சென்னையில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் அறிமுகம் - எப்படி செயல்படுகிறது?

விற்பனை இயந்திரத்தில் இருந்து மதுபானம் பெறுவதற்கான முழு செயல்முறையும் வாடிக்கையாளரின் கோரிக்கையைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் எடுக்கும் என்று டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறினார்.
சென்னையில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் அறிமுகம் - எப்படி செயல்படுகிறது?
சென்னையில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் அறிமுகம் - எப்படி செயல்படுகிறது?Twitter
Published on

சென்னையில் உள்ள வணிக வளாகத்தின் எலைட் டாஸ்மாக் கடையில் முதன்முறையாக தானியங்கி மது விற்பனை இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

மெனுவில் இயங்கும் இயந்திரத்தில் நுகர்வோர் தங்களுக்கு விருப்பமான மதுபானங்களைத் தேர்ந்தெடுக்கலாம் என Tasmac வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, மதுபானத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, நுகர்வோர் பணமாகவோ அல்லது ஆன்லைனில் பணம் செலுத்துவதையோ தேர்வுசெய்யும் options இருக்கும்.

பணம் செலுத்தப்பட்டதும், மதுபானம் விற்பனை இயந்திரத்தின் அடிப்பகுதியில் நிறுவப்பட்ட ஒரு தட்டில் (பிக்கப் போர்ட்) அனுப்பப்படும்.

இது குறித்து டாஸ்மாக் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது,

வாடிக்கையாளரின் பதிலைப் பொறுத்து மற்ற உயர்தர மதுபானக் கடைகளிலும் மதுபான விற்பனை இயந்திரங்களை நிறுவ அரசு திட்டமிட்டுள்ளது.

இயந்திரத்தின் உள்ளமைக்கப்பட்ட சென்சார்கள் ஒரு நிலையான வெப்பநிலையை பராமரிப்பதாகவும் குளிர்பதனச் செயல்பாட்டின் மூலம் பானங்களை குளிர்ச்சியாக வைக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் அறிமுகம் - எப்படி செயல்படுகிறது?
சென்னை டூ புதுச்சேரி: Unlimited பீர் வழங்கும் பஸ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

(Rep)
(Rep)

விற்பனை இயந்திரத்தில் இருந்து மதுபானம் பெறுவதற்கான முழு செயல்முறையும் வாடிக்கையாளரின் கோரிக்கையைப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் எடுக்கும் என்று டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறினார்.

அமைச்சர் வி.செந்தில்பாலாஜி ஏற்கனவே அறிவித்தப்படி மாநிலத்தில் 500 டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களை மூடுவதற்கான ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக ஏப்ரல் 22ஆம் தேதி மாநில அரசு தெரிவித்தது.

ஏப்ரல் 24-ம் தேதி திருமண மண்டபங்களிலும் மதுபானம் வழங்கலாம் என அறிவித்து பின்னர் அரசு தனது முடிவை வாபஸ் பெற்று விளையாட்டு அரங்கம் தவிர மாநாட்டு மையங்கள் மற்றும் வணிக வளாகங்களில் மட்டும் மதுபானம் வழங்கப்படும் என்று கூறியது.

சென்னையில் தானியங்கி மது விற்பனை இயந்திரம் அறிமுகம் - எப்படி செயல்படுகிறது?
இந்தியாவின் முதல் ’அமைதியான’ ரயில் நிலையமாக மாறிய சென்னை சென்ட்ரல் - காரணம் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com