ஆடியில் அம்மா வீட்டுக்கு போன மனைவி : அழைத்து வர விடுப்பு கேட்ட ஊழியர் - வைரல் லீவ் லெட்டர்

அரசு ஊழியர் ஒருவர் தனது மனைவியை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அழைத்து வருவதற்காக விடுமுறை வேண்டும் என்று எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
(Rep)
(Rep)Pexels
Published on

பொதுவாக நாம் வேலை செய்யும் அலுவலகங்களில் பல்வேறு காரணங்களைக் கூறி விடுமுறை எடுப்பதைப் பார்த்திருப்போம். சிலர் வித்தியாசமான காரணங்களைக் கூறி விடுப்பு எடுப்பார்கள்.

அந்த வகையில் அரசு ஊழியர் ஒருவர் விடுமுறை கேட்டு எழுதிய கடிதம் இணைய வைரலாகி வருகிறது.

உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் தனது அதிகாரிக்கு விடுப்பு கடிதம் கொடுத்துள்ளார்.

அந்த கடிதத்தில் தனது 3 குழந்தைகளுடன் மனைவி, அவரது தாயார் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் தான் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன், மனைவியை சமாதானப்படுத்தி மீண்டும் தனது வீட்டிற்கு அழைத்துவர எனக்கு விடுப்பு தேவைப்படுகிறது.

(Rep)
வாட்ஸ் அப்பில் ஊழியர் "Hey" சொன்னதால் கடுப்பான பாஸ் - நெட்டிசன்கள் கருத்து என்ன?

இதனால் ஆகஸ்ட் 4 முதல் 6 வரை விடுப்பு கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார். அரசு ஊழியரின் இந்த கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதே போன்று ஒருவர் வேறு ஒரு நிறுவனத்தில் தனக்கு இண்டர்வியூ இருப்பதாக உண்மையைக் கூறி விடுமுறை கேட்ட ஸ்கீரின் ஷாட் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

(Rep)
27 ஆண்டு லீவு எடுக்காமல் வேலைக்கு சென்ற ஊழியர் - கிடைத்த லைப் டைம் செட்டில்மென்ட்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com