நுகேகொடை – மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டிற்கு முன்பான ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
53 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.
மின்வெட்டை உடனடியாக நிறுத்துமாறு கோரியே, இந்த நபர் மின்மாற்றியில் ஏறி, கீழே வீழ்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
தினமும் 13 மணி நேர மின் வெட்டு, பெட் ரோல், டீசல், சமையல் எரிவாயுவுக்கு மைல் நீள வரிசைகளில் மக்கள், பத்திரிகைக் காகிதத் தட்டுப்பாட்டால் பத்திரிகைகள் டிஜிடலுக்கு மாறுவது, சாதாரண பேப்பர் தட்டுப்பாட்டால் பள்ளிப் பரீட்சைகள் ஒத்திவைப்பு, உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக ஏறும் அவலம் …. ராபர்ட் முகாபேயின் ஆட்சியின் இறுதி நாட்களில் ஜிம்பாப்வேயின் பொருளாதார நெருக்கடியை, சமீப ஆண்டுகளாக வெனிசுவெலாவில் உலகம் கண்ட பொருளாதார வீழ்ச்சியை , 2010க்கு பின் கிரீஸ் கண்ட பொருளாதார நெருக்கடியை, இப்போது இலங்கை சந்தித்து வருகிறது.
இலங்கை நிலவரத்தை newssensetn தளம் மிக விரிவாக வாசகர்களுக்குத் தந்து வருகிறது. இலங்கை நிலவரம் தொடர்பான பிற கட்டுரைகளைப் படிக்க: