”கோழி வளக்குறது கொஞ்சுரதுக்கு இல்ல” மகளை தாக்கிய சேவல்; நக்கெட்ஸ் செய்து சாப்பிட்ட ஃபேமிலி

குழந்தையின் கன்னங்கள், நெற்றி ஆகிய பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்தன. அது, மேகன் வீட்டில் வளர்த்த ஹை ஹை என்ற சேவல் தாக்கியதால், குழந்தைக்கு ஏற்பட்ட காயங்கள் என, அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.
”கோழி வளக்குறது கொஞ்சுரதுக்கு இல்ல” மகளை தாக்கிய சேவல்; நக்கெட்ஸ் செய்து சாப்பிட்ட ஃபேமிலி
”கோழி வளக்குறது கொஞ்சுரதுக்கு இல்ல” மகளை தாக்கிய சேவல்; நக்கெட்ஸ் செய்து சாப்பிட்ட ஃபேமிலிcanva
Published on

வீட்டில் வளர்த்த சேவல் மகளை தாக்கியதால், அதனை கொன்று நக்கெட்ஸ் செய்து சாப்பிட்டுள்ளது அமெரிக்காவை சேர்ந்த ஒரு குடும்பம்.

வீட்டில் செல்ல பிராணிகளை வளர்த்தால், ஏதாவது ஒரு தருணத்தில் அது நம்மை தாக்கும், காயங்கள் ஏற்படும். அவ்வாறு ஏற்படாமல் இருக்க நாம் அவைகளை பயிற்சிப்போம்.

சில சமயங்களில் செல்லமாக தண்டனைகள் வழங்குவோம். ஆனால் இங்கு, ஒரு குடும்பம் தங்களது மகளை சேவல் தாக்கியதால், அதனை கொன்று, சமைத்து சாப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேகன் ஷ்மிட் என்ற பெண் தன் ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில் அவர் தனது மகளின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார். அந்த குழந்தையின் கன்னங்கள், நெற்றி ஆகிய பகுதிகளில் ரத்தக் காயங்கள் இருந்தன. அது, மேகன் வீட்டில் வளர்த்த ஹை ஹை என்ற சேவல் தாக்கியதால், குழந்தைக்கு ஏற்பட்ட காயங்கள் என, அந்த பதிவில் தெரிவித்திருந்தார்.

மேலும், கொஞ்சம் விட்டு இருந்தால் குழந்தையின் கண்கள் பறிபோயிருக்கும் என்று தெரிவித்தவர், சேவலின் இந்த செயலுக்கு ஏற்ற தண்டனை வழங்கப்பட்டது எனவும் பதிவிட்டிருந்தார்.

”கோழி வளக்குறது கொஞ்சுரதுக்கு இல்ல” மகளை தாக்கிய சேவல்; நக்கெட்ஸ் செய்து சாப்பிட்ட ஃபேமிலி
“அதென்ன ‘Pure’ Veg?“ : இணையத்தில் அனல் பறக்கும் விவாதம் - நெட்டிசன்ஸ் ரியாக்‌ஷன் என்ன?

“என்னதான் நாங்கள் வளர்த்த செல்ல பிராணி என்றாலும், என் குழந்தைக்கு பாதிப்பதை ஏற்படுத்தினால் பார்த்துவிட்டு சும்மா இருக்க முடியாது. இன்றைய டின்னர் ஹை ஹை நக்கெட்ஸ்” என்று மற்றொரு பதிவில் அவர் தெரிவித்திருந்தார்.

மேகனின் இந்த பதிவு காட்டுத் தீயாய் பரவியது. பலரும் இதற்கு எதிர்மறை கருத்துகளையே பதிவிட்டு வந்தனர். குழந்தை வளர்ப்பில் மேகனின் செயல், எவ்வளவு தவறான உதாரணத்தை முன்வைக்கிறது எனவும், இது மிருக வதை செயல் எனவும் கண்டனங்கள் தெரிவித்து வந்தனர்.

ஒருவர், “நீங்கள் இவ்வாறு ஏதாவது அசம்பாவிதம் நிகழும் எனத் தெரிந்தும் அதற்கான முன்னேற்பாடுகள் எதையும் செய்யாமல் இருந்துள்ளீர்கள்?”

“குழந்தைகள் இருக்கும் வீட்டில் ஏன் சேவல்களை வளர்க்கவேண்டும்?” என்று மற்றொருவர் கேள்வி எழுப்பியிருந்தார்

ஒரு சிலர் மேகனுக்கு ஆதரவாகவும் கருத்துகளை பதிவிட்டிருந்தனர்.

”கோழி வளக்குறது கொஞ்சுரதுக்கு இல்ல” மகளை தாக்கிய சேவல்; நக்கெட்ஸ் செய்து சாப்பிட்ட ஃபேமிலி
கடிக்கு கடி! பாம்பை பழிக்கு பழி வாங்கிய 2 வயது சிறுமி - என்ன நடந்தது?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com