30 வருடங்களுக்கு முன் மூடப்பட்ட வழக்கை DNA சோதனை மூலம் தீர்த்த காவல்துறை - எப்படி?

இந்த கொலையால் கடலோர சமூகமே அச்சத்தில் இருந்தது. அடுத்த ஒரு தசாப்தத்துக்கு கடலோர பகுதியை பாதுகாப்பற்றதாகவே கருதி வந்தனர். அந்த அளவு மோசமான தாக்கத்தை வெளிப்படுத்தியது இந்த கொலை.
30 வருடங்களுக்கு முன் மூடப்பட்ட வழக்கை DNA சோதனை மூலம் தீர்த்த காவல்துறை - எப்படி?
30 வருடங்களுக்கு முன் மூடப்பட்ட வழக்கை DNA சோதனை மூலம் தீர்த்த காவல்துறை - எப்படி?Twitter

30 ஆண்டுகள் தீர்க்கப்படாமல் கிடந்த வழக்கை டிஎன்ஏ பொருத்தத்தைக் கண்டுபிடித்து தீர்த்துள்ளனர் அமெரிக்க விசாரணை அதிகாரிகள்.

1991ம் ஆண்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட விக்கி ஜான்சன் என்ற 34 வயது பெண்ணின் வழக்கை தான் இப்போது முடித்துள்ளனர்.

சீசைடில் ஹெச் பிளேஸ் எனும் பகுதியில் உள்ள டார்வின் தெருவில் வசித்தவர் விக்கி ஜான்சன்.

பழைய வழக்கில் அவர் கழுத்து நெரிக்கப்பட்டதாகவும், உடல் கருகிய நிலையில் இருந்ததாகவும் போலீசார் தெரிவித்திருந்தனர்.

அவரது உடலை டார்வின் தெருவில் உள்ள பார்க்கில் கண்டறிந்தனர். அதில் மிக மிக கொடூரமான காயங்கள் இருந்தன. இந்த கொலையால் கடலோர சமூகமே அச்சத்தில் இருந்தது.

அடுத்த ஒரு தசாப்தத்துக்கு கடலோர பகுதியை பாதுகாப்பற்றதாகவே கருதி வந்தனர். அந்த அளவு மோசமான தாக்கத்தை வெளிப்படுத்தியது இந்த கொலை.

கலிஃபோர்னியாவில் உள்ள Monterey County மாவட்ட நீதிமன்றம் பல ஆண்டுகள் உறைந்திருக்கும் வழக்குகளை திரும்பவும் விசாரிக்க உத்தரவிட்டது.

இந்த உத்தரவின் பெயரில் மீண்டும் திறக்கப்பட்ட வழக்கு தான் விக்கி ஜான்சன் கொலை வழக்கு.

30 வருடங்களுக்கு முன் மூடப்பட்ட வழக்கை DNA சோதனை மூலம் தீர்த்த காவல்துறை - எப்படி?
டெக்ஸாஸ்: மனைவியின் நண்பர்கள் மீது வழக்கு தொடுத்த முன்னாள் கணவர் - ஏன்?

இந்த வழக்கை மீண்டும் விசாரித்ததில் ஃப்ரான்க் லிவிஸ் மெக்குளூர் என்பவர் சந்தேகத்துக்கு இடமான நபராக கண்டறியப்பட்டார். இவருக்கும் இறந்த விக்கி ஜான்சனுக்கும் இடையிலான் உறவு பற்றி கண்டறியமுடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.

ஆனால் ஆதாரங்கள் கொலையாளிக்கு எதிராக உறுதியாக இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கொலை நடந்த போது விக்கி கொலையாளியை எதிர்த்து பயங்கரமாக சண்டையிட்டு உள்ளதாகவும் கூறியிருக்கின்றனர்.

30 வருடங்களுக்கு முன் மூடப்பட்ட வழக்கை DNA சோதனை மூலம் தீர்த்த காவல்துறை - எப்படி?
7 வருடத்திற்கு முன் கொலை செய்யப்பட்ட பெண்; உயிருடன் இருப்பதை கண்டறிந்த போலீஸ் - எப்படி?

விசாரணையை மீண்டும் தொடங்கியபோது விக்கி ஜான்சனின் நககண்ணில் கொலையாளியின் டிஎன்ஏ இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். கொலைக்கான காரணத்தை அவர்களால் கண்டறிய முடியவில்லை.

கொலையாளியாக் கருதப்படும் ஃப்ரான்க் லிவிஸ் மெக்குளூர் ஏற்கெனவே வன்முறை சம்பவங்களில் தொடர்புடையவர். கடந்த 2021ம் ஆண்டு தனது 77 வயதில் இறந்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

30 வருடங்களுக்கு முன் மூடப்பட்ட வழக்கை DNA சோதனை மூலம் தீர்த்த காவல்துறை - எப்படி?
பூமியில் கிடைத்ததா ஏலியன் கைகள்? - மர்ம பொருளின் பின்னணி என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com