4 மில்லியன் குதிரைகளா? மனிதர்களை விட குதிரைகள் அதிகம் வாழும் நாடு குறித்து தெரியுமா?

கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 மீட்டர் உயரத்தில் உள்ள Otgontenger புனித மலைக்கு சென்றபோது, அப்பகுதியில் வயல்வெளிகள் இல்லை, இங்கு காய்கறிகளை பயிரிடுவதற்கான சாத்தியம் இல்லை, பெரும்பாலான மக்கள் இறைச்சி மற்றும் பால் மூலம் தங்கள் வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.
Did You Know In 'World's Emptiest Country,' Horses Outnumber Humans?
Did You Know In 'World's Emptiest Country,' Horses Outnumber Humans?Twitter

நம்முடைய அன்றாட வாழ்க்கை ஒரு மிஷின் போல் ஆகிவிட்டது. சாப்பிடுவது, தூங்குவது, வேலைக்கு செல்வது என ஒரே மாதிரியான வழக்கத்தில் சிக்கிக் கொள்கிறோம்.

சில சமயங்களில் இதிலிருந்து ஒரு பிரேக் கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்போம். இல்லையென்றால் ஒரு வாரம் லீவ் எடுத்து எங்காவது பயணம் மேற்கொள்ளலாம் என்றும் எண்ணுவோம். நம்மில் பெரும்பாலோர் உலகைச் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டாலும், பலருக்கு அது கற்பனையாகவே இருக்கிறது.

ஆனால் இது ட்ராவலர்களுக்கு சாதாரண விஷயமாகிவிட்டது. ஊர் உலகை சுற்றி, அங்கு இருக்கும் கலாச்சாரங்கள், உணவு, மக்கள் ஆகியவற்றை குறித்து ஒரு விலாகாக யூடிப்பில் பதிவேற்றுகின்றனர்.

அப்படி மனிதர்களை விட குதிரைகள் அதிகம் இருக்கும் நாடு குறித்து யூடியூபர் துருவ் ரதி வீடியோவாக பதிவிட்டிருக்கிறார். அது என்ன நாடு என்று இந்த பதிவில் தெரிந்துக்கொள்வோம்.

மங்கோலியாவில் மனிதர்களை விட குதிரைகள் அதிகம்

உலகின் மிகவும் பாழடைந்த நாடான மங்கோலியாவுக்கு துருவின் சமீபத்திய பயணம் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது.

செப்டம்பர் 7 ஆம் தேதி, துருவ் ரதி மங்கோலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வீடியோவை யூடியூப்பில் பதிவேற்றினார். இயற்கை அழகை விரும்பும் பயணிகளுக்கு வீடியோ ஒரு காட்சி விருந்தாகும்.

குறைந்த மக்கள் தொகை அடர்த்தி காரணமாக மங்கோலியா "வெற்று நாடு" என்று அறியப்படுகிறது. மங்கோலியாவின் தலைநகரான உலன்பாதரில் "நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பாதி பேர் வாழ்கின்றனர். மங்கோலியாவில் 3.5 மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை உள்ளது. இதன் விளைவாக மக்கள் தொகை அடர்த்தி "சதுர கிலோமீட்டருக்கு 2 பேர்" மட்டுமே என்று துருவ் ரதி விளக்குகிறார்.

Did You Know In 'World's Emptiest Country,' Horses Outnumber Humans?
மங்கோலியா: கூடாரம் தான் வீடு, ஆடுகள் தான் சொந்தம் - செங்கிஸ்கான் ஆண்ட மக்களின் வாழ்வு!

முதலில் குக் நூர் ஏரிக்கு சென்றவர் அதன் அழகை லடாக்கின் பாங்காங் த்சோ ஏரியுடன் ஒப்பிட்டார். விமானத்தில் சென்ற இவர்களை தவிர அங்கு வேறு யாரும் இல்லை என்பதையும் வீடியோவில் கூறியிருக்கிறார்.

கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 மீட்டர் உயரத்தில் உள்ள Otgontenger புனித மலைக்கு சென்றபோது, அப்பகுதியில் வயல்வெளிகள் இல்லை, இங்கு காய்கறிகளை பயிரிடுவதற்கான சாத்தியம் இல்லை, பெரும்பாலான மக்கள் இறைச்சி மற்றும் பால் மூலம் தங்கள் வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.

நாட்டில் மற்றொரு அசாதாரணமான அம்சத்தை துருவ் கண்டிருக்கிறார். சுமார் 4 மில்லியன் குதிரைகள் நாட்டில் உள்ளதையும், இது அங்கு இருக்கும் மனிதர்களை விட அதிகமாக இருப்பதையும் சுட்டி காட்டினார்.

Did You Know In 'World's Emptiest Country,' Horses Outnumber Humans?
மங்கோலியா : எப்போதும் சூடான தேநீருடன் காத்திருக்கும் நாடோடிகள்- யாருக்காக? அடடே தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com