லாங் மார்ச் 5 பி: பூமியில் விழும் சீன ராக்கெட் குப்பைகள் – என்ன நடந்தது?

ராக்கெட்டின் குப்பைகள் இப்படி கட்டுப்பாடில்லாமல் பூமிக்குத் திரும்புவது என்பது விண்வெளிக் குப்பைக்கான பொறுப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
Long March 5 B
Long March 5 BNewsSense
Published on

பூமியை மாசுபடுத்திய மனிதர்கள் விண்வெளியையும் விட்டு வைக்கவில்லை. பூமியிலிருந்து ஏவப்படும் ராக்கெட்டுகள், சாட்டிலைட்டுகள் மூலம் ஏராளமான குப்பைகள் விண்வெளியில் சுற்றுகின்றன. சில பூமியின் ஈர்ப்பு விசை மண்டலத்தில் நுழைந்து கீழே விழுகின்றன. அப்படி விழும் போது அவை மக்கள் வாழ்விடத்தில் விழுந்தால் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும்.

சமீபத்தில் சீனா ஏவிய ராக்கெட் குப்பைகள் இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் விழுந்ததாக அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லாங் மார்ச் 5பி அல்லது நீண்ட பயணம் 5பி என்று அழைக்கப்படும் இந்த ராக்கெட்டின் பெரும்பாலான எச்சங்கள் வளிமண்டலத்தில் எரிந்து விட்டதாக சீனாவின் விண்வெளி நிறுவனம் கூறியது. மீதமுள்ள பொருட்கள் பசிபிக் பகுதியில் உள்ள சுலு கடலில் விழலாம் என்று சீனா கூறுகிறது.

முன்னதாக, மக்கள் வசிக்கும் பகுதியில் ராக்கெட் தரையிறங்குவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று விண்வெளி நிபுணர்கள் கூறியிருந்தனர்.

ராக்கெட்டின் குப்பைகள் இப்படி கட்டுப்பாடில்லாமல் பூமிக்குத் திரும்புவது என்பது விண்வெளிக் குப்பைக்கான பொறுப்பு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதற்கென சர்வதேச விதிமுறைகள் உள்ளன. விண்வெளியில் ராக்கெட் குப்பைகள் சேரக்கூடாது என்பதற்காக உருவாக்கப்பட்டவைதான் இந்த விதிகள். இதன்படி எஞ்சியுள்ள ராக்கெட் குப்பைகள் பூமிக்குள் மீண்டும் நுழையும் போது சிறிய துண்டுகளாகச் சிதைந்துவிடும் வண்ணம் அந்த ராக்கெட்டுகளை வடிவமைக்க வேண்டுமென சீன விண்வெளி நிறுவனத்திற்கு நாசா முன்பு அழைப்பு விடுதிருந்தது.

ஒரு ட்வீட்டில், லாங் மார்ச் 5பி "7/30 அன்று சுமார் 16:45 GMT மணிக்கு இந்தியப் பெருங்கடலில் மீண்டும் நுழைந்தது" என்று அமெரிக்க விண்வெளி நிறுவனம் கூறியது. மேலதிக விவரங்களுக்கு உலக மக்கள் சீன அதிகாரிகளைக் கேட்குமாறு அந்த டிவிட்டில் கேட்டுக் கொண்டது.

இதற்கிடையில், சீனாவின் விண்வெளி நிறுவனம் 119 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை மற்றும் 9.1 டிகிரி வடக்கு அட்சரேகை என ராக்கெட்டின் எச்சங்கள் பூமியில் மறு நுழைவு செய்வதற்கு உத்தரவுகளை வழங்கியது. இது வடக்கு பசிபிக் பகுதியில் உள்ள பிலிப்பைன்ஸ் தீவான பலவான் கிழக்கே - சுலு கடலில் உள்ள ஒரு பகுதியில் விழலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Long March 5 B
விண்வெளிக்கு சென்று வந்த பூனையை கருணை கொலை செய்த விஞ்ஞானிகள் - காரணம் என்ன?

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்குப் போட்டியாக விண்வெளியில் டியாங்காங் என அழைக்கப்படும் விண்வெளி நிலையத்தைச் சீனா கட்டி வருகிறது. அதற்கென அவ்வப்போது ராக்கெட்டுகளை ஏவி உப பாகங்களை அந்த விண்வெளி நிலையத்திற்கு அனுப்புகிறது. இந்த விண்வெளி நிலையக் கட்டுமானம் இன்னும் முடியவில்லை. அப்படி அந்த நிலையத்திற்கு அனுப்பப்படும் சமீபத்திய ராக்கெட்டுகள் மீண்டும் கட்டுப்பாட்டுடன் பூமியில் மறு நுழைவு செய்யும் திறனைக் கொண்டிருக்கவில்லை.

சீனாவின் இந்த சமீபத்திய ராக்கெட் ஏவுதல் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. அந்த ராக்கெட்டின் பெயர் லாங் மார்ச் 5பி. இது ஆய்வக தொகுதியை டியாங்காங் நிலையத்திற்குக் கொண்டு சென்றது. ராக்கெட் மீண்டும் பூமியில் நுழைவது தரையில் இருக்கும் மக்கள் யாருக்கும் ஆபத்தை ஏற்படுத்தாது, ஏனெனில் அது பெரும்பாலும் கடலில் தரையிறங்கும் என்று சீன அரசாங்கம் புதன்கிழமை கூறியது.

இருப்பினும், மே 2020 இல் ஐவரி கோஸ்டில் உள்ள குடியிருப்பு சொத்துக்கள் இதே லாங் மார்ச் 5பி ராக்கெட்டால் சேதமடைந்தபோது போல், இந்த சீன ராக்கெட்டின் துண்டுகள் மக்கள் தொகை கொண்ட பகுதியில் கீழே விழுவதற்கான வாய்ப்பு இருந்தது.

விபத்திற்கு முன், வெற்று ராக்கெட்டின் மைய பாகம் பூமியைச் சுற்றி ஒரு நீள்வட்ட சுற்றுப் பாதையிலிருந்தது. பிறகு அது கட்டுப்பாடற்ற முறையில் பூமியின் ஈர்ப்பு விசையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டது. அப்போது இந்த ராக்கெட் பாகத்தைப் பூமியிலிருந்து கட்டுப்படுத்த இயலாது.

பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும் போது தானே சிதைந்து போகும் வகையில் ராக்கெட் பொருட்களை வடிவமைப்பது செயற்கைக்கோள் உருவாக்குபவர்களுக்கு முன்னுரிமையாகி வருகிறது. அதாவது ஒரு ராக்கெட் பூமியிலிருந்து வெற்றிகரமாக ஏவப்படுவதை விட அது தன் பணி முடிந்து விண்வெளியில் தானே சிதைந்து போகும் வண்ணம் வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும். அலுமினியம் போன்ற குறைந்த உருகுநிலை வெப்பநிலை கொண்ட பொருட்களைப் பயன்படுத்தி இந்த ராக்கெட் பாகங்கள் செய்யப்படுகிறது.

ராக்கெட்டுகளின் உருவாக்கத்தில் இது விலை உயர்ந்ததாக இருக்கலாம். ஏனெனில் வரலாற்று ரீதியாக வீட்டு எரிபொருளுக்குப் பயன்படுத்தப்படும் டைட்டானியம் போன்ற பொருட்கள் எரிவதற்கு மிக அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது. குறிப்பாக 25 டன்களுக்கு மேல் எடையுள்ள லாங் மார்ச் 5 இல், அத்தகைய பொருட்களின் அளவும் ஒரு பிரச்சினையாகும்.

Long March 5 B
ஏலியன்ஸ் : நியூசிலாந்து வானத்தில் தோன்றிய மர்ம ஒளி - என்ன காரணம்?

இதே லாங் மார்ச் 5பி ஏற்கனவே இரண்டு முறை பறந்து சீன விண்வெளி நிலையமான டியாங்காங் நிலையத்தின் பல்வேறு கூறுகளைக் கொண்டு சென்றிருக்கிறது. மே 2020 இல் ஒரு முறையும், மீண்டும் மே 2021 இல் இரண்டு முறையும் இந்த லாங் மார்ச் 5பி ஏவப்பட்டிருக்கிறது.

இரண்டு சந்தர்ப்பங்களிலும் ராக்கெட்டின் முதன்மை நிலைக் குப்பைகள் ஐவரி கோஸ்ட் மற்றும் இந்தியப் பெருங்கடலில் மீண்டும் பூமியில் கொட்டப்பட்டன. இவை 2018 இல் பசிபிக் பெருங்கடலில் விழுந்த ஒரு முன்மாதிரியைப் பின்பற்றின.

இந்த சம்பவங்கள் எதுவும் காயத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும் பல விண்வெளி ஏஜென்சிகளிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றன. செவ்வாயன்று, சீன அரசு நடத்தும் செய்தித்தாள் குளோபல் டைம்ஸ், லாங் மார்ச் 5 க்கு எதிராக அமெரிக்கா தலைமையிலான அவதூறு பிரச்சாரத்திற்குக் காரணமாக மேற்கத்திய ஊடகங்களைக் குற்றம் சாட்டியது.

இந்த சமீபத்திய ஏவுதல் மூன்று தொகுதிகள் தேவைப்படும் விண்வெளி நிலையத்தின் இரண்டாவது பகுதியைச் சீனாவின் விண்வெளி நிலையத்திற்குக் கொண்டு சென்றது. 17.9மீ நீளமுள்ள வென்டியன் ஆய்வகத் தொகுதி இரண்டு ஆய்வகங்களில் ஒன்றாக இணைக்கப்படும். சீனா ஏப்ரல் 2021 இல் தியான்ஹே தொகுதியை அறிமுகப்படுத்துவதன் மூலம் விண்வெளி நிலையத்தை உருவாக்கத் தொடங்கியது. 2022 ஆம் ஆண்டு இறுதிக்குள் இந்த விண்வெளி நிலையமான டியாங்காங் முழுமையடையும் எனச் சீனா நம்புகிறது.

சீனா இப்படி இரண்டாவது முறையாகத் தனது ராக்கெட் பாகங்களின் கட்டுப்பாட்டை இழந்து பூமியில் விழ வைத்திருக்கிறது.

Long March 5 B
UFO வரலாறு : உண்மையில் வேற்று கிரகவாசிகள் இருக்கிறார்களா ?

இது போக விண்வெளியிலேயே பல நாடுகள் ஏவிய ராக்கெட் மற்றும் கைவிடப்பட்ட சாட்டிலைட்டின் பாகங்கள் சுமார் 27,000த்திற்கும் மேற்பட்டவை சுற்றி வருகின்றன. இதை விண்வெளிக் குப்பை பாதுகாப்புத் துறையின் உலகளாவிய விண்வெளி கண்காணிப்பு சென்சார்களால் கண்காணிக்கப்படுகிறது. இவை போக இன்னும் அதிகமான குப்பைகள் கண்காணிக்க முடியாத அளவுக்கு சிறியது. ஆனால் மனிதர்களோ, மனிதர்கள் அல்லாத ரோபோ எந்திரங்களோ விண்வெளி பயணங்களை மேற்கொள்ளும் போது இந்த சிறிய குப்பைகள் அச்சுறுத்தும் அளவுக்கு பெரியது. இந்த குப்பைகள் பூமியின் சுற்றுப்பாதையில் சுமார் 15,700 மைல் வேகத்தில் பயணிப்பதால் பெரிய விபத்துக்களைக் கூட ஏற்படுத்தலாம்.

Long March 5 B
Russia Ukraine போர் : விண்வெளித் துறையிலும் தொடருமா?

தற்போது நாசா போன்ற விண்வெளி நிறுவனங்கள் இந்தக் குப்பைகளோடு மோதாமல் இருக்கும் வண்ணம் தமது ராக்கெட்டுகள் மற்றும் சாட்டிலைட்டுகளை வடிவமைக்கின்றன.இப்படி விண்வெளியில் சேரும் குப்பை என்ன அழிவை ஏற்படுத்தப் போகிறதோ என்பது ஒருபுறமிருக்க, பூமியிலேயே மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் அளவுக்குப் பொறுப்பின்மையோடு சீனா போன்ற நாடுகள் நடந்து கொள்கின்றன.

Long March 5 B
Space Advertising : விண்வெளியில் விளம்பரம் செய்யும் நிறுவனங்கள் : பூமிக்கு அடுத்த ஆபத்தா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com