"நான் அழப்போறே" விமான பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்த 4 மாத குழந்தை - ஒரு க்யூட் சம்பவம்!

தனது குழந்தை அழுகையால் நிச்சயமாக சக பயணிகள் அசௌகரியமாக உணரக் கூடும் என அந்த பெண் அறிந்திருந்தார். இதனை சமாளிக்க புதுமையான நடவடிக்கையை மேற்கொண்டார்.
"நான் அழப்போறே" விமான பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்த 4 மாத குழந்தை - ஒரு க்யூட் சம்பவம்!
"நான் அழப்போறே" விமான பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்த 4 மாத குழந்தை - ஒரு க்யூட் சம்பவம்!Twitter

விமானப் பயணம் ஏற்படும் போது பல அசௌகரியங்களை சந்திக்க நேரிடும். சில அசௌகரியங்கள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.

கொரியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 10 மணி நேர விமான பயணத்தை தனது நான்கு மாத குழந்தையுடன் மேற்கொண்டுள்ளார் பெண் ஒருவர்.

தனது குழந்தை அழுகையால் நிச்சயமாக சக பயணிகள் அசௌகரியமாக உணரக் கூடும் என அந்த பெண் அறிந்திருந்தார்.

இதனை சமாளிக்க அந்த பெண் செய்த புதுமையான விஷயம் இணையவாசிகளை கவர்ந்துள்ளது.

அந்த பெண் விமானத்துக்குள் வரும்போதே 200 சிறிய கவர்களை தன்னுடன் கொண்டுவந்தார். அதில் சில மிட்டாய்களும் சிறிய செய்தியும் காதில் வைக்கும் இரண்டு ஏர்பக்ஸும் இருந்துள்ளன.

அந்த கவரில் இருந்த செய்தி குறிப்பு, "வணக்கம் நான் ஜூன்வூ, 4 மாத குழந்தை.

இன்று நான் என் அம்மா மற்றும் பாட்டியுடன் அமெரிக்காவுக்கு செல்கிறேன்.

இது என் முதல் பயணம் என்பதனால் நான் கொஞ்சம் பதற்றமாகவும் அச்சத்துடன் இருக்கிறேன்.

இதனால் நான் அழலாம், அதிக சத்தம் எழுப்பலாம்.

நான் அமைதியாக இருக்க முயற்சிக்கிறேன். ஆனால், உறுதியாக கூற முடியாது. எனவே என்னை பொருத்துக்கொள்ளுங்கள்.

என் அம்மா உங்களுக்காக சிறிய கவரை தயார் செய்துள்ளார்.

இதில் கொஞ்சம் மிட்டாயும் ஏர்பக்ஸும் இருக்கின்றன.

என்னால் அதிக இரைச்சல் எழுந்தால் இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

உங்கள் பயணத்தை என்ஜாய் செய்யுங்கள். நன்றி :)

"நான் அழப்போறே" விமான பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்த 4 மாத குழந்தை - ஒரு க்யூட் சம்பவம்!
"சம்பள பேச்சுவார்த்தைக்கு அம்மா வரலாமா?" - இணையத்தை கலக்கும் இளைஞரின் கேள்வி

இந்த சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அந்த தாயின் நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர்.

ஆனால் ஒரு குழந்தையை அழைத்து வரும் போது தாய்மார்கள் இவ்வளவு மெனக்கெட வேண்டியிருப்பது தவறான சூழல். விமான பயணிகள் எப்போதும் சிலவற்றைப் பொருத்துக்கொள்ள தயங்க கூடாது எனவும் சிலர் கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

"நான் அழப்போறே" விமான பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்த 4 மாத குழந்தை - ஒரு க்யூட் சம்பவம்!
மகன் - மருமகளுக்கு குழந்தை பெற்றுக் கொடுத்த 56 வயது தாய் : எங்கே?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com