"நான் கிறிஸ்தவன், நிவாரண நிதி வழங்குவதில் ஒன்றிய அரசின் பாரபட்சம்" - உதயநிதி பேசியது என்ன?

நீங்கள் என்னை இந்து என்று கூறினால் இந்து, முஸ்லீம் என்று கூறினால் முஸ்லீம். எனக்கென எந்த சாதியும் எந்த மதமும் கிடையாது. குஜராத்தில் 2021ம் ஆண்டு புயல் அடித்த அடுத்தநாளே 1000 கோடி ரூபாய் கொடுத்தார்கள்.
"நான் கிறிஸ்தவன், நிவாரண நிதி வழங்குவதில் ஒன்றிய அரசின் பாரபட்சம்" - உதயநிதி பேசியது என்ன?
"நான் கிறிஸ்தவன், நிவாரண நிதி வழங்குவதில் ஒன்றிய அரசின் பாரபட்சம்" - உதயநிதி பேசியது என்ன?Twitter

சமீபத்தில் கிறிஸ்துமஸ் விழா ஒன்றி பேசிய உதயநிதி, "நான் கிறிஸ்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன். நான் போன வருடம் இப்படிப் பேசியது சர்ச்சையானது. இருந்தாலும் சொல்கிறேன் நான் கிறிஸ்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன். நான் படித்தது டான் போஸ்கோ பள்ளி, லயோலா கல்லூரி. நான் ஒரு கிறிஸ்தவன் என்பதுடன் நிறுத்திக்கொள்ள மாட்டேன்.

நீங்கள் என்னை இந்து என்று கூறினால் இந்து, முஸ்லீம் என்று கூறினால் முஸ்லீம். எனக்கென எந்த சாதியும் எந்த மதமும் கிடையாது. இதை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள்." எனப் பேசினார்.

மேலும், "சென்னை மழையில் நாம் எல்லாரும் பாதிக்கப்பட்டோம். உங்கள் வீடுகளிலும் தண்ணீர் வந்தது என்வீட்டிலும் வந்தது. ஆனால் நாங்கள் யாரும் வீட்டுக்குள் ஒழிந்துகொள்ளவில்லை. எல்லாரும் மக்களுடன் மக்களாக களத்தில் நின்றோம். இதுதான் திமுகவுக்கும் மற்ற கட்சிகளுக்கும் உள்ள வித்தியாசம்.

நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு எப்போது தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்துக்கொண்டுதான் இருக்கிறது. 2015 முதல் இன்று வரை தமிழ்நாட்டு அரசு பேரிட நிவாரணமாக கேட்டது 1,27,000 கோடி. ஆனால் ஒன்றிய அரசு கொடுத்தது 5300 கோடி. நாம் கேட்டதில் வெறும் 4.6 விழுக்காடு.

சென்னை மட்டும் தென் மாவட்ட வெள்ள நிவாரணமாக நாம் கேட்டது 21,700 கோடி. ஆனால் இதுவரை ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. வழக்கமாக நமக்கு கொடுக்க வேண்டிய 450 கோடி ரூபாயை கொடுத்துவிட்டு நிவாரணம் கொடுத்தது போல பேசுகிறார்கள்.

"நான் கிறிஸ்தவன், நிவாரண நிதி வழங்குவதில் ஒன்றிய அரசின் பாரபட்சம்" - உதயநிதி பேசியது என்ன?
நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு தமிழ்நாட்டு தலைவர்கள் பதிலடி!

இதுவே குஜராத்தில் 2021ம் ஆண்டு புயல் அடித்த அடுத்தநாளே 1000 கோடி ரூபாய் கொடுத்தார்கள். இதுவரை குஜராத்துக்கு கேட்காமலேயே 8000 கோடி ரூபாய் கொடுத்துள்ளார்கள்.

2014 முதல் நாம் 5,00,000 கோடி ரூபாய் ஒன்றிய அரசுக்கு வரி செலுத்தியிருக்கிறோம். ஆனால் நமக்கு 2,00,000 கோடி தான் திருப்ப கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் 2,00,000 கோடி வரி கொடுத்த உத்தரபிரதேசத்துக்கு 9,00,000 கோடி திருப்ப கொடுக்கப்பட்டுள்ளது." என்று பேசினார்.

"நான் கிறிஸ்தவன், நிவாரண நிதி வழங்குவதில் ஒன்றிய அரசின் பாரபட்சம்" - உதயநிதி பேசியது என்ன?
நிர்மலா சீத்தாராமன் தூத்துக்குடி வருகை?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com