை.

இந்த நிலையில் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை திடீர் சோதனை நடத்தி வருகிறது.

முன்னதாக 1996 - 2001 காலகட்டத்தில் பொன்முடி போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்தபோது நில அபகரிப்பு மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு தொடரப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே உள்ள பூத்துறை கிராமத்தில் செம்மண் குவாரியில் மோசடி செய்த விவகாரத்தில் தற்போதைய உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, அவரது மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யுமான பொன்.கௌதமசிகாமணி, திமுக நிா்வாகிகள் 7 போ் மீது கடந்த 2012 ஆம் ஆண்டில் விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்கு வர, அந்த வழக்கிலிருந்து பொன்முடி இந்த மாத தொடக்கத்தில் தான் விடுவிக்கப்பட்டார்.

தற்போது திடீரென அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று பொன்முடி வீட்டில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சைதாப்பேட்டையில் ஸ்ரீநகர் காலனி மற்றும் விழுப்புரத்தில் உள்ள பொன்முடியின் வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்றுகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் பொன்முடி வீட்டில்  திடீர் ரெய்டு - அடுத்த டார்கெட் இவரா? பின்னணி என்ன?
செந்தில் பாலாஜி பதவி நீக்கம்: எழும் கண்டனங்கள்; மாறிய உத்தரவு - ஆளுநரின் அதிகாரம் என்ன?

மேலும், பொன்முடியின் மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்றுவருவதாகக் கூறப்படுகிறது.

மொத்தமாக ஐந்து இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இவ்வாறு அடுத்தடுத்து அமைச்சர்கள் வீட்டில் ரெய்டு நடைபெறுவதால் திமுகவில் சலசலப்பு நிலவி வருகிறது.

எதன் அடிப்படியில் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது என்பது குறித்து அமலாக்கத்துறை தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. விரைவில் சோதனைக்கான காரணம் குறித்த அறிக்கையை அமலாக்கத்துறை அதிகாரிகள் வெளியிடுவார்கள் என்று கூறப்படுகிறது.

அமைச்சர் பொன்முடி வீட்டில்  திடீர் ரெய்டு - அடுத்த டார்கெட் இவரா? பின்னணி என்ன?
செந்தில் பாலாஜி: எந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்? அரசியல் பின்னணி என்ன? முழு விவரம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

logo
Newssense
newssense.vikatan.com