மொபைல் ஃபோன்கள் தடைசெய்யப்பட்ட இடங்கள் பற்றி தெரியுமா?

அத்தியாவசியமாக இருக்கும் ஃபோனை பயன்படுத்த சில இடங்களில் தடை இருக்கிறது. அப்படி மொபைல் ஃபோன் தடை செய்யப்பட்டுள்ள இடங்கள் குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.
மொபைல் ஃபோன்கள் தடைசெய்யப்பட்ட இடங்கள் பற்றி தெரியுமா?
மொபைல் ஃபோன்கள் தடைசெய்யப்பட்ட இடங்கள் பற்றி தெரியுமா?Twitter

இன்றைய டிஜிட்டல் உலகில் ஸ்மார்ட் ஃபோன் நம்முடைய ஆறாவது விரலாக மாறியுள்ளது. பொழுதுபோக்கு, நியூஸ் சேகரிப்பு, ஆன்லைன் பேமண்ட் என பல விஷயங்களுக்கு மொபைல் ஃபோனை அன்றாடம் பயன்படுத்துகிறோம்.

இப்படி அத்தியாவசியமாக இருக்கும் ஃபோனை பயன்படுத்த சில இடங்களில் தடை இருக்கிறது. அப்படி மொபைல் ஃபோன் தடை செய்யப்பட்டுள்ள இடங்கள் குறித்து இங்கே தெரிந்துகொள்ளலாம்.

சிஸ்டைன் சேப்பல், இத்தாலி

இத்தாலியின் புகழ்பெற்ற அரண்மனையான சிஸ்டைன் சேப்பலுக்குள் உங்கள் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல முடியாது. இந்த இடம் முற்றிலும் புனிதமானதாக கருதப்படுகிறது.

இந்த அரண்மனை அழகிய சுவரோவியங்கள் மற்றும் கலைப்படைப்புகளுக்கு ஒரு எடுத்துகாட்டாக திகழ்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்கள்

தமிழ்நாட்டின் சில கோவில்களுக்குள் மொபைல் போன் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால், மதுரை மீனாட்சி அம்மன் கோவில், குருவாயூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணர் கோவில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோவில் ஆகியவற்றிற்குள் போன் எடுத்து செல்ல தடையுள்ளது

அக்ஷர்தாம் கோயில், டெல்லி

பாதுகாப்புக் காரணங்களுக்காக அக்ஷர்தாம் கோயிலுக்குள் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதியில்லை. இந்த கோவிலானது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாரம்பரியமுடைய இந்திய பண்பாட்டையும் கட்டடக்கலையின் அற்புதத்தையும் வெளிப்படுத்துகிறது.

மொபைல் ஃபோன்கள் தடைசெய்யப்பட்ட இடங்கள் பற்றி தெரியுமா?
Rajinikanth வணங்கிய 'திருவண்ணாமலை' அண்ணாமலையார் கோவில் - ஏன் இவ்வளவு பிரசித்தி?

ராம ஜென்மபூமி வளாகம், அயோத்தி

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராம ஜென்மபூமி வளாகத்தில் மொபைல் போன் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. மொபைல் போன்கள், கேமராக்கள், கைக்கடிகாரங்கள், பெல்ட்கள் மற்றும் எலெக்ட்ரானிக் கேஜெட்டுகளும் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.

யாலா தேசிய பூங்கா, இலங்கை

இலங்கையில் உள்ள இந்த புகழ்பெற்ற தேசிய பூங்கா கொழும்பிலிருந்து 300 கிலோமீட்டர் (190 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இக்காடு மொத்தமாக 979 சதுர கி.மீ (378 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டது.

2015 ஆம் ஆண்டு இந்த பூங்காவிற்குள் மொபைல் ஃபோன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது.

மொபைல் ஃபோன்கள் தடைசெய்யப்பட்ட இடங்கள் பற்றி தெரியுமா?
இலங்கை : யானை பிரியர்களுக்கு ஒரு சூப்பர் ஸ்பாட் - இங்கு அப்படி என்ன ஸ்பெஷல் | Video

உள்கோ தம்மியோ

பின்லாந்தின் உள்கோ தம்மியோ (Ulko-Tammio) என்ற தீவுக்கு செல்லும் மக்கள் போன்களை எடுத்து செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

இதன் நோக்கம் சமூக ஊடகங்களில் இருந்து ஒரு பிரேக் எடுத்து நிழல் உலகத்திலிருந்து நிஜ உலகத்தை அதன் இயல்பான அழகோடு ரசிக்க வேண்டும் என்பதே ஆகும்.

மொபைல் ஃபோன்கள் தடைசெய்யப்பட்ட இடங்கள் பற்றி தெரியுமா?
பின்லாந்து எனும் பூலோக சொர்க்கம் - உலகிலேயே மகிழ்ச்சியான நாடாக இருப்பது ஏன் தெரியுமா?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com