அருணாச்சல பிரதேசம் இனி தெற்கு திபெத்? 11 இடங்களின் பெயரை மாற்றிய சீனா - என்ன நடக்கிறது?

இந்தியா மீதான தனது ஆக்கிரமிப்பை, உரிமையை வலியுறுத்தும் விதமாக வந்தமைந்துள்ளது சீனாவின் இந்த நடவடிக்கை. இந்தியாவில் ஜி20 மாநாடு நடத்தப்பட்டது. ஆனால் அதில் சீனா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
அருணாச்சல பிரதேசம் இனி தெற்கு திபெத்? 11 இடங்களின் பெயரை மாற்றிய சீனா - என்ன நடக்கிறது?
அருணாச்சல பிரதேசம் இனி தெற்கு திபெத்? 11 இடங்களின் பெயரை மாற்றிய சீனா - என்ன நடக்கிறது?twitter
Published on

இந்தியா - சீனா எல்லைப்பகுதியில் அமைந்திருக்கிறது அருணாச்சலபிரதேசம் மாநிலம். சீனா அருணாச்சல பிரதேசத்தின் 11 இடங்களை “திபெத்தின் தெற்கு பகுதியான ஜாங்னான்” என்று சொந்தம் கொண்டாடி தற்போது புதிய பெயர்களை அறிவித்துள்ளது.

இதற்கான வரைபடம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது சீனா.

சீன, திபெத்திய மற்றும் பின்யிங் ஆகிய மொழிகளில் சீனாவின் சிவில் விவகார அமைச்சகம் இந்த பெயர்களை கடந்த ஞாயிறு அன்று வெளியிட்டது.

இந்தியா மீதான தனது ஆக்கிரமிப்பை, உரிமையை வலியுறுத்தும் விதமாக வந்தமைந்துள்ளது சீனாவின் இந்த நடவடிக்கை. இந்தியாவில் ஜி20 மாநாடு நடத்தப்பட்டது. ஆனால் அதில் சீனா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திபெத்தின் தெற்கு பகுதிகள் என சீனா சொந்தம் கொண்டாடும் இந்த பதினோரு இடங்களில் இரண்டு நிலப்பரப்புகள், இரண்டு குடியிருப்பு பகுதிகள், ஐந்து மலைப்பகுதிகள், இரண்டு நதிகள், மற்றும் அவற்றின் துணை நிர்வாக மாவட்டங்கள் அடங்கும்.

அம்மாநில பத்திரிக்கையான க்ளோபல் டைம்ஸ் அறிக்கையின் படி, சீனா மூன்றாவது முறையாக அருணாச்சல பிரதேசத்தை சொந்தம் கொண்டாடி பெயர் மாற்றத்தை அறிவித்துள்ளது. இதற்கு முன்னதாக 2017ல் 6 இடங்களையும், 2021ல் 15 இடங்களையும், தங்கள் நாட்டின் பகுதியாக அறிவித்தது சீனா.

அருணாச்சல பிரதேசம் இனி தெற்கு திபெத்? 11 இடங்களின் பெயரை மாற்றிய சீனா - என்ன நடக்கிறது?
சீனா: சிங்கிள்களுக்கு லீவு கொடுத்து 'லவ் பண்ண சொல்லும்' கல்லூரிகள் - என்ன காரணம்?

இவ்வாறாக பெயர்கள் மாற்றம் செய்து அறிவிப்பது சீனாவின் சட்டப்பூர்வமான நடவடிக்கை என்றும், புவியியல் பெயர்களை தரப்படுத்துவது சீனாவின் இறையாண்மை உரிமை எனவும் சீன நிபுணர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளதாக க்ளோபல் டைம்ஸ் அறிக்கை மேற்கோள் காட்டுகிறது.

ஆனால் மாநிலத்தின் பகுதிகளுக்கு புதிது புதிதாக பெயர்களை வைப்பதால் மட்டும் அம்மாநிலம் சீனாவுக்கு சொந்தமாகி விடாது எனவும் இந்தியாவின் ஒருகிணைந்த ஒரு பகுதியாகவே அருணாச்சல பிரதேசம் எப்போதும் இருக்கும் என இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

அருணாச்சல பிரதேசம் இனி தெற்கு திபெத்? 11 இடங்களின் பெயரை மாற்றிய சீனா - என்ன நடக்கிறது?
இணையும் இரான் - செளதி அரேபியா:  உலக சக்தியாக உருவெடுக்கும் சீனா - அமெரிக்கா நிலை என்ன?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com