700 வயதான மரத்தில் நிர்வாண புகைப்படம்; பாலியை விட்டு வெளியேற்றப்பட்ட பெண் - நடந்தது என்ன?

பாலி மக்கள் தங்களது கலாச்சாரம் மற்றும் கோவில்களின் புனிதத் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். பாலி, தெபனான் மாவட்டத்தில் உள்ள ஒரு 700 ஆண்டு பழமையான ஆலமரம் அங்குள்ள மக்களால் கடவுளாக வணங்கப்படுகிறது.
இந்தோனேசியா
இந்தோனேசியாTwitter
Published on

ரஷ்யாவைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் அலினா பஸ்லீவாவும் அவரது கணவரும் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு உள்ளூர் மக்களால் புனிதமாகக் கருதப்படும் 700 வயது ஆலமரத்தில் அலினா நிர்வாணமாகப் புகைப்படமெடுத்ததால் அவர்கள் பாலியை விட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியா அதிகமாக வெளிநாட்டுப் பயணிகளை ஈர்க்கக் கூடிய நாடாகும். மலைகள், ஆறுகள், காடுகள், கடற்கரைகள் என இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத் தலங்கள் அதிகம் காணப்படும் நாடான இந்தோனேசியாவில் பாலி மிகச் சிறப்பு வாய்ந்தது. இந்தோனேசியா ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தாலும் பாலியில் மட்டும் இந்துக்கள் அதிகம் வசிக்கின்றனர். அங்கு 10% மட்டுமே இஸ்லாமியர்கள்.

பாலி மக்கள் தங்களது கலாச்சாரம் மற்றும் கோவில்களின் புனிதத் தன்மைக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவர்கள். பாலி, தெபனான் மாவட்டத்தில் உள்ள ஒரு 700 ஆண்டு பழமையான ஆலமரம் அங்குள்ள மக்களால் புனிதமாக வணங்கப்படுகிறது.

மரம்
மரம்Twitter
இந்தோனேசியா
கம்போடியா அங்கோர் வாட்: பிரமிக்க வைக்கும் பொக்கிஷம் - சோழ மன்னர்கள் கட்டியதா?

அந்த மரத்தின் அழகைக் கண்டு வியந்த ரஷ்ய பெண்ணான அலினா நிர்வாணமாக அதனை தழுவிய படி போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்து அதனைச் சமுக வலைத்தளங்களில் பதிவேற்றியிருக்கிறார்.

அலினாவின் புகைப்படம் வைரலானது. பாலி மக்கள் தாங்கள் புனிதமாக கருதும் மரம் மாசு பட்டுவிட்டதாகக் கோபமுற்றுள்ளனர். பாலி குடியேற்ற அதிகாரி ஜமாருலி மணிஹுருக் அந்த தம்பதியை அங்கிருந்து வெளியேற்றியுள்ளார். அவர்கள் 6 மாதத்துக்கு அங்கு நுழைய முடியாதபடிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

இந்தோனேசியா
முருக கடவுள், நெற்றித் திலகம் - இந்து பண்பாட்டை பிரதிபலிக்கும் ஈராக் யசீதி கலாசாரம்

அலினா இழைத்த தவறுக்கு இந்திய மதிப்பில் 74 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 6 வருடம் சிறை தண்டனை அளிக்கப்படும் எனக் கூறப்பட்டது.

இந்தோனேசியா
ஆப்ரிக்க பெண்ணை இந்து முறைப்படி கரம் பிடித்த கோவை மாப்பிள்ளை

ஆனால், அலினா தான் செய்தது தவறு எனப் புரிந்து கொண்டு அந்த மரத்தின் முன் மன்னிப்புக் கேட்டுள்ளார். அத்துடன் அந்த இடத்தின் புனிதம், நம்பிக்கைகள் தனக்கு தெரியாது என்றும் கூறியுள்ளார். அவர் எடுத்த புகைப்படத்தையும் சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கியுள்ளார்.

இறுதியாக அலினாவும் அவரது கணவரும் பாலியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் சுற்றுலா செல்பவர்கள் சுற்றுலா விதிமுறைகள் குறித்து கவனமாக இருக்க வேண்டியது அவசியம். கடந்த ஆண்டு மட்டும் சுற்றுலா விதிமுறையை மீறியதாக 200 பேருக்கும் மேல் வெளியேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தோனேசியா
இந்தோனேசியா தன் தலை நகரை மாற்றுவது ஏன்? புதிய தலை நகர் எது? தலை நகரை மாற்ற காரணங்கள் என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn: https://www.newssensetn.com/

Nalam360 : https://www.newssensetn.com/health

Newsnow: https://www.newssensetn.com/wow-news

Tamilflashnewsapp: https://www.newssensetn.com/tamilnadu

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com