"நான் நம்பிக்கை இழந்துவிட்டேன்"- 24 நாட்கள், நடுக்கடலில் உணவின்றி உயிர்பிழைத்த மனிதர்!

கொலம்பியா இராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவில், "எனக்கு சாப்பிட உணவு இல்லை. படகில் ஒரு பாட்டில் கெட்சப், பூண்டு பொடி மற்றும் மேகி மட்டுமே இருந்தது. நான் இவற்றை தண்ணீருடன் கலந்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்தேன்" என எல்விஸ் பேசியிருக்கிறார்.
"நான் நம்பிக்கை இழந்துவிட்டேன்" - 24 நாட்கள், நடுக்கடலில் உணவின்றி உயிர்பிழைத்த மனிதர்!
"நான் நம்பிக்கை இழந்துவிட்டேன்" - 24 நாட்கள், நடுக்கடலில் உணவின்றி உயிர்பிழைத்த மனிதர்!Twitter
Published on

உலகின் ஆபத்தான கடல்களில் ஒன்றான கரீபியன் கடலில் மிதந்து கொண்டிருந்த பாய்மர படகின் மேற்பரப்பில் HELP என எழுதப்பட்டிருப்பதை அந்த வழியாக சென்ற விமானம் கண்டுள்ளது.

கொலாம்பியாவின் போர்டோ பொலிவர் கரையில் இருந்து கிட்டத்தட்ட 193 கிலோ மீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த படகில் தன்னந்தனியாக 24 நாட்கள் உயிர் வாழ்ந்துள்ளார் எல்விஸ் ஃப்ரான்சிஸ்கோ என்ற நபர்.

47 வயதாகும் அவர் வெறும் கெட்சப் மட்டுமே சாப்பிட்டு தனது உயிரைக் கையில் பிடித்துள்ளார்.

கொலம்பியா இராணுவம் வெளியிட்டுள்ள வீடியோவில், "எனக்கு சாப்பிட உணவு இல்லை. படகில் ஒரு பாட்டில் கெட்சப், பூண்டு பொடி மற்றும் மேகி மட்டுமே இருந்தது. நான் இவற்றை தண்ணீருடன் கலந்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வந்தேன்" என எல்விஸ் பேசியிருக்கிறார்.

இப்போது மருத்துவ சிகிச்சையில் இருந்துவரும் எல்விஸ், டொமினிகா என்ற தீவு நாட்டைச் சேர்ந்தவர்.

இப்போது கொலம்பியா இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் அவரை வீட்டுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

எல்விஸ், கடந்த டிசம்பர் மாதம் கடலுக்குள் செல்லும் திட்டம் இல்லாமல் படகை பழுது பார்த்துக்கொண்டிருந்த போது காலநிலை மோசமானதால் படகு கடலுக்குள் இழுக்கப்பட்டிருக்கிறது.

"நான் நம்பிக்கை இழந்துவிட்டேன்" - 24 நாட்கள், நடுக்கடலில் உணவின்றி உயிர்பிழைத்த மனிதர்!
கடல், மணல், பனி: மூன்றும் ஒரே இடத்தில்! இணையத்தை ஆக்கிரமித்த புகைப்படம் - எங்கே?

"24 நாட்கள் நிலத்தைப் பார்க்காமல், பேசுவதற்கு யாரும் இல்லாமல், என்ன செய்வது, நாம் எங்கே இருக்கிறோம் எனத் தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தேன். அது மிகவும் கொடுமையாக இருந்தது நான் நம்பிக்கை இழந்துவிட்டேன். என் குடும்பத்தைப் பற்றி நினைத்துக்கொண்டிருந்தேன்." என எல்விஸ் கூறியுள்ளார்.

எந்த வழிக்கு படகை செலுத்துவது எனத் தெரியாததால் கடலிலேயே காலத்தைக் கழிக்க வேண்டியிருந்ததாக எல்விஸ் ஃப்ரான்சிஸ்கோ தெரிவித்துள்ளார்.

"நான் நம்பிக்கை இழந்துவிட்டேன்" - 24 நாட்கள், நடுக்கடலில் உணவின்றி உயிர்பிழைத்த மனிதர்!
"திமிங்கலங்கள் தான் எனக்கு துணை" - ஒரு கை, ஒரு கால் இல்லாமல் தனியாக உலகை சுற்றிவந்த நபர்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com