துப்பாக்கியுடன் வங்கிக்கு சென்ற பெண்: மிரட்டி பணம் பறிக்க காரணம் என்ன? புகைப்படம் வைரல்

லெபனன் நாட்டின் ஒரு பெண் தான் கணக்கு வைத்திருந்த வங்கிக்கு சென்று, துப்பாக்கியை காட்டி பணத்தை தருமாறு மிரட்டியுள்ளார்.
துப்பாக்கியுடன் வங்கிக்கு சென்ற பெண்
துப்பாக்கியுடன் வங்கிக்கு சென்ற பெண்டிவிட்டர்
Published on

தன் வங்கி கணக்கிலிருக்கும் பணத்தை கொடுக்குமாறு துப்பாக்கி முனையில் வங்கி அதிகாரிகளை மிரட்டியுள்ளார் ஒரு பெண்.

வங்கிக் கொள்ளைகள் ஒன்றும் புதிய விஷயம் அல்ல. துப்பாக்கி முனையில் கும்பலாக நான்கு ஐந்து ஆட்கள் வந்து வங்கியிலுள்ளவர்கள மிரட்டி பணம் பறிக்கும் காட்சிகள் நிஜத்திலும், படங்களிலும் நிறைய பார்த்திருப்போம்!

Robbery (rep)
Robbery (rep)Pexels

ஆனால் இங்கு ஒரு பெண், வித்தியாசமாக தன் வங்கி கணக்கிலிருக்கும் பணத்தை அதிகாரிகளை மிரட்டி வாங்கியுள்ளார். லெபனன் நாட்டின் பேரூட் என்ற இடத்தில் ஒரு பெண் தான் கணக்கு வைத்திருந்த வங்கிக்கு சென்று, துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார். இந்த மிரட்டல் பணத்தை கொள்ளையடிப்பதற்காக அல்ல. தனது கணக்கில் சேமித்துவைத்திருக்கும் பணத்தை மீட்கும் முயற்சி தான். 

துப்பாக்கி வைத்து மிரட்டிய அந்த பெண்ணின் தங்கை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதனால் அவரது மருத்துவ செலவுகளுக்காக சேமித்து வைத்துள்ள பணத்தை எடுப்பதற்காக முயற்சித்துள்ளார். ஆனால் பணத்தை தராமல் வங்கி இழுத்தடித்துக்கொண்டே வந்துள்ளது. இதனால் கோபமடைந்து அவர் துப்பாக்கியுடன் சென்று பணத்தை தருமாறு மிரட்டியுள்ளார்.

துப்பாக்கியுடன் வங்கிக்கு சென்ற பெண்
கர்நாடகா : கனரா வங்கி லோன் தர மறுத்ததுக்காக வங்கியை கொளுத்திய நபர்!

இதை டிவிட்டரில் லியம் என்பவர் பகிர்ந்து, நடந்ததை விளக்கியிருந்தார். மேலும் அவர் கூறுகையில் லெபனன் நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காரணமாக இது மாதிரியான சம்பவங்கள் நிறைய நடக்கிறது என்றும், முன்னர் ஆலே என்ற இடத்தில் இதுபோன்ற சம்பவம் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மேலும் வங்கியில் பணம் டெபாசிட் செய்துள்ள டெபாசிட்டர்ஸ் யுனியன் ஆட்கள் தான் இவ்வாறு செய்யும்படி மக்களை தூண்டியுள்ளதாகவும் லியம் தெரிவித்தார்.

லெபனன் நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் மற்றும் அமெரிக்க டாலர் குறைபாடு தான் முக்கிய காரணம் என்கின்றனர் உள்ளூர் வாசிகள். இதனால் அமெரிக்க டாலர்களாக பணத்தை சேமித்துவைத்திருப்பவர்கள் பணத்தை மீட்க முடியாமல் இருக்கின்றனர்.

ஆனால், துப்பாக்கி முனையில் பணத்தை கேட்ட பெண்ணின் துணிச்சலை கண்டு பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

துப்பாக்கியுடன் வங்கிக்கு சென்ற பெண்
அவ்வை சண்முகி வேடத்தில் வங்கியை கொள்ளையடித்த நபர் - எங்கே? எப்போது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com