பண பரிவர்த்தனை செய்ய பலே ஐடியா! Barcode ஐ கையில் பச்சை குத்திய இளைஞர் | Video

ஒவ்வொரு முறையும் பண பரிவர்த்தனை செய்ய செல்ஃபோனை எடுப்பது அவருக்கு அலுப்பாக இருந்துள்ளது. இதனால் தன் முழங்கையில் பார்கோடை பச்சைக்குத்திக் கொண்டிருக்கிறார் தைவானை சேர்ந்த இளைஞர் ஒருவர்
பார்கோடை கையில் பச்சை குத்திய இளைஞர்
பார்கோடை கையில் பச்சை குத்திய இளைஞர்twitter
Published on

தைவானை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது முழங்கையில் பார்கோடை பச்சைக் குத்திக்கொண்டுள்ளார். பண பரிவர்த்தனைக்கு அடிக்கடி செல்ஃபோனை எடுக்க சோம்பேறித்தனமாக இருந்ததால், இவ்வாறு செய்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

உலகம் டிஜிட்டல் மயமாகிவிட்டது. எதையும் எங்கும் இணையம் மூலமாக உட்கார்ந்த இடத்தில் சாதிக்கலாம். நமது வேலைகளை எளிமையாக்கிக் கொடுத்துள்ளது டிஜிட்டலைசேஷன். முக்கியமாக மக்கள் கேஷ்லெஸ் உலகத்திற்கு மாறி வருகிறார்கள். அதாவது, இணையம் மூலமாகவே செய்யப்படும் பணபரிவர்த்தனையை செய்யத் தொடங்கிவிட்டனர்

இதற்கு ஏதுவாக வங்கிகளின் செயலிகளும், ஃபோன்பே, கூகுள் பே போன்ற யுபிஐ செயலிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், பெரும்பாலும் மக்கள் கையில் பணம் வைத்துக்கொள்வதில்லை. இங்கு ஒரு இளைஞர் ஒரு படி மேலே போய், இதற்கும் மாற்று ஒன்றை கண்டுபிடித்திருக்கிறார்.

ஒவ்வொரு முறையும் பண பரிவர்த்தனை செய்ய செல்ஃபோனை எடுப்பது அவருக்கு அலுப்பாக இருந்துள்ளது. இதனால் தன் முழங்கையில் பார்கோடை பச்சைக்குத்திக் கொண்டிருக்கிறார் தைவானை சேர்ந்த இளைஞர் ஒருவர்

பார்கோடை கையில் பச்சை குத்திய இளைஞர்
98 டாட்டூக்கள், 84 மாற்றங்கள் : வித்தியாசமான முறையில் கின்னஸ் சாதனை படைத்த தம்பதி!

பெயர் குறிப்பிட விரும்பாத அந்த இளைஞர் சமூக வலைத்தள பக்கமான டிகார்ட்டில் இது பற்றி பேசியிருந்தார். அதில், வெகு நாட்களாக டாட்டூ போட்டுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை தனக்கு இருந்ததாக அவர் கூறியிருந்தார்.

அப்போது தான் இந்த பார்கோட் ஐடியா தனக்கு வந்ததாகவும், அதையே பச்சைக் குத்திக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த டாட்டூவை வரைவது கடினமான காரியம் என்றும், இது பச்சைக் குத்துபவருக்கு ஒரு சவாலாக இருந்ததாகவும் அந்த இளைஞர் குறிப்பிட்டிருந்தார்.

யூடியூபில் வெளியான வீடியோவில், அந்த பார்கோட் டாட்டூவை பயன்படுத்தி அவர் எப்படி பண பரிவர்த்தனை செய்கிறார் என்பது பதிவாகியிருந்தது. ஆனால் அந்த இளைஞர் மற்றவர் யாரும் இதை முயற்சிக்கவேண்டாம் எனக் கூறியிருக்கிறார்.

எல்லோருக்கும் இந்த முயற்சி சரிவராது எனவும், டாட்டூ அழியத் துவங்கும், அதனால் பார்கோட் வேலை செய்யாமல் போகும் என எச்சரித்திருக்கிறார். மேலும் இதனை பாதுக்காப்பது தனக்கு பெரும் சவலாக இருக்கிறது எனவும் அந்த இளைஞர் கூறினார்.

இதற்கு முன்னர் ரஷ்யாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனது சருமத்திற்குள், கார்டின் சிப்பை பொறுத்திக்கொண்டார். எப்போது பண பரிவர்த்தனை செய்தாலும் தன் கைகளை உரசி, பேமண்ட் செய்துகொண்டார்

பார்கோடை கையில் பச்சை குத்திய இளைஞர்
இறந்த நாய்காக பச்சை குத்தி அஞ்சலி செலுத்திய பெண் : இணையவாசிகளை நெகிழ வைத்த வீடியோ

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com