Narges Mohammadi: சிறையிலிருந்து நோபல் பரிசு பெறும் ஈரானிய பெண் - இவரது போராட்டங்கள் என்ன?

ஈரானில் மதகுருமார்கள் சொல்படி நடந்துவரும் ஆட்சியை பெண், வாழ்க்கை, சுதந்திரம் என்ற இயக்கம் போராட்டங்களின் மூலம் அசைத்துப்பார்த்தது. ஆனால் பல ஆர்வலர்களை கொலைசெய்து, சிறையில் அடைத்து இந்த இயக்கத்தை அடக்கியது அரசு.
Narges Mohammadi: அமைதிக்கான நோபல் பரிசு பெறும் ஈரானிய பெண் - இவரது போராட்டங்கள் என்ன?
Narges Mohammadi: அமைதிக்கான நோபல் பரிசு பெறும் ஈரானிய பெண் - இவரது போராட்டங்கள் என்ன?Twitter

நர்கீஸ் முகமதி சிறையில் அடைக்கப்பட்ட மிக முக்கியமான ஈரானிய பெண் வழக்கறிஞர். பெண்கள் உரிமைக்காகவும், ஈரானில் நடைபெறும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைக்கு எதிராகவும் போராடியதால் இவருக்கு 2023ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவீடனைச் சேர்ந்த அல்ஃபெர்ட் நோபல் என்ற கண்டுபிடிப்பாளரின் நினைவாக இயற்பியல், வேதியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய பிரிவுகளில் ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு அமைதிக்காக நோபல் பரிசு பெறும் நர்கீஸ் முகமதி "அனைவருக்கும் சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளை உறுதிசெய்ய போராடியவர்" என நோபல் கமிட்டி புகழாரம் சூட்டியுள்ளது.

முகமதி, பெண்ணுரிமை, மரண தண்டனை ஒழித்தல் மற்றும் சிறைகளின் நிலைமையை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்காக தொடர்ந்து போராடிய மனித உரிமை ஆர்வலர்.

ஈரானில் மதகுருமார்கள் சொல்படி நடந்துவரும் ஆட்சியை பெண், வாழ்க்கை, சுதந்திரம் என்ற இயக்கம் போராட்டங்களின் மூலம் அசைத்துப்பார்த்தது. ஆனால் பல ஆர்வலர்களை கொலைசெய்து, சிறையில் அடைத்து இந்த இயக்கத்தை அடக்கியிருக்கிறது அரசு.

ஈரானில் இருந்த ஒழுக்க காவலர்களால் ஹிஜாப் அணியாத குற்றத்துக்காக மாஷா அமினி என்ற பெண் கைது செய்யப்பட்டார். காவல்துறை கஸ்டடியில் இருந்தபோது அந்த பெண் மரணமடைந்தது எழுச்சிமிக்க போராட்டத்துக்கு வழிவகுத்தது. இதன் பிறகுதான் ஹிஜாப் அணிவது குறித்த பிரச்னை வெடிக்கத் தொடங்கியது.

தனது போராட்டங்களுக்காக பல தண்டனைகளை பெற்று தெஹ்ரானில் உள்ள எவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முகமதி. 12 ஆண்டுகள் வரை அவருக்கு சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்ததும் இந்த வழக்குகளில் அடங்கும்.

2003ம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஷிரின் அபாதி என்பவர் வழிநடத்திய மனித உரிமைகள் மையத்தின் பாதுகாவலர்கள் அமைப்பின் துணைத் தலைவர் நர்கீஸ் முகமதி.

"அவரது துணிச்சலான போராட்டத்துக்காக தனிப்பட்ட முறையில் பெரும் விலை கொடுத்துள்ளார் முகமதி" என அவர்குறித்து நோபல் பரிசு குறிப்பிடுகிறது.

Narges Mohammadi: அமைதிக்கான நோபல் பரிசு பெறும் ஈரானிய பெண் - இவரது போராட்டங்கள் என்ன?
சவுதி அரேபியா: பாலைவன நாட்டில் செழிக்கும் பெண்கள் - IMF அறிக்கை சொல்வதென்ன?

சமீப ஆண்டுகளில் முகமதியின் குடும்பம் ஈரானில் தங்கமுடியாத சூழல் நிலவுவதனால் அவரால் தனது குடும்பத்துனருடன் கூட இருக்க, முடியவில்லை. சிறைச்சாலையில் இருந்துகொண்டே சிறைகள் மற்றும் தடுப்பு மையங்களின் நிலை குறித்தும் கைதிகளுக்கு எதிரான வன்முறைகள் பற்றியும் கடிதங்கள் எழுதி நாடுதழுவிய போராட்டத்துக்கான எச்சரிக்கையை விடுத்தார் நர்கீஸ்.

Narges Mohammadi: அமைதிக்கான நோபல் பரிசு பெறும் ஈரானிய பெண் - இவரது போராட்டங்கள் என்ன?
சம்பிரித்தி பட்டாச்சார்யா: இயற்பியலில் Fail-ஆன பெண் 'பறக்கும் படகை' உருவாக்கியது எப்படி?

இப்போது சிறையில் இருந்துகொண்டும் தொடர்ந்து செயல்படுவதனால் கடந்த 18 மாதங்களாக அவரது கணவர் மற்றும் குழந்தையுடன் கூட பேச தடை விதிக்கப்பட்டுள்ளார் நர்கிஸ்.

122 ஆண்டுகளாக கொடுக்கப்பட்டுவரும் நோபல் பரிசுகளில் அமைதிக்கான நோபல்பரிசு பெறும் 19வது பெண் நர்கீஸ் முகமதி. ஈரானில் இருந்து பெறும் 2வது பெண்மணி. ஈரானில் ஆண்கள் யாரும் நோபல்பரிசு பெற்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Narges Mohammadi: அமைதிக்கான நோபல் பரிசு பெறும் ஈரானிய பெண் - இவரது போராட்டங்கள் என்ன?
ஈரான் : ஹிஜாபுக்கு எதிராக போராடும் 15,000 பேருக்கு மரண தண்டனையா?- உண்மை என்ன? | Fact Check

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com