அரவக்குறிச்சி டூ அமெரிக்கா : நாசாவிற்கு செல்லும் அரசு பள்ளி மாணவி ஷோபனா - யார் இவர்?

"நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தையும் அடுத்த மாதம் சென்று பார்வையிட உள்ளேன். இது அறிவியல் ஆராய்ச்சியாளராக என்னை உருவாக ஒரு உந்து சக்தியை என்னுள் ஏற்படுத்தியுள்ளது" என்றார். பலரும் ஷோபனாவை பாராட்டி வருகின்றனர்.
அரவக்குறிச்சி டூ அமெரிக்கா : நாசாவிற்கு செல்லும் அரசு பள்ளி மாணவி ஷோபனா - யார் இவர்?
அரவக்குறிச்சி டூ அமெரிக்கா : நாசாவிற்கு செல்லும் அரசு பள்ளி மாணவி ஷோபனா - யார் இவர்?Twitter

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள செம்பகனம் நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருபவர் தான் ஷோபனா.

இவர் தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட புதிய அறிவியல் கண்டுபிடிப்புக்கான போட்டிகளில் கலந்து கொண்டார்.

பள்ளி அளவில், மாவட்ட அளவில் தேர்வு பெற்ற இந்த மாணவி சமீபத்தில் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டார்.

இந்த போட்டியில் "காற்றின் அழுத்தம் மற்றும் நீர் அலாரம்" என்ற தலைப்பில் இவர் கண்டுபிடித்த புதிய கண்டுபிடிப்பு முதல் பரிசை தட்டி சென்றது.

இதனையடுத்து அடுத்த மாதம் அமெரிக்காவில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவிற்கு கல்வி சுற்றுலா செல்ல உள்ளார் ஷோபனா.

இதே போல போட்டிகளில் வெற்றிப்பெற்ற 25-க்கும் மேற்பட்ட மாணவ மாணவ மாணவிகள் அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம், லாஸ் ஏஞ்சல்ஸ் திரைப்பட நகரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு கோடை கால கல்வி சுற்றுலா செல்லவுள்ளனர்.

அரவக்குறிச்சி டூ அமெரிக்கா : நாசாவிற்கு செல்லும் அரசு பள்ளி மாணவி ஷோபனா - யார் இவர்?
18 வயதில் MBBS, 22-ல் IAS அதிகாரி, இப்போது கோடிகளில் சம்பாதிக்கும் தொழிலதிபர்- யார் இவர்?

இந்நிலையில், மாணவி ஷோபனாவை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

இது குறித்து மாணவி ஷோபனா கூறுகையில், ”கரூர் மாவட்டத்தில் உள்ள மிக சிறிய கிராமமான செம்பகனம் கிராமத்திலிருந்து அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு செல்வதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டது மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது.

பள்ளி அளவில், மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளேன்”

”இந்த வெற்றிக்காக சென்னையில் உள்ள பல அறிவியல் ஆய்வு நிலையங்கள் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராக்கெட் ஏவுதளம் ஆகியவற்றையும் பார்வையிட அழைத்துச் சென்றார்கள்.

அங்கு நடைபெற்ற போட்டிகளிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளேன், மேலும், நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தையும் அடுத்த மாதம் சென்று பார்வையிட உள்ளேன்.

இது அறிவியல் ஆராய்ச்சியாளராக என்னை உருவாக ஒரு உந்து சக்தியை என்னுள் ஏற்படுத்தியுள்ளது” என்றார். பலரும் ஷோபனாவை பாராட்டி வருகின்றனர்.

அரவக்குறிச்சி டூ அமெரிக்கா : நாசாவிற்கு செல்லும் அரசு பள்ளி மாணவி ஷோபனா - யார் இவர்?
48,580 கி.மீ வேகத்தில் பூமியை நெருங்கும் விண்கல் - 4 ஆபத்துகள் குறித்து நாசா எச்சரிக்கை!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com