சென்னை டூ புதுச்சேரி: Unlimited பீர் வழங்கும் பஸ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?

இந்த பீர் பஸ் சேவை ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பீர் பேருந்தில் விதவிதமான உணவுகளை சாப்பிட்டுக்கொண்டே புதுச்சேரிக்கு பயணிக்கலாம்.
சென்னை டூ புதுச்சேரி: Unlimited  பீர் வழங்கும் பஸ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?
சென்னை டூ புதுச்சேரி: Unlimited பீர் வழங்கும் பஸ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?Twitter
Published on

புதுச்சேரி நீண்ட காலமாக ஒரு விருப்பமான சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது. சுற்றுலாவை மேம்படுத்தும் முயற்சியை முன்னெடுத்து புதிய சேவையை வழங்க புதுச்சேரியை சேர்ந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஒரு நாள் பயணம் செய்து திரும்பும் வகையில் புதிய பேருந்து சேவை தொடங்க உள்ளது.

இந்த பேருந்தின் பெயர் பீர் பஸ். என்ன சார் சொல்றீங்க? என்று பலரும் அதிர்ச்சியோடு ஒரு குழப்பத்தில் இருந்தனர்.

ஒரு வேளை பஸ்ஸில் பீர் கொடுப்பார்களோ, குடித்து கொண்டே புதுச்சேரிக்கு போகலாமோ? என்று கேட்டு வந்தனர். ஆனால் அப்படி இல்லை ‘பீர் பஸ்’ என அழைப்பதால், பேருந்தில் மது அருந்தலாம் என யாரும் நினைக்க வேண்டாம், பேருந்தில் பீர் குடிக்க அனுமதிக்க இல்லை. ஆனால் புதுச்சேரி அரசு அனுமதித்த இடத்தில் பேருந்து நிறுத்தப்படும். அங்கு பீர் அனுமதிக்கப்படும் என்கின்றனர்.

சென்னையில் வேலைக்கு செல்பவர்கள் எங்கேயாவது ஒரு 2 நாள் போக வேண்டும், பக்கத்தில் இருக்கும் பாண்டிச்சேரியாவது போயிட்டு வரலாம் என்று நினைப்பார்கள்.

வார இறுதி நாட்களை இப்படி ஜாலியாக கழிக்க விரும்புவோர்களுக்காக தான் இந்த புதிய சேவையை வழங்க புதுச்சேரியை சேர்ந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது.

புதுச்சேரியில் ப்ரூயிங் கோ-பாண்டி (brewing co pondy) என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ‘பீர் பஸ்’ என்ற புதிய சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த பீர் பஸ் சேவை ஏப்ரல் 22ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு ஒரு நாள் பயணமாக ஒரு நபருக்கு ரூ.3,000 வசூலிக்கப்படும். இந்த பீர் பேருந்தில் விதவிதமான உணவுகளை சாப்பிட்டுக்கொண்டே புதுச்சேரிக்கு பயணிக்கலாம்.

சென்னையில் இருந்து ஒரே நாளில் 35 முதல் 40 சுற்றுலா பயணிகள் புதுச்சேரிக்கு அழைத்துச் செல்லப்பட்டு மீண்டும் சென்னைக்கு பேருந்து வரும், இதற்கான முன்பதிவு துவங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுப்பயணத்தைப் பொறுத்தவரை, பேருந்து சென்னையில் இருந்து புறப்பட்டு பயணிகளை புதுச்சேரிக்கு அழைத்து சென்று அங்கு இருக்கும் மதுபான ஆலையில் அவர்களுக்கு விருந்தளிக்கும்.

சென்னை டூ புதுச்சேரி: Unlimited  பீர் வழங்கும் பஸ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?
ஒயின் குடித்தால் இதயத்துக்கு நல்லதா? ஆய்வுகள் சொல்வது என்ன?

அங்கு, பீர் எப்படி தயாரிக்கப்படுகிறது என்பதற்கான டெமோவுடன், மதுபான ஆலையை சுற்றிப் பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

அங்கு இரண்டு மணிநேரத்திற்கு வரம்பற்ற பீருடன் மதிய உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு பீர் பஸ் அறிவிப்பு குறித்த செய்திகளை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்தும், தங்கள் கருத்துக்களை பதிவிட்டும் வருகின்றனர்.

சென்னை டூ புதுச்சேரி: Unlimited  பீர் வழங்கும் பஸ் - எவ்வளவு கட்டணம் தெரியுமா?
ஒயின்: சுவையான இந்த பானத்தின் வரலாறு என்ன? உங்களுக்குத் தெரியாத உண்மைகள்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com