தமிழ்நாடு : சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய ஆளுநர் - அப்படி என்ன பேசினார் முதல்வர்?

ஆளுநர் அந்த உரையில் குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தைகளான திராவிட மாடல், அண்ணல் அம்பேத்கர், அமைதிப் பூங்கா, பெருந்தலைவர் காமராஜர், சமூக நீதி, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளை வாசிக்காமல் தவிர்த்தார்.
தமிழ்நாடு: பேரவையிலிருந்து வெளியேறிய ஆளுநர் - அப்படி என்ன பேசினார் முதல்வர்?
தமிழ்நாடு: பேரவையிலிருந்து வெளியேறிய ஆளுநர் - அப்படி என்ன பேசினார் முதல்வர்?twitter
Published on

2023 ஆம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று நடைபெற்றது. மரபு படி, ஆளுநர் ஆர் என் ரவியின் உரையுடன் சட்டப்பேரவை தொடங்கப்பட்டது. ஆனால் ஆளுநர் தன் உரையை பேசவிடாமல், திமுக கூட்டணிக் கட்சிகள் கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

சமீபத்தில், தமிழ்நாட்டை தமிழகம் என்று குறிப்பிடுவது தான் சரியாக இருக்கும் என்று ஆளுநர் பேசியிருந்தது பெரும் சர்ச்சையை உண்டாக்கியது. இதனாலேயே அவருக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

அதனை பொருட்படுத்தாமல் தமிழ்நாடு ஆளுநர் ஆர் என் ரவி தனது உரையை தொடர்ந்தார்.

தமிழ்நாடு: பேரவையிலிருந்து வெளியேறிய ஆளுநர் - அப்படி என்ன பேசினார் முதல்வர்?
தமிழ்நாடு : ஆளுநருக்கு தமிழிசை சப்போர்ட்; காண்டான கமல் - முழுமையான பின்னணி என்ன?

ஆளுநர் அந்த உரையில் குறிப்பிடப்பட்டிருந்த வார்த்தைகளான திராவிட மாடல், அண்ணல் அம்பேத்கர், அமைதிப் பூங்கா, பெருந்தலைவர் காமராஜர், சமூக நீதி, பெரியார் உள்ளிட்ட வார்த்தைகளை வாசிக்காமல் தவிர்த்தார்.

இதனை தொடர்ந்து பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆளுநரின் உரைக்கு கண்டனம் தெரிவித்தார். ஆளுநருக்கு எதிராக தீர்மானத்தையும் நிறைவேற்றினார்.

“இங்கே அச்சிட்ட பகுதிகளுக்கு மாறாக மாண்புமிகு ஆளுநர் இணைத்துக்கொண்டு படித்த பகுதிகள் இடம்பெறாது என்னும் தீர்மானத்தை பேரவை ஒருமனதாக நிறைவேற்ற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்” என்று பேசியிருந்தார் முதலமைச்சர்.

இதனால் தேசியகீதம் ஒலிக்கப்படுவதற்கு முன்னதாகவே ஆளுநர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தார்.

இதற்கு பெரும் எதிர்ப்புகள் எழுந்தன, ட்விட்டரில் #getoutravi டிரெண்டானது.

ஆளுனர் உரை முன்னரே தமிழ்நாடு அரசாங்கத்தால் தயார் செய்யப்பட்டடு அவரது ஒப்புதலுக்கு பின்னரே அச்சடிக்கப்பட்டும், கணினி வாயிலாகவும் அனைவருக்கும் வழங்கப்பட்டிருந்ததாக முதல்வர் தரப்பில் தற்போது விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆளுநர் உரையாற்ற வந்துள்ளதால், மிகவும் கண்ணியத்தோடும், முழு மரியாதையுடனும் நடந்துகொண்டோம்.

ஆனாலும், எங்கள் கொள்கைகளுக்கு மாறாக மட்டுமல்லாமல், அரசின் கொள்கைகளுக்கே மாறாக ஆளுநரின் நடத்தை இருந்தது என ஆளும் கட்சி தரப்பு கூறியுள்ளது.

ஆளுநரின் நடத்தைக்கு சபாநாயகர் அப்பாவு, திமுக கூட்டணிக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மற்றொரு புறம், ஆளுநருக்கு ஆதரவாகவும் கருத்துகள் வந்தவண்ணம் உள்ளன.

தமிழ்நாடு: பேரவையிலிருந்து வெளியேறிய ஆளுநர் - அப்படி என்ன பேசினார் முதல்வர்?
ஆளுநர் RN Ravi: பாதியில் வெளியேறிய ஆளுநர் - பரபரப்பான சட்டப்பேரவை - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com