மாலத்தீவு TO சாலமன் - அடுத்த 50 ஆண்டுகளில் கடலில் மூழ்க இருக்கும் தீவுகள் பற்றி தெரியுமா?

சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றம் மற்றும் கடல் நீர் மட்டம் உயர்வு காரணமாக அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் சில தீவுகள் கடலில் மூழ்கி மாயமாகிவிடும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கின்றனர்.
Maldives
MaldivesCanva

மாறிவரும் பருவநிலை மற்றும் காலநிலை மாற்றத்தின் காரணமாக உலககெங்கும் உள்ள பல நாடுகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது.

சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றம் மற்றும் கடல் நீர் மட்டம் உயர்வு காரணமாக அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்குள் சில தீவுகள் கடலில் மூழ்கி மாயமாகிவிடும் என்று விஞ்ஞானிகள் கணித்திருக்கின்றனர்.

அத்தீவு பகுதிகளை கடல் ஆட்கொள்ளாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் கால சூழல் எப்படி மாறும் என்று யாராலும் கணிக்க முடியாது.

அப்படி அடுத்த 50 ஆண்டுகளில் மூழ்க இருக்கும் தீவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சாலமன் தீவு

தென் பசிபிக் பகுதியில் அமைந்துள்ளது சாலமன் தீவு. கடல் மட்டம் 1993ல் இருந்து ஆண்டுக்கு சுமார் 8 மில்லிமீட்டர்கள் உயர்ந்துள்ளது. மாகாணத் தலைநகரான Choiseul கடல் மட்டத்திலிருந்து வெறும் 6.6 அடி உயரத்தில் உள்ளது.

2016 ஆய்வறிக்கையின்படி, ஐந்து ரீஃப் தீவுகள் ஏற்கனவே மறைந்துவிட்டன. மேலும் 1935 முதல் இருந்த பல கிராமங்கள் மற்ற தீவுகளில் கரையோரங்கள் குறைந்துவிட்டன.

மாலத்தீவு
மாலத்தீவுPexels

மாலத்தீவு

அனைவரும் விரும்பி செல்லக்கூடிய மாலத்தீவுகள், இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவுக்கூட்டமாகும். இது பல பசுமையான ஓய்வு விடுதிகள் மற்றும் பலவிதமான நீருக்கடியில் ஹோட்டல்களைக் கொண்டுள்ளது.

மெதுவாக கடலால் மூடப்பட்டு வருகிறது. கடல் மட்ட உயர்வின் தற்போதைய கணிப்புகளின்படி, 2100 ஆம் ஆண்டளவில் முழு நாடும் நீருக்கடியில் இருக்கக்கூடும்.

பலாவ்

ஆய்வறிக்கையில், 1993 ஆம் ஆண்டு முதல் தென் பசிபிக் பகுதியில் அமைந்துள்ள பலாவ்வில் கடல் மட்டம் ஆண்டுக்கு 0.35 அங்குலங்கள் உயர்ந்துள்ளது, இது உலக சராசரியை விட மூன்று மடங்கு அதிகமாகும்.

இது 2090 ஆம் ஆண்டிற்குள் மேலும் 24 அங்குலங்கள் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தீவின் புகழ்பெற்ற நான்-ஸ்டிங் ஜெல்லிமீன்கள் கூட மறைந்து வருகின்றன.

Maldives
போவெக்லியா தீவு : சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கும் மர்ம தேசத்தின் பின்னணி என்ன?

பிஜி

கடல் மட்டங்களில் ஏற்படும் மாற்றங்களால் பிஜி தீவும் மூழ்கும் அபாயத்தில் உள்ளது.

2050 ஆம் ஆண்டுக்குள் கடல் மட்டம் 43 சென்டிமீட்டர் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடல் வெப்பநிலையின் அதிகரிப்பு பவளப்பாறைகளையும் பாதிக்கிறது.

Maldives
வெறும் ரூ.300 போதுமா? ராமேஸ்வரத்தில் இருக்கும் ”மினி அந்தமான் ” - குருசடை தீவு தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com