பிளாஸ்டிக் ஜாடிக்குள் தலையை விட்ட கரடிக்குட்டி- காயங்களின்றி மீட்பு

அமெரிக்காவில் பிளாஸ்டிக் டப்பாக்குள் தலையை விட்டு மாட்டிக்கொண்டு தவித்த கரடி குட்டியை வனவிலங்கு உயிரியலாளர்கள் மீட்டுள்ளனர்.
bear
bearTwitter
Published on

காட்டுக்குள் ஜாலியாக சுற்றித் திரிந்த கரடி குட்டி ஒன்று எதிர்பாராத விதமாக பிளாஸ்டிக் ஜாடிக்குள் தலையை விட்டு உள்ளே மாட்டிக்கொண்டுள்ளது.

இதனால் அந்த கரடி குட்டி தவித்து வந்தது. கடந்த வாரம் கரடி குட்டியின் இந்த நிலை குறித்து வனவிலங்கு உயிரியலாளர்களுக்குத் தகவல் தெரியவந்தது.

இதனையடுத்து விரைவாக செயல்பட்டு, ஒரு மரத்தின் மீது அமர்ந்திருந்த அந்த கரடி குட்டியைக் கண்டுபிடித்தனர்.

கழுத்தில் மாட்டிக்கொண்ட பிளாஸ்டிக் ஜாடி, கரடியின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடும் என்பதை அறிந்து, அதற்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டுப் பிடிக்கப்பட்டது.

கரடி மரத்திலிருந்து கீழே கொண்டு வரப்பட்டு, அதன் தலையில் மாட்டியிருந்த பிளாஸ்டிக் ஜாடியை மீட்ப்புக்குழு வெற்றிகரமாக அகற்றியது. அதிர்ஷ்டவசமாக, கரடிக்கு பெரிய காயங்கள் ஏதும் இல்லை.

bear
பூனை வளர்ப்பவரா நீங்கள்? அது குறித்த இந்த 5 ஆச்சர்ய உண்மைகள் தெரியுமா?

பின்னர் வனப்பகுதிக்குள் விடுவிக்கப்பட்ட கரடிக்குட்டி, அருகில் காத்திருந்த அதன் தாயைக் கண்டுபிடித்துச் சேர்ந்துகொண்டது.

கரடிக்குட்டியை காப்பாற்றிய வனவிலங்கு உயிரியலாளர்களைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.

bear
அரிய நோயால் பாதிக்கப்பட்ட தெரு நாய் - காப்பாற்ற ஒரு ஊரே கூடிய நெகிழ்ச்சி சம்பவம்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com